Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

ட்ரொட்ஸ்கிசத்தை பப்லோ நிராகரித்தல்

115. ஆனால் அந்த ஆண்டில், தன்னுடைய நிலைப்பாட்டில் பப்லோ மாறி கொண்டிருந்தார் என்பதற்கான அடையாளங்கள் தென்பட்டன. ஸ்ராலினிச வழிமுறையில் பல "நூற்றாண்டுகளான "உருக்குலைந்த தொழிலாளர் அரசுகள்" (Deformed workers states) மூலம் முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கான மாற்றம் ஏற்பட்டு வருவதாக அவர் எழுத தொடங்கினார். 1951ம் ஆண்டு நான்காம் அகிலத்தின் சர்வதேச செயற் குழுமத்தின், "போர் புரட்சி" எனும் தத்துவத்திற்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் வெடிக்கும் போர் சர்வதேசரீதியான உள்நாட்டு யுத்தத் தன்மையை பெறும் என்றும், இதில் சோவியத் அதிகாரத்துவம் சமூகப் புரட்சிகளுக்கு செவிலி தாய் போல் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படும் என்றும் அந்த தத்துவம் குறிப்பிட்டது. "எமது இயக்கத்தை பொறுத்தவரை புறநிலையான சமூக யதார்த்தம், முதலாளித்துவ ஆட்சியையும், ஸ்ராலினிச உலகத்தையும் தான் அடிப்படையாக கொண்டுள்ளது". என்று வாதிட்டு அதே ஆண்டு பப்லோ ஓர் ஆவணத்தை வெளியிட்டார்.[68]

116. வர்க்க மோதல், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்கள் மற்றும் அந்தவகையில் நான்காம் அகிலத்தின் வரலாற்று ரீதியான அவசியத்தை பப்லோவின் ஆய்வு புறக்கணித்தது. அவரைப் பொறுத்தவரையில், நடைமுறையில் இருக்கும் ஸ்ராலினிச அமைப்புகளுக்குள் ஒரு அழுத்தம் கொடுக்கும் குழுவாக செயல்படுவது தான் நான்காம் அகிலத்தின் பணியாக இருந்தது. அரைக்காலனித்துவ நாடுகள் மற்றும் குறைவளர்ச்சியுடைய நாடுகளில் முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் உள்பட அவற்றை இணைத்துக் கொள்ள, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சார்பாக கூறப்பட்ட பொய்யுரைகளை பப்லோவாதம் விரிவாக்கியது. வர்க்க ஆய்விற்கு பதிலாக, "உண்மையான மக்கள் இயக்கத்துடன் இணைதல்" குறித்து பப்லோ பேசினார். 1951 ஆகஸ்ட்-செப்டம்பரில் நடந்த நான்காம் அகிலத்தின் மூன்றாம் உலக காங்கிரஸ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட அறிக்கையில், பின்வருமாறு அறிவித்ததன் மூலம் இந்த முன்னோக்கிற்கான தீர்மானங்களை பப்லோ வரையறுத்தார்: "ஒவ்வொரு நாட்டிலும் எங்கெல்லாம் வெகுஜன இயக்கத்திற்குள் உண்மையாய் இணைத்துக்கொள்ளுதற்கு அல்லது செல்வாக்கு செலுத்தக்கூடிய இந்த இயக்கத்தின் முக்கியமான நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ளுவதற்கு, சம்பிரதாயமான சுதந்திரத்தின் அனைத்து அமைப்புரீதியான கருதிப்பார்த்தல்களையும் கீழ்ப்படுத்துகின்ற தேவையை, ஒன்றில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, சீரிய வகையில், ஆழமாகவும் ஸ்தூலமாகவும் புரிந்துகொள்ளாத, தனி ஒரு ட்ரொட்ஸ்கிச இயக்கம் இப்பொழுது இங்கு கிடையாது".

117. பப்லோவாதத்தின் தத்துவார்த்த அடித்தளம் உலகப் புரட்சியின் அபிவிருத்தியில் கட்சியின் [பாத்திரம் சம்பந்தமாக மார்க்சிச இயக்கம் பிரதானமாக வலியுறுத்தியதை மறுதலிக்கும் ஒரு புறநிலைவாத வழிமுறையாகும். பின்னர் அளிக்கப்பட்ட விளக்கத்தின்படி:

புறநிலைவாத நிலைப்பாடானது, ஒரு புரட்சிகர நடைமுறை செயல் என்பதை விட சிந்தனைக்குரியதாக உள்ளது, போராடுவதை விட அவதானிப்பதாக உள்ளது என்ன செய்ய வேண்டும் என்று விளக்குவதை விட என்ன நடக்கிறது என்பதை அது நியாயப்படுத்துகிறது. அதிகாரத்தை கைப்பற்றவும் மற்றும் வரலாற்று போக்கை மாற்றி அமைக்கவும், ஒரு கட்சியின் நடைமுறை செயல்பாடுகளுக்கு வழிகாட்டும் கொள்கைவழியாக இனியும் ட்ரொட்ஸ்கிசம் இருக்க முடியாது, மாறாக இறுதியில் நான்காம் அகிலத்திற்கு விரோதமான பாட்டாளிகள் அல்லாத சக்திகளின் தலைமையின் கீழ் சோசலிசம் அடையப்படும், ஒரு வரலாற்று நிகழ்வுப்போக்கின் ஒரு பொதுவான கருத்து விளக்கமாக, ஒரு முன்னோக்கிற்கு இந்த முறையானது தத்துவார்த்த அடித்தளத்தை அளித்தது. நிகழ்வுகளின் போக்கில், ட்ரொட்ஸ்கிசத்திற்கு நேரடி பங்குண்டு என்று பெருமைப்படுத்தப்படும் வரை, அது ஸ்ராலினிஸ்டுக்கள், புதிய ஸ்ராலினிஸ்டுக்கள், அரைகுறை ஸ்ராலினிஸ்டுகள், மேலும் ஏதேனும் ஒருவிதத்தில் குட்டி-முதலாளித்துவ தேசியவாதிகளாக இருப்பவர்களை நனவின்றி வழிநடத்தும் ஒருவகையான வெறும் மூளைத் திட்டமாகத்தான் இருந்தது. நடைமுறை செயற்பாடு போராடுவதைக்காட்டிலும் அவதானித்தல்; அது எது கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்பதை விளக்குவதை என்ன நிகழ்கிறது என்பதை நியாயப்படுத்துகிறது.

இவ்விதத்தில் பப்லோவாதம், தவறான மதிப்பீடுகள், தவறான முன்கணிப்புக்கள் மற்றும் வேலைத்திட்ட ரீதியான திருத்தல்கள் ஆகியவற்றிற்கு மிகவும் அப்பால் சென்றது. விஞ்ஞான சோலிசத்தின் முழு அடித்தளத்தையும் தாக்கிய அது, வர்க்க போராட்டத்தின் அபிவிருத்தியிலிருந்து ஒரு நூற்றாண்டு முழுவதும் மார்க்சிசவாதிகள் உள்ளீர்த்திருந்த மைய படிப்பினைகள் அனைத்தையும் நிராகரித்தது. பாட்டாளிகளின் போராட்டத்தில் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வரலாற்று ரீதியாக அடைதலில் நனவான கூற்றின் தேவையை பப்லோ கேள்விக்குறியாக்கியபோது இருபதாம் நூற்றாண்டின் மார்க்சிச தத்துவத்தின் மிகப் பெரிய வெற்றியான கட்சி பற்றிய லெனினிச கருத்துரு குறைமதிப்பிற்கு உட்பட்டது. பப்லோ மற்றும் அவரை பின்பற்றுபவர்களை பொறுத்தவரையில், தொழிலாள வர்க்கத்தை தத்துவார்த்த ரீதியாக பயிற்றுவிக்கும் தேவை ஏதும் கிடையாது மற்றும் அதன் வரலாற்றுப் பணிக்கு அதனை நனவாக்குதல் தேவையற்றது; தொழிலாள வர்க்கத்தின் தன்னெழுச்சியான இயக்கத்தின் மீதாக முதலாளித்துவ வர்க்க சித்தாந்தத்தின் மேலாதிக்கத்திற்கெதிராக மார்க்சிசத்திற்கான ஒரு போராட்டத்தை தொடுப்பது தேவையற்றதாக இருந்தது.

ஸ்ராலினிசத்துடன் இயைந்து போதல் புதிய பப்லோவாத கண்ணோட்டத்தின் மைய கூறுபாடாகும். ஆனால் இதை அதன் அடிப்படை பண்பு என்று காண்பது தவறாகிவிடும். பப்லோவாதம் அடிமுழுவதும் கலைப்புவாதமாகத்தான் இருந்தது (இருக்கிறது); அதாவது சோலிச புரட்சியில் பாட்டாளிகளின் மேலாதிக்கத்தையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தின் நனவு பூர்வமான தெளிவான உச்சரிப்பாக நான்காம் அகிலத்தின் உண்மையான சுயாதீனமான இருப்பையும் நிராகரிப்பதாகும்...

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நடைமுறைச் செயல்பாடு, பாட்டாளி வர்க்கத்திற்கு கல்வியூட்டுவதை நோக்கி பிரதானமாய் வழிநடத்தப்படுவதாய், அதன் வரலாற்று கடமைகள் குறித்து அதனை நனவாக்குதல், ஏனைய அனைத்து வர்க்க சக்திகளில் இருந்தும் நிபந்தனையற்ற அதன் வேலைத்திட்ட ரீதியான மற்றும் அமைப்பு ரீதியான சுதந்திரத்தை நிறுவுதல் இனியும் இல்லை.

அதேபோல் இந்த நடவடிக்கை, உற்பத்தி மற்றும் வர்க்க சக்திகளின் சமூக உறவுகளுக்கான ஒரு விஞ்ஞானபூர்வ ஆய்வின் அடிப்படையிலும் இல்லை, பாட்டாளிகளின் தனிச்சிறப்பான புரட்சிகர பாத்திரத்தில் வரலாற்று அடிப்படையிலான நம்பிக்கையின் மீதும் அமைக்கப்பட்டவில்லை. மாறாக, வேலையானது தந்திரோபாய உசிதத்தின் ஒரு சிறு மாற்றமாக குறைக்கப்பட இருந்தது, அதில் தசாப்தகால போராட்டத்தில் நிலைநாட்டப்பட்ட கோட்பாட்டு ரீதியான நிலைப்பாடுகள் நிலவும் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தேசியவாத அமைப்புகளின் தலைவர்களிடம் செல்வாக்கு செலுத்தல் மற்றும் அவர்களை இடதுபுறம் தள்ளுதல் என்ற வீணான நம்பிக்கையில் சரணாகதி செய்யப்படவிருந்தது.[69]

118. இந்த முன்னோக்கில் செயல்பட்ட பப்லோ, மண்டேலின் ஆதரவுடன், "இணையற்ற உட்புகுதல் வாதம்" (Entrism Sui Genaris) என்று அவர்கள் அழைக்கும் ஓர் தந்திரோபாயத்தின்படி, முழு தேசிய பகுதிகளும் சுயாதீன அமைப்புக்களாக தங்களைத் தாங்களே கலைத்துக்கொள்ளுமாறு நிர்பந்திக்கவும், மற்றும் ஸ்ராலினிச கட்சிகளின் அணிகளுள் நுழையுமாறு அனைத்து தேசிய பகுதிகளையும் கட்டாயப்படுத்தவும் நான்காம் அகிலத்தின் சர்வதேச செயலாளர் என்ற அவரின் பதவியை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் பகுதிகளை உருவாக்குவதில் இருந்த கவனத்தில் பிழை இருந்ததாக திருத்தல்வாதிகள் தீர்மானித்தார்கள். இன்றைய எண்ணற்ற சந்தர்ப்பவாத போக்குகள் உட்பட பலமுறை மீண்டும் மீண்டும் நடந்த ஒரு பேரழிவுமிக்க முன்னோக்கிற்கான ஒரு குறியீடாக அது உருவானது. புரட்சிகர கட்சிகளை உருவாக்குவது சாத்தியமல்ல என்று தீர்மானித்த அவர்கள், வரலாறு, வேலைத்திட்டம் மற்றும் வர்க்க அடிப்படையை பொருட்படுத்தாமல் ஏதாவதொரு குறிப்பிட்ட காலத்தில் முன்னணி வெகுஜன அமைப்புக்களாக மாறும் பிற சக்திகளை நோக்கிப் பார்ப்பது அவசியம் என்று முடிவுரைத்தனர்.

119. பப்லோவாத போக்கு அமெரிக்காவில் பேர்ட் கொக்ரானால் வழி நடத்தப்பட்டது. அது ஆரம்பத்தில், தொழிலாள வர்க்கத்தின் மீது கம்யூனிச எதிர்ப்பு அழுத்தங்களை பிரதிபலித்த மற்றும் தங்களின் வாழ்க்கை தரத்தின் உயர்விற்கு பலன் அளித்த, பாரிய பழமைவாத தொழிலாளர்கள் அடுக்கின் வளர்ச்சியை பிரதிபலித்த, SWP க்குள் இருந்த தொழிற்சங்கவாதிகளின் ஒரு பிரிவினரிடமிருந்து பிரதானமாக ஆதரவைப் பெற்றது. இந்த கொக்கிரான்வாதிகள், ட்ரொட்ஸ்கிசம் மற்றும் ஸ்ராலினிசம் இவற்றிற்கிடையிலான பிளவு பற்றிய எந்த விவாதமும் கைவிடப்பட வேண்டும் என்று விரும்பினார்கள்; "பழைய ட்ரொட்ஸ்கிசத்தை தூக்கி எறி" என்ற இழிவான கோஷத்தில் இது வெளிப்பட்டது. சோசலிச நனவென்பது வரலாற்று நனவு என்ற அடிப்படைக் கொள்கையை எதிர்த்த கொக்ரான் 1951 இல் பின்வருமாறு எழுதினார்: "உடனடியான மற்றும் மிக நேரடியான அறிவில் ட்ரொட்ஸ்கி ஓர் ஆசிரியராக மற்றும் நமது இயக்கத்தின் தலைவராக இருந்த போதிலும் இந்த இரண்டு அடைமொழிகளில் இருந்து மட்டும் அவரை முழுமையாக பின்பற்ற முடியாது, தற்போது வரலாற்றில் மதிப்பிழந்துள்ள ஸ்ராலின்- ட்ரொட்ஸ்கி சண்டையில் சரி எது, தவறு எது என்பதில் தொழிலாளர்களை குழப்பமடையாமல் செய்ய முயல்வதன் மூலம் அவர்களை எமது பதாகையின் கீழ் அணிதிரட்டுவதில் நமக்கு நிறைய வெற்றி கிடைக்கும்..." உண்மையில், வரலாற்றை மறக்க செய்வதற்கான இந்த அழைப்பு, அந்த வரலாற்றில் இடம் பெற்றுள்ள முன்னோக்குகள் மற்றும் கோட்பாடுகளை புறக்கணிக்கிறது. பெரும்பாலான கொக்கிரான்வாதிகள், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் ஜனநாயக கட்சிக்குள் தங்களின் வழியை தேர்ந்தெடுப்பதன் மூலம் இறுதியில் தங்களின் கலைப்புவாத முன்னோக்கை அதன் தர்க்கரீதியான முடிவிற்கு எடுத்துச்செல்வார்கள்.


[68]

Ibid, p. 185.

[69]

Heritage 188-91