Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றம்

111. முதலாளித்துவ வளர்ச்சியின் ஒட்டுமொத்த மீள்ஸ்திரத்தன்மை யுத்தத்திற்கு பிந்தைய சமூக போராட்டங்களில் அவற்றின் முரண்பாடான தன்மையை எடுத்துக்காட்டின. யுத்தத்தின் முடிவு, முன்னேறிய நாடுகளில் வர்க்க போராட்டங்களின் எழுச்சியையும், காலனித்துவ நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தையும் அதனுடன் கொண்டு வந்தது. எவ்வாறிருப்பினும், பொருளாதார மீள்ஸ்திரப்படுத்தல் "முதலாளித்துவ தேசிய இயக்கங்கள், ஸ்ராலினிஸ்டுகள், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும் இந்த போராட்டங்களை வழிநடத்தி வந்த பல குட்டி முதலாளித்துவ போக்குகள் செயல்படும் துறைகளை பரந்த அளவில் விரிவாக்கியது. இந்த இயக்கங்கள் மற்றும் அமைப்புக்களின் புறநிலை செயற்பாடானது, சர்வதேச முதலாளித்துவ அமைப்பு முறையை தக்கவைக்க ஏதேனும் ஒருவடிவத்தில் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்த பகுதிகளுக்குள்ளே ஓர் அடித்தள ஆதரவை அளிப்பதாய் இருந்தது. தேசிய சீர்திருத்தக் கொள்கைகள் மூலம் நிரந்தர ஆதாயங்கள் அடைய முடியும் என்ற போலி கருத்திற்கு அவை ஊக்கமளித்தன, அது யுத்தத்தை தொடர்ந்து ஒரு புதிய வாழ்வுக்கான வாய்ப்பை அளித்திருந்தது.

112. யுத்தத்திற்கு பிந்தைய காலத்தின் சிக்கல் வாய்ந்த நிலைமைகள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ அமைப்புக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட ஒரு திருத்தல்வாத போக்கின் வடிவத்தில் ஆழ்ந்த வெளிப்பாட்டை கண்டது. திருத்தல்வாதிகள், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதில் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக போக்குகளையும் மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாதிகளையும் மற்றும் தீவிரவாத இயக்கங்களையும் அரசியல் ரீதியான தடைகளாக கருதவில்லை, ஆனால் அதற்கு மாறாக சோசலிசத்தை அடைவதற்கான மாற்று கருவிகளாக அவற்றை கண்டார்கள். எனவே நான்காம் அகிலத்தின் ஒரு சுயாதீன முன்னோக்காக இந்த அமைப்புகளை எதிர்ப்பதை ஒரு விஷயமாகக் கொள்ளாமல், மாறாக நடைமுறையில் இருக்கும் தொழிலாள வர்க்க தலைமைகளுக்கும், தேசிய இயக்கங்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் குழுவாக நான்காம் அகிலத்தை உருமாற்றுவதை கொண்டருந்தது. திருத்தல்வாதிகள் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் முதலாளித்துவ தேசியவாதிகளின் நான்காம் அகிலத்திற்கு அடிப்படை எதிரிடையான முன்னோக்கு பற்றிய ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலை நிராகரித்து, மாறாக நிலவும் தொழிலாள வர்க்க மற்றும் தேசிய இயக்க தலைமைகளுக்கு, அழுத்தம் கொடுக்கும் குழுவாக நான்காம் அகிலத்தை மாற்ற ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாதிகளிடம் வரலாற்றுரீதியான முற்போக்கு பங்களிப்பை விட்டு சென்றார்கள். ஐரோப்பாவில் போருக்குப் பிந்தைய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்த இரண்டு முன்னணி பிரமுகர்களான மிசேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் இதை தொடங்கி வைத்தனர்.

113. கிழக்கு ஐரோப்பாவில் இருந்த அரசியல் மாற்றங்களுக்கான ஓர் பதிவு வாத (Impressionistic) பிரதிபலிப்பாக பப்லோவின் திருத்தல்வாதங்கள் உருவாயின. ஸ்ராலினிச ஆதிக்கத்திற்குட்பட்ட ஆட்சிகள் நிறுவப்பட்டதற்கான நான்காம் அகிலத்தின் ஆரம்ப பிரதிபலிப்பு ட்ரொட்ஸ்கிச கருத்துக்களை அடிப்படையாக கொண்டிருந்தன. ஸ்ராலினிஸ்ட்டுக்களின் அரசியல் "வெற்றிகள்" ஒருபுறம் இருந்தாலும், நான்காம் அகிலம் அவற்றின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை வலியுறுத்தியது. 1946 இல் அது குறிப்பிட்டதாவது:

பேச்சில் கூறமுடியாத அளவு துரோகங்கள், மக்கள் எழுச்சியை அவர்கள் நசுக்கியது, அவர்களின் எதிர்ப்புரட்சிகர பயங்கரம், அவர்களுடைய அபகரித்தல்கள் மற்றும் கொள்ளைகள் --இவையனைத்தும் உழைப்போர்களிடையே கம்யூனிசமெனும் கருத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தின. தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஸ்ராலினிச குற்றங்களின் மீதாக ஸ்ராலினிச எதிர்ப்புரட்சிகர சாகசங்களின் கிழக்கு ஐரோப்பிய தேசியமயமாக்கல்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன? கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச எதிர்புரட்சிகர சாகசங்கள், வரலாற்றில் ஒரு முற்போக்கான பணி என்ற சிறப்பை அதற்கு அளிப்பதற்கு பதிலாக, அந்த இரத்தம் குடிக்கும் அரக்கனை நசுக்குவதற்கான தேவையையும் மற்றும் ஏற்கனவே உலகத் தொழிலாள வர்க்கத்திற்கும், அதன் விடுதலைக்குமான போராட்டத்திற்கும் செய்திருந்த பாதிப்புக்கு மேற்பட்டு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் தடுப்பதற்கான தேவையையும் மிகவும் அவசரமாக்கி இருந்தது. ஸ்ராலினிசத்தின் குருட்டுத்தன்மை, அதன் மிக இழிந்த பிற்போக்குத் தன்மை, அதன் வரலாற்று ரீதியான திவால்நிலை எல்லாவற்றிற்கும் மேலாக கிழக்கு ஐரோப்பாவில் தெளிவாக அம்பலமாகியுள்ளன. ஒரு அற்பமான கொள்ளைக்காக, நஷ்ட ஈடுகளில் சிறு மாற்றத்திற்காக- அதுவும் சோவியத்தின் பொருளாதாரத் தேவைகளை தீர்ப்பதில் முற்றிலும் பொருளற்றவையாக இருக்கும் என்ற நிலையில், கிழக்கு ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் தன்னை சுற்றி வெறுப்பு சுவர் ஒன்றை கிரெம்ளின் எழுப்பிவிட்டுள்ளது. வறுமை தோய்ந்த, திவாலான பால்கன் பகுதிகள் மீது இராணுவ கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்காக, ஆங்கிலோ-அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் புரட்சியை நசுக்கவும் மற்றும் சீரழிந்த முதலாளித்துவத்தை முட்டுக் கொடுத்து நிறுத்தவும் கிரெம்ளின் உதவியுள்ளது.[66]

114. ஏப்ரல் 1949 இல், நான்காம் அகிலத்தின் சர்வதேச செயற் குழுமம் (International Executive Committee of the Fourth International) எழுதியது: ஸ்ராலினிசம் பற்றிய ஒரு மதிப்பீடானது அதன் கொள்கைகள் ஒரு எல்லைக்குள் உண்டுபண்ணிய விளைபயன்களின் அடிப்படையில் செய்ய முடியாது. ஆனால் உலக அளவில் அதன் நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் இன்றும்கூட முதலாளித்துவம் இற்றுப்போன நிலைமையில் இருப்பதையும், 1943-45-ம் ஆண்டுகளின் ஸ்தூல நிலைமைகளை ஆழ்ந்து ஆராயும் பொழுதும் உலக அளவில் ஐரோப்பாவில் மற்றும் ஆசியாவில் திடீரென ஏககாலத்தில் முதலாளித்துவ முறையின் தகர்வைத் தடுத்ததில் ஸ்ராலினிசம்தான் தீர்க்கமான காரணக் கூறாக இருந்தது என்பது பற்றி எந்தவித ஐயப்பாடும் இருக்க முடியாது. இந்த அர்த்தத்தில் இடைத்தடை வளையத்தில் அதிகாரத்துவம் அடைந்த ''வெற்றி'' யானது அதிக பட்சம் உலக அரங்கில் அதிகாரத்துவம் ஆற்றிய சேவைக்கு ஏகாதிபத்தியம் செலுத்திய விலையாகும். இருந்தபோதும் இந்த விலை ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ச்சியாகக் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்துடன் இடைத்தடை வளையத்தை தன்னியலாக்கிய அர்த்தத்தில் சோவியத் அதிகாரத்துவம் அடைந்த சீர்திருத்தங்கள் உலகக் கண்ணோட்டத்திலிருந்து எடைபோடப்படும் பொழுது ஒப்பிட முடியாத முறையில் சோவியத் அதிகாரத்துவம் தொடுத்த தாக்குதல்களிலும் பார்க்கக் குறைவாக, குறிப்பாக இடைத்தடை வளையத்தில் அது நடத்தும் நடவடிக்கைகள் மற்றும் அதன் முழு அரசியல் என்பனமூலம் உலக பாட்டாளி வர்க்கத்தின் நனவுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுக்கின்றது. அது பாட்டாளி வர்க்கத்தின் மன உரத்தைக் குலைக்கின்றது, திசை தெரியாது குழப்பி விடுகின்றது. இவை மூலம் அது பாட்டாளி வர்க்கத்தை ஏகாதிபத்தியத்தின் யுத்த தயாரிப்புப் பிரச்சாரத்தினால் குறிப்பிட்ட மட்டத்திற்கு எளிதில் பாதிக்கப்படக் கூடிய அளவில் தாக்குகின்றது. சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் நோக்கு நிலையில் இருந்தே, இடைத்தடை வளையத்தைத் திடப்படுத்தல் ஒரு வலிமையூட்டலாக இருப்பதிலும் பார்க்க ஸ்ராலினிசத்தால் உலகப் பாட்டாளி வர்க்கத்தின்மேல் கொண்டுவரப்பட்ட தோல்விகள் மற்றும் மன சோர்வு என்பன ஒப்பிட முடியாத அளவு அபாயகரமானதாக உள்ளன.[67]


[66]

Fourth International, November 1946, p. 345.

[67]

Second World Congress of the Fourth International, “Struggles of the Colonial Peoples and the World Revolution,” Fourth International, July 1948, p. 157.