Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

நெருக்கடியில் ஸ்ராலினிசம்

124. நான்காம் அகிலத்திற்குள் உள்ளேயான போராட்டம் உலக நிலைமையில் மாற்றங்களை எதிர்பார்த்தது மற்றும் பிரதிபலித்தது. பிளவு நடந்து கொண்டிருந்த போதும் கூட, கிரெம்ளின் ஆட்சி நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்தது. கிழக்கு ஐரோப்பாவில் இரத்தம் தோய்ந்த களையெடுப்புக்களும் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் யூத மருத்துவர்கள் இழிந்த முறையில் கைது செய்தது அனைத்தும், ஸ்ராலினது சாகாக்களுக்குள்ளே கூட, சர்வாதிகாரியின் சீற்றம் மிக்க சித்தப்பிரமையானது போருக்குப் பிந்தைய சோவியத் சமூகத்தின் ஆழ்ந்த நெருக்கடிக்கு பதில்கொடுக்கும் எந்த ஒத்திசைவான கொள்கையையும் தடுத்தது என்பதை அனைவருக்கும் மிக தெளிவாக எடுத்து காட்டியது. ஏதோவொரு இருண்ட சூழலின் கீழ், 1953 மார்ச்சில் ஸ்ராலினின் திடீர் மரணம் கொள்கையில் ஒரு மாற்றம் செய்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கியது. அரசியல் குழுவிற்குள் ஏற்பட்ட ஒரு சிறிய கன்னைவாத மோதலுக்கு பின்னர், ஸ்ராலினின் இரகசிய போலீஸ் தலைவர் லாவரென்டி பெரீயா பதவியில் இருந்து நீக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். போல்ஷிவிக் கட்சியின் புரட்சிகர காரியாளர்களை ஸ்ராலின் அழித்ததுடன் அதிகாரத்திற்கு வந்த அந்த அதிகாரத்துவம், இந்த செயலுடன், முன்பு எப்போதுமில்லாத கொடூரமான கொலைகள், கைதுகள் மற்றும் தூக்கிலிடுவது என்ற ஆபத்து இல்லாமல் சலுகைகளை அனுபவிப்பதற்கான அதன் விருப்பத்தை வெளிக்காட்டியது. ஆனால் அதன் சலுகைகள் மீதான அதிகாரத்துவத்தின் பிடிப்பு, சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்குள் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்துவரும் அதிருப்தியில் இருந்து ஒரு பெரும் சவாலை எதிர்கொண்டது. ஜூன் 1953 இல், ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிராக திரண்டெழுந்த கிழக்கு ஜேர்மன் தொழிலாளர்கள், சோவியத் இராணுவத்தினால் நசுக்கப்பட்டனர். பெப்ரவரி 1956 இல், கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாம் காங்கிரஸில் தன்னுடைய "இரகசிய உரையை" வெளியிட்ட குருஷ்சேவ், இதில் ஸ்ராலினின் சில குற்றங்களை பகிரங்கமாக கண்டித்தார், ஆனால் ட்ரொட்ஸ்கிச இடது எதிர்ப்பு தலைவர்களையும் மற்றும் மாஸ்கோ விசாரணைகளில் மரணதண்டனை பெற்றவர்களையும் அவர் தமது பழிவாங்கப்பட்டோர்களின் பட்டியலில் இருந்து வேண்டுமென்றே நீக்கி இருந்தார். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தலைவர் என்ற முறையில் குருஷ்சேவ் ஸ்ராலினின் குற்றங்களின் மூலத்தைப் பற்றி விளக்கம் அளிக்கவில்லை என்பதுடன் எளிமையாக ஒரு மன்னிப்பை மட்டும் கோரினார்: அதிகாரத்தில் இருந்த ஸ்ராலினின் எடுபிடிகள் மற்றும் சோவியத் மக்கள் அனைவரும் "தனிநபர் வழிபாட்டின்" பிடியில் இருந்தனர். அதே ஆண்டு, ஓர் அரசியல் புரட்சியின் தொடக்க வடிவமாக தொழிலாளர் கவுன்சில்களை அமைத்ததன் மூலம் ஹங்கேரிய தொழிலாள வர்க்கம் எழுச்சி பெற்றது. குருஷ்சேவ் சோவியத் டாங்குகளை புடாபெஸ்டிற்குள் அனுப்ப, அந்த வளர்ச்சி கொடூரமாக ஒடுக்கப்பட்டது. அந்த நடவடிக்கை மீண்டுமொரு முறை ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சி தன்மையை முழுவதுமாக வெளிக்காட்டியது. தொழிலாள வர்க்கத்தின் எந்த புரட்சிகர இயக்கத்திற்கும் ஸ்ராலினிசத்தின் இந்த இரக்கங்காட்டாத எதிர்ப்பு, ஸ்ராலினே இறந்ததால் கூட மாற்றப்படவில்லை.

125. ஸ்ராலினிசத்தின் நெருக்கடி முக்கியமான அரசியல் பிரச்சனைகளுக்கு ஒரு தெளிவை அளிப்பதற்கான சாத்தியக்கூற்றை வளங்கியிருந்தது. பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள், ஜெரி ஹீலியின் தலைமையில், ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் அடித்தளத்தில் இருந்த பெரும் அரசியல் பிரச்சினைகளுடன் பிடியை இறுக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். இது, ஒவ்வொரு ஸ்ராலினிச அரசியல் சூழ்ச்சிக்கையாளலையும், அதிகாரத்துவத்தின் முற்போக்கான "சுய-சீர்திருத்தத்தின்" சான்றாக மொழிபெயர்த்த பப்லோவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை ஆழமாக்குவதற்கான தேவையை தவிர்க்க முடியாமல் செய்தது. எவ்வாறிருப்பினும், துல்லியமாக இந்த கட்டத்தில் தான், 1953-54ல் கனன் கடுமையாக வாதிட்டிருந்தது போல, SWP தலைவர்கள் பப்லோவாதத்தின் மீதான சமரசத்திற்கு இடமில்லாத எதிர்ப்பிலிருந்து பின்வாங்கத் தொடங்கினர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கும், பப்லோவாத செயலகத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் கடந்து வந்த ஆண்டுகளில் குறைந்துவிட்டிருக்கிறது என்ற போலியான அடித்தளத்தில், 1957 இன் போது, கனன் பப்லோவாதிகளுடனான மறு ஐக்கியத்தின் சாத்தியக்கூறில் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். பப்லோவாதிகள் மீதான SWP இன் நிலைப்பாட்டில் ஏற்பட்ட இந்த மாற்றம், அதன் பொதுவான அரசியல் பாதையில் ஏற்பட்ட ஓர் உறுதியான வலதுசாரி மாற்றத்தை பிரதிபலித்தது. 1950களின் இறுதியில், பல்வேறு தீவிர போக்குகளின் "மறு குழுவாக்கத்தில்" பங்கு பெறுவதற்கான தனது ஆர்வத்தை SWP வெளிப்படுத்தியது. பப்லோவாதிகளை நோக்கிய திருப்பமானது, அதன் பாரம்பரிய "பாட்டாளி வர்க்க நோக்குநிலையில் இருந்து விலகி குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் தீவிரப் பகுதியினரின் அரசியல் பிரதிநிதிகளுடனான கூட்டணியை நோக்கி SWP இன் வர்க்க அச்சில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை வெளிப்படுத்தியது.