Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

ஒரு மோசடித் "தீர்ப்பு": பப்லோவாதிகள் ஸ்ராலினிச குற்றங்களை மூடிமறைப்பதற்கு ஒப்புதலளிக்கிறார்கள்

167. ICFIஆல் வெளிக்கொணரப்பட்ட ஆதாரங்களுக்குப் பின்னரும் கூட, அனைத்து சந்தர்ப்பவாத மற்றும் பப்லோவாத அமைப்புகளும் பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலத்தின் விசாரணையை எதிர்த்தன. செப்டம்பர் 1976ல் ஏறக்குறைய பப்லோவாத இயக்கத்தின் ஒரு முன்னணி நபரும் 'பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலத்தை' ஒரு 'வெட்கமற்ற சதித் திட்டம்" என்று கண்டிக்கும் "தீர்ப்பு" என்பதான அறிக்கையை வெளியிட்டனர். பின்னர், "தீர்ப்பு" வெளியீட்டிற்கு பொறுப்பான SWP அதிகாரிகளின் பிரமாண வாக்குமூலங்கள் ஹெல்ஃபானினால் எடுக்கப்பட்டபோது, அறிக்கையில் கையொப்பமிட்ட ஒருவர் கூட "பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம்" மீதான கண்டனத்தில் தங்களது பெயரை பொதிப்பதற்கு முன்னதாக ICFI ஆல் சேகரிக்கப்பட்ட எந்தவொரு ஆதாரத்தையும் ஆய்வு செய்திருக்கவில்லை என்பது ஸ்தாபிக்கப்பட்டது. ஆதாரங்களை ஆராய்வதற்கு ஒரு முறையான விசாரணைக் கமிஷனை ஸ்தாபிக்க வேண்டும் என்று அனைத்துலக குழுவால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான அழைப்புகள் பதிலளிக்கப்படாமலேயே விடப்பட்டது. அரசியல் நலன்கள் பப்லோவாதிகளின் பதிலிறுப்பில் ஒரு தீர்மானமான பங்கினை ஆற்றின. ட்ரொட்ஸ்கி படுகொலை குறித்த விஷயத்தை மறுபார்வை செய்வதிலோ அல்லது தொழிலாளர்களின் புதியதொரு தலைமுறையின் கவனத்துக்கு ஸ்ராலினிச குற்றங்களின் வரலாற்றை கொண்டு வருவதிலோ அவர்களுக்கு ஆர்வமில்லை. அதேபோல் 1982ம் ஆண்டில் GPU கொலைகாரரான மார்க் ஸ்போரோவ்ஸ்கி சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் ஊடுருவியது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க நீதிமன்றத்தில் ஆஜராக ஹெல்ஃபான்ட் பெற்றிருந்த உத்தரவை தடை செய்வதற்கு ஸ்போரோவ்ஸ்கிக்கு ஆதரவாக SWP நீதிமன்றத்துக்கு சென்ற போதும் அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. சான் பிரான்சிஸ்கோவில் வசதியான ஓய்வில் வாழ்ந்த ஸ்போரோவ்ஸ்கி இந்த உத்தரவை, SWP க்குள் இருக்கும் ஏஜென்டுகளை அம்பலப்படுத்த பங்களிக்கும் சாட்சியமானது சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட உளவுபார்ப்போரின் அடையாளத்தை பாதுகாக்கும் சட்டத்தை (Intelligence Indentities Protection Act) மீறுவதாகும், என்கிற அடிப்படையில் எதிர்த்து வாதாடினார். அவரது முறையீட்டை நீதிமன்றம் உறுதி செய்தது.

168. 'பாதுகாப்பு மற்றும் நான்காம் அகில' விசாரணை முடிந்து கால் நூற்றாண்டு காலத்தில், அதன் பல முடிவுகளும் அதிகாரபூர்வ சோவியத் ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சோவியத் உளவுத்துறை மூலங்களில் இருந்து இரகசியக் குறியீடு நீக்கம் செய்யப்பட்ட கோப்புகளான இந்த "Venona Papers" ஸ்ராலினிச ஏஜன்டாக தீர்மானமாக அடையாளம் காட்டியது கால்ட்வெல்லை மட்டும் அல்ல, மெக்சிகோவுக்கு ஒரு காவலாளியாக பணியாற்ற சென்ற ஒரு SWP உறுப்பினரான ரொபேர்ட் ஷெல்டனையும் தான். ஆரம்பத்தில் ஹார்டேயை குற்றம்சாட்டி ICFI தகவல் வெளியிட்டபோது, இதுவும் அவதூறு என SWP மற்றும் பப்லோவாதிகளால் கண்டிக்கப்பட்டது. ICFI ஆல் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுகளின் நிரூபணமானது எந்த ஒரு பப்லோவாத அமைப்பினையும் அவர்கள் 'பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம்' மீது செய்த கண்டனத்தை திரும்பப் பெறச் செய்யவில்லை.

169. பாதுகாப்பு விசாரணையின் ஒரு விளைவுப் பொருளாக மற்றுமொரு விந்தையான உண்மைகளின் தொகுப்பு ஒன்று வெளிவந்தது. சோசலிச தொழிலாளர் கட்சியின் அதன் அரசியல் குழுவின் பெரும்பான்மையினர் உள்ளிட்ட ஏறக்குறைய ஒட்டுமொத்த தலைமையுமே மிட்வெஸ்டில் இருக்கும் ஒரு சிறு லிபரல் கலைப் பள்ளியான கார்லெட்டன் கல்லூரியில் (Venona Papers) பயிற்சி பெற்றிருந்தனர். 1960 முதல் 1964 வரையான காலத்தில், ஜக் பார்ன்ஸ் உள்ளிட்ட அதன் பல மாணவர்கள் கட்சிக்குள் நுழைந்து துரிதமாக அதன் தலைவர்கள் நிலைக்கு உயர்த்தப்பட்ட காலத்தில், கார்லெட்டன் வளாகத்தில் SWP எந்த அமைப்புரீதியான பணியையும் நடத்தியிருக்கவில்லை. பழமைவாத மிட்வெஸ்ட் மாணவர்கள் (ஜக் பேர்ன்ஸ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவராக இருந்தார்) ஒரு புரட்சிகர தோற்றம் கொண்ட அமைப்பின் தலைவர்களாக மாறுவதற்கான ஊடகமாக Fair Play For Cuba Committee எனும் FBI ஏஜென்டுகளால் ஆட்டி வைக்கப்பட்ட மற்றும் ஊடுருவப்பட்ட ஒரு அமைப்பு இருந்தது. கார்லெட்டன் கல்லூரி நிகழ்வு குறித்து எந்த நம்பகமான விளக்கமும் SWP தலைமையால் வழங்கப்படவில்லை.

170. அனைத்துலக குழுவின் விசாரணையானது முன்னெப்போதையும் விட அதிகமாக ஹான்சனை ஒரு ஏஜன்ட் என நிரூபிப்பதற்கான ஆதாரங்களை வெளிக்கொணர்ந்ததால், SWP மற்றும் பப்லோவாதிகளின் எதிர்ப்பிரச்சாரமானது மிகவும் அதிகரித்த ஆத்திரமூட்டும் தன்மையை பெற்றது. ஜனவரி 14, 1977ம் ஆண்டு, பப்லோவாதிகள் லண்டனில் தங்களது ஆதரவாளர்களின் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள், பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம், குறிப்பாக, ஜெரி ஹீலிக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு. கூட்டத்தில் உரையாற்றியவர்களில் ஏர்னஸ்ட் மன்டேல், தாரிக் அலி (பிரிட்டிஷ் பப்லோவாத அமைப்பின் தலைவர்), பியர் லம்பேர்ட் (OCI இன் தலைவர்) மற்றும் ரிம் வொல்போர்த் ஆகியோர் இருந்தார்கள். விசாரணையில் வெளிவந்திருக்கும் ஆதாரங்களை ஆராய்வதற்கு ICFI மற்றும் ஐக்கிய செயலகத்தில் இருந்து சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் அடங்கிய ஒரு இணைக் கமிஷனை ஸ்தாபிப்பதற்கான அழைப்பு விடுத்து, கூட்டத்திற்கு முன்னதாக, தொழிலாளர் புரட்சிக் கட்சி பப்லோவாத அமைப்புகளின் தலைவர்களின் முகவரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. ஜனவரி 14 கூட்டத்தில் இந்த கடிதம் பதிலளிக்கப்படவுமில்லை, ஏற்றுக் கொள்ளப்படவுமில்லை. மாறாக, இந்த கூட்டம் ஹீலி மீதான கடுமையான கண்டனங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பார்வையாளர்கள் தரப்பில் இருந்து ஹீலி எழுந்து இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்க வாய்ப்பு கோரியபோது, பப்லோவாத அமைப்பாளர்களால் இது மறுக்கப்பட்டது.

171. பப்லோவாதிகள் ஒத்துழைக்க மறுத்தாலும், விசாரணை தொடர்ந்தது. மே 1977ம் ஆண்டு, சிக்காகோவுக்கு வெளியே ஒரு புறநகர்ப் பகுதியில் சில்வியா கால்டுவெல் ஒரு நிரந்தர முகவரியின்றி ஒரு டிரெய்லர் பார்க்கில் வசித்து வந்ததை ICFI கண்டுபிடித்தது. SWP ஐ விட்டு வெளியேறிய பின்னர் மறுதிருமணம் செய்து கொண்டுள்ளார் (அவரது முதல் கணவர், ஸ்ராலினிச ஏஜன்டான ஸால்மான்ட் ஃபிராங்க்ளின், 1958ம் ஆண்டு இறந்து விட்டார்), இபோது சில்வியா டொக்ஸே என்று மாறி விட்டார். SWP இன் உறுப்பினராக இருந்ததை தன்னால் நினைவு கூர இயலவில்லை என்று கூறிக் கொண்ட அவர், அதே நேரத்தில் ஜேம்ஸ் பி. கனன் எந்த குறிப்பிடத்தக்க முக்கியத்துவமும் இல்லாத ஒரு மனிதர் என்று அறிவித்தார். டொக்ஸேயின் படங்கள் மற்றும் அவருடனான நேர்முகத்தின் எழுத்து வடிவத்தை ஜூன் 1977ல் ICFI வெளியிட்டது. வேர்க்கஸ் லீக்கை "வன்முறை" அமைப்பாக வர்ணித்து செய்த ஒரு பொதுமக்கள் பிரச்சாரம் மூலம் இதற்கு SWP பதிலிறுப்பு செய்தது. இந்த பிரச்சாரம் ஹான்சனே தலைமை தாங்க நடத்தப்பட்டது. விசாரணையானது அனைத்துலகக் குழுவிற்கு "மரண விளைவுகளை" ஏற்படுத்தும் என்று எச்சரித்த அவர், "ஹீலியவாதிகள் தொழிலாளர் இயக்கத்தின் பிற பகுதியினருக்கு எதிராக நேரடிச் சண்டைக்கு முன்முயற்சி செய்யும் திறன் பெற்றவர்கள்" என்று எழுதினார்.[97] ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை "வன்முறையானது" என்று கண்டிப்பது ஸ்ராலினிஸ்டுகளின் செயல்பாட்டு வழிமுறையாக நீண்ட காலமாக இருந்து வருகிறது, அவர்கள் நேரடிச் சண்டைக்கு தயாரிப்பு செய்து வந்த போதிலும் கூட. நான்கு மாதங்களுக்கு பின்னர் அக்டோபர் 16, 1977 இல், வேர்க்கர்ஸ் லீக்கின் ஒரு முன்னணி உறுப்பினரான ரொம் ஹெனெஹன், தனது அமைப்பின் இளைஞரமைப்பான இளம் சோசலிஸ்டுகள் பிரிவின் ஒரு பொது விழாவினை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது நியூயோர்க் நகரத்தில் சுடப்பட்டார். சில மணி நேரங்களுக்கு பின்னர் மருத்துவமனையில் அவர் உயிர் துறந்தார். திறம்பெற்ற துப்பாக்கி ஏந்திய கொலைகாரர்கள் விழா நடந்த வளாகத்திற்குள் நுழைந்து காரணமின்றி ஹெனெஹன் மீது துப்பாக்கியால் சுட்டது ஒரு தொழில்முறை படுகொலையின் அத்தனை பண்புகளையும் தாங்கியதாய் இருந்தது. நியுயோர்க் நகர ஊடகங்கள் இதனை உடனடியாக "காரணமில்லாத கொலை" என்று முத்திரையிட்டன, போலிசார் எந்த விசாரணையும் நடத்த மறுத்து விட்டனர். இரண்டு கொலைகாரர்களும் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டிருந்தும், அவர்களைப் பிடிக்க போலிசார் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. போலிசாரின் இந்த நடவடிக்கைக்கு பப்லோவாதிகள் துணைபோனார்கள். அவர்கள் ரொம் ஹெனஹெனின் கொலை குறித்து தகவல் தெரிவிக்கவோ அல்லது கண்டனம் தெரிவிக்கவோ மறுத்து விட்டார்கள். வேர்க்கர்ஸ் லீக்கானது கொலைகாரர்களை பிடிப்பதற்கான கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட தனியாக அரசியல் பிரச்சாரத்தை நடத்தியது. இந்த பிரச்சாரத்தின் அங்கமாக, தொழிலாளர்களில் பத்தாயிரக்கணக்கானோரும் பல மில்லியன் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளும் வேர்க்கர்ஸ் லீக் கோரிக்கையை வழிமொழிந்து கோரிக்கை மனுக்களில் கையெழுத்திட்டனர். இறுதியாக, அக்டோபர் 1980ம் ஆண்டு பொதுமக்களின் நெருக்குதலுக்குப் பணிந்த போலிஸ், கொலைகாரர்கள் ஏஞ்சலோ டொரெஸ் மற்றும் எட்வின் செகினொட்டை கைது செய்தது. அவர்களது விசாரணை ஜூலை 1981ல் நடத்தப்பட்டது. அவர்கள் குற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது, நீண்டகால சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. இருந்தாலும், பிரதிவாதிகள் சாட்சியமளிக்கவில்லை என்பதோடு தங்களது நடவடிக்கைகளுக்கு அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.


[97]

Intercontinental Press, June 20, 1977.