Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

சோவியத் ஒன்றியத்தின் முடிவு

219. அக்டோபர் புரட்சிக்கு 74 ஆண்டுகளுக்கு பின்னர் 1991 டிசம்பர் 25 இல் உத்தியோகபூர்வ சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை, அனைத்துலகக் குழு முக்கிய தத்துவார்த்த ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மற்றும் அரசியல் கேள்விகளுடனும் எதிர்கொண்டது. அக்டோபர் புரட்சியின் அடிப்படையில் எழுந்த அரசின் தோற்றம், சமூகத்தன்மை மற்றும் அரசியல் தலைவிதி ஆகியவை நான்காம் அகிலம் அமைக்கப்பட்டதில் இருந்து அதில் ஒரு பிரதான முன்னீடுபாடாய் இருந்து வந்திருக்கிறது.

1930களுக்கு பின்னர், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் நடந்த எண்ணற்ற போராட்டங்களில், ''ரஷ்ய பிரச்சனை'' ("Russian Question") தீவிர முரண்பாட்டின் முக்கிய புள்ளியாக இருந்து வந்திருக்கிறது. அது அடிக்கடி கசப்பான கன்னைவாத பிரிவுகளுடனும் தொடர்புடையாதாக இருந்தது. 1940 மற்றும் 1953 இல் நான்காம் அகிலத்திற்குள் ஏற்பட்ட பிளவுகளுக்கு சோவியத் ஒன்றியத்தின் தன்மை குறித்த பிரச்சினை ஒரு மையபுள்ளியாக இருந்தது. 1985-86 இன் பிளவுக்கு பின்னர் உடனடியாக, இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்படுத்தப்பட்ட அரசுகளின் வர்க்க அடிப்படை பற்றிய பிரச்சனை அனைத்துலகக் குழுவிற்கு ஒரு முக்கிய வரலாற்றுரீதியான மற்றும் சமகாலத்து கேள்வியாக மீளவும் வெளித்தோன்றியது.

ஒரு வடிவத்திலோ அல்லது மற்றொன்றிலோ, அனைத்து திருத்தல்வாத போக்குகளும் ஸ்ராலினிசத்திற்கு ஒரு மத்திய மற்றும் நீடித்த வரலாற்று பங்களிப்பை வழங்கின. ஸ்ராலினிஸ்டுகளின் தலைமையிலான புரட்சியால் சோசலிசம் அடையப்படும், அது நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும் ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளை உருவாக்க வழி வகுக்கும் என 1953 இல் பப்லோ மற்றும் மண்டேல் கணித்தார்கள். 1983ல், தொழிலாளர் புரட்சிக் கட்சியில் அரசியல் நெருக்கடி வெடிப்பதற்கான ஆரம்ப கட்டத்தில், சோவியத் ஒன்றியம் பிழைத்திருப்பது என்பது "முடிந்து போன கேள்வி" என்றும், அது நிலைத்திருக்கமுடியாது என்று ட்ரொட்ஸ்கி எச்சரித்தது போன்று அதற்கு அங்கு சாத்தியமில்லை என்று நோர்த்திடம் பண்டா தெரிவித்தார். பண்டாவின் அறிவிப்புக்கு பின்னர், ஒரு தசாப்தங்களுக்கும் குறைவாக, கிழக்கு ஐரோப்பாவின் ஸ்ராலினிச ஆட்சிகள் மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவை ஒரு வரலாற்று நிகழ்வாகின.

220. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்கு சில மாதங்களுக்கு பின்னர், எந்தவொரு திருத்தல்வாத அமைப்பாலும் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தின் மீது ஒரு நம்பகமான மதிப்பீட்டை அளிக்க முடியவில்லை. பல பப்லோவாத போக்குகள் எதுவும் நடக்காதது போன்று அதை புறக்கணித்தன. அதிகாரத்துவத்தின் அரசியல் அதீதபலத்தில் மிகவும் ஆர்வமிகுந்த நம்பிக்கையில், சோவியத் ஒன்றியம் இல்லை என்பதை ஒத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்வதற்கே அவர்களால் கடினமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, சோவியத் ஒன்றியம் சிதைந்து விட்டதை ஒத்துக்கொண்டவர்கள்கூட, இது கட்டாயமாக அரசின் வர்க்க தன்மையை மாற்றி விடவில்லை என்று தொடர்ந்து வாதிட்டார்கள். சோவியத் ஒன்றியம் இல்லாமலும் கூட, ரஷ்யா ஒரு "தொழிலாளர் அரசாக" விளங்கியது என்ற இந்த கூற்று சோவியத் ஒன்றியத்தின் சிதைவின் பின்னரும், ரொபேர்ட்சனின் ஸ்பாட்டாசிஸ்ட் (Spartacist) குழுவினரதும் மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சியிலிருந்து ஒரு பிரிவாக பிரிந்து வந்தவர்களினதும் நிலைப்பாடாக பல ஆண்டுகளாக நிலைத்திருந்தது.

221. பப்லோவாத போக்குகளை வடிவமைத்த ஸ்ராலினிசத்தில் இருந்த நப்பாசைகளால் தத்துவார்த்த ரீதியாகவும் மற்றும் அரசியல்ரீதியாகவும் சுமையேற்றப்பட்டிராத நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் சோவியத் ஒன்றியம் பற்றி சரியான நேரத்தில் ஒரு புறநிலையான மற்றும் மதிப்புமிக்க மதிப்பீட்டை உருவாக்கி அளிக்க முடிந்தது. 1992 ஜனவரி 4 இல், பின்வரும் மதிப்பீடு அளிக்கப்பட்டது: 1985 மார்ச்சில் கொர்பச்சேவ் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து அதிகாரத்துவத்தால் பின்பற்றப்பட்ட அரசியலின் உச்சகட்டத்தை குறிக்கும் கடந்த மாத நிகழ்வுகளுக்கு பின்னர், சோவியத் ஒன்றியத்தின் சட்டபூர்வ கலைப்பிலிருந்து பொருத்தமான முடிவுகளை வரைய வேண்டிய தேவை உள்ளது. ஒட்டுமொத்தமாக சுதந்திர அரசுகளின் கூட்டமைப்பை அல்லது அது உள்ளடக்கமாக கொண்டிருக்கும் எந்தவொரு குடியரசையும் தொழிலாளர் அரசுகள் என்று வரையறுப்பது -சாத்தியமில்லை.

சோவியத் ஒன்றியத்தின் சீரழிவின் அளவு ரீதியான நிகழ்முறை ஒரு பண்பு ரீதியான மாற்றத்திற்கு இட்டுச்சென்றுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் சுதந்திர அரசுகளின் கூட்டமைப்பின் (CIS) உருவாக்கம் என்பது எழுத்துக்களை மாற்றி எழுதுவது போல் அல்ல. அது நிச்சயமாக அரசியல் மற்றும் சமூக தாக்கங்களை கொண்டுள்ளது. தொழிலாளர் அரசின் சட்டபூர்வ கலைப்பை அது பிரதிநிதித்துவம் செய்கிறது மற்றும் அதனை பதிலீடு செய்யப்பட்ட ஆட்சிகள் வெளிப்படையாக சந்தேகமின்றி அக்டோபர் புரட்சியில் இருந்து வழங்கப்பட்ட தேசிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் முறையின் மிச்சசொச்சங்களை அழிப்பதில் ஈடுபட்டன.

சுதந்திர அரசுகளின் கூட்டமைப்பு (CIS) அல்லது அதன் தனிப்பட்ட குடியரசுகளை தொழிலாளர் அரசுகளாக வரையறுப்பதென்பது, முந்தைய வரலாற்று காலத்தின் போது அது வெளிப்படுத்திய ஸ்தூலமான உள்ளடக்கத்திலிருந்து வரையறுப்பதை முழுமையாக பிரிப்பதாக அமையும்.[125]

222. சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்துவ அடுக்கால் ஆற்றப்பட்ட பாத்திரமானது நீண்டகால அரசியல் விளைவுகளை கொண்டது:

முன்னைய சோவியத் ஒன்றியத்தில் நடந்தது ஒரு சர்வதேச தோற்றப்பாட்டின் ஒரு வெளிப்பாடாகும். தொழிற்சங்கங்கள், கட்சிகள் மற்றும் முந்தைய காலத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசுகள் கூட ஏகாதிபத்தியத்தின் நேரடி கருவிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ளது.

தொழிலாளர் அதிகாரத்துவங்கள் வர்க்க போராட்டங்களுக்கு "மத்தியஸ்தம்" செய்து, வர்க்கங்களுக்கு இடையில் இடைத்தாங்கிகளாக பங்கு வகித்த காலங்கள் எல்லாம் முடிந்துவிட்டன. தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களை அதிகாரத்துவங்கள் பொதுவாக காட்டிக் கொடுத்தன என்றாலும், அவை தொடர்ந்து, ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அர்த்தத்தில் அதன் தினசரி நடைமுறை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன, மேலும், அந்த அளவிற்கு, தொழிலாள வர்க்க அமைப்புகளின் தலைவர்களாக தங்களின் இருப்பை "நியாயப்படுத்தின". அந்தக் காலம் முடிந்துவிட்டது. அதிகாரத்துவம் அதுபோன்ற எந்த சுதந்திரமான பங்களிப்பையும் இன்றைய காலத்தில் அளிக்க முடியாது.

சோவியத் ஒன்றியத்தில் உள்ள ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு மட்டுமின்றி, தொழிற்சங்கங்களில் உள்ள அமெரிக்க அதிகாரத்துவத்திற்கும் இது பொருந்தும். தற்போதைய தொழிற்சங்கங்களில் உள்ளதலைவர்களை, மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திரிக்கப்பட்ட வழியில்கூட, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் சக்தியாக வரையறுக்க முடியாது என நாம் நமது கடந்த மாநாட்டில் வலியுறுத்தினோம். AFL-CIOஇன் தலைவர்களை "தொழிற்சங்க தலைவர்கள்" என வரையறுப்பது அல்லது அதற்காக, AFL-CIOவை ஒரு தொழிலாள வர்க்க அமைப்பாக வரையறுப்பது தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள யதார்த்தங்களை அதனிடமிருந்து மறைப்பதாகும்.[126]


[125]

David North, The End of the USSR (Detroit, Labor Publications, 1992), p. 6.

[126]

End of the USSR, p 20.