Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

சோவியத் ஒன்றியத்தில் பெரஸ்துரொய்கா(மறுசீரமைப்பு) மற்றும் கிளாஸ்நோஸ்த் (வெளிப்படைத்தன்மை)

211. 1982 மற்றும் 1986க்கு இடையில் அனைத்துலகக் குழுவிற்குள்ளான போராட்டம், சோவியத் ஒன்றியம் மற்றும் அதன் ஸ்ராலினிச ஆட்சியில் ஏற்பட்ட ஆழ்ந்த நெருக்கடியின் பின்ணணியின் கீழ் அபிவிருத்தி அடைந்தது. இந்த நெருக்கடியின் அபிவிருத்தி, இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் சோவியத் பொருளாதாரத்தின் பாரிய வளர்ச்சியில் இருந்து, நம்பவியலா வகையில் எழுந்தது. இந்த அபிவிருத்தி "தனியொரு நாட்டில் சோசலிசம்" எனும் ஸ்ராலினிச முன்னோக்கின் அடிப்படையில் அமைந்த தேசிய சுயபூர்த்தி பொருளாதார கொள்கைகளின் நிலைத்துநிற்கவல்ல தன்மையை மேலும் அழித்தது. சோவியத் பொருளாதாரத்தின் அதிகரிக்கும் சிக்கல்தன்மை, உலக பொருளாதாரம் மற்றும் அதன் சர்வதேச உழைப்புப் பிரிவினையை அணுகுவதற்கான என்றுமில்லா அதிக அளவிலான அவசரத்தை முன்வைத்தது. சோவியத் ஒன்றியத்தின் அதிகரித்த பொருளாதார பிரச்சனைகள், குறிப்பாக 1945க்கு பின்னர் இரண்டு தசாப்தங்களாக பொதுவாக உயர்ந்த மட்டத்தில் இருந்த உலக பொருளாதார வளர்ச்சி வீதம் அதன் நிலையில் வீழ்ச்சி அடையத் தொடங்கியது, அதிகாரத்துவரீதியில் நிர்வகிக்கும் ஒட்டுமொத்த திறமையின்மைகளால் முன்னிலும் அதிகரித்தது, அது விஞ்ஞான திட்டமிடல் கூற்றுக்களை கேலிக்கூத்தாக்கியது. 1936ல் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டது போல, ஒரு திட்டமிட்ட பொருளாதாரத்தில் தரமானது, "உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் ஜனநாயகத்தையும், முன்முயற்சி மற்றும் விமர்சனத்தின் சுதந்திரத்தையும் கோருகிறது - இந்த நிலைமைகள் அச்சம், பொய்கள் மற்றும் முகஸ்துதி கொண்ட சர்வாதிகார ஆட்சியுடன் ஒத்துப்போகாது."[116]

"மிகவும் சிக்கலான பொருளாதார நடவடிக்கைகள் ஏற்படும்போது, மக்களின் கோரிக்கைகளும், ஆர்வங்களும் சிக்கலானதாக இருக்கும். இதனால் அதிகாரத்துவ ஆட்சி மற்றும் சோசலிச அபிவிருத்திகளின் கோரிக்கைகளுக்கு இடையிலான முரண்பாடு மேலும் தீவிரமாக வளரும்." என்றும் 1935ல் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டிருந்தார். [117]

அதிகாரத்துவத்தின் அரசியல் மற்றும் சமூக நலன்களுக்கு இடையிலான முரண்பாடுகளும், பொருளாதார அபிவிருத்திக்கான புறநிலை தேவைகளும், குறிப்பாக கணினி தொழில்நுட்பத்தின் மீது அச்சம் கொண்ட ஆட்சியின் விசித்திரமான உணர்வுகளில் வெளிப்பட்டன. குடிமக்கள் தங்களின் அனைத்து தட்டச்சு மற்றும் மிமீயோகிராபி இயந்திரங்களை பதிவு செய்ய வேண்டிய நிலையிலிருந்த ஒரு நாட்டில், கணினிகளை பரவலாக பயன்படுத்துவதின் அரசியல் தாக்கங்களால் ஸ்ராலினிச அதிகாரிகள் திகிலடைந்தார்கள்.

212. 1960 மற்றும் 1970களில் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் ஸ்ராலினிச ஆட்சிகளுக்கு படிப்படியாக எதிர்ப்பு வலுத்தது. சோவியத்தின் தொழில்துறை நகரான Novocherkassk இல், 1962 ஜூனில் இராணுவத்தால் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்ட பாரிய வேலைநிறுத்தங்கள் நடந்ததாக செய்திகள் தெரிவித்தன. 1964 இல் குருஷ்சேவ் அதிகாரத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டு, லியோனிட் பிரஷ்னேவ் பதவியில் அமர்த்தப்பட்டார். 1953 ஸ்ராலினிசமயம் நீக்கல் பிரச்சாரங்கள் ஆட்சியின் அரசியல் முறைமையை தக்கவைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளாக இருந்தன.

எழுத்தாளர்கள் யூலி டானியல் மற்றும் ஆண்ட்ரி சின்யாவ்ஸ்கி மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் தண்டனைகளானது, வளர்ந்து வந்த அதிருப்தி இயக்கங்களை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டிருந்தன. அவை ஆட்சியின் மதிப்பை சீரழிக்க செய்ததுடன், Alexander Solzhenitsyn இன் புலம்பெயர்தலுக்கு உதவியது போல உதவின. 1968 ஜனவரியில் செக்கோஸ்லேவேக்கியாவில் "பிராக்-வசந்தம்" என்று அழைக்கப்பட்ட அலெக்சாண்டர் டூப்செக் பதவிக்கு வந்தபோது, சோவியத் அதிகாரத்துவம் மேலும் அஞ்சியது. 1968 ஆகஸ்டில் செக்கோஸ்லேவேக்கியா மீதாக அடுத்து வந்த படையெடுப்பு மற்றும் அதிகாரத்தில் இருந்து டூப்செக்கின் நீக்கம் ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் மற்றும் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த தொழிலாள வர்க்கம் மற்றும் புத்திஜீவிகளின் குறிப்பிடத்தக்க பகுதிகளின் அந்நியப்படலை ஆழப்படுத்தின. இவர்கள் ஜனநாயக மற்றும் சோசலிச பண்பின் சீர்திருத்தங்களுக்கான சாத்தியத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர்.

1970இன் போலந்தில் நடைபெற்ற மாபெரும் வேலைநிறுத்தங்கள், 1956ல் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு இடையில் தன்னைத்தானே அதிகாரத்தில் ஏற்றிக் கொண்ட கோமுல்கா ஆட்சியை பதவியில் இருந்து இறக்கியது. இந்த சவால்களை எதிர்கொள்கையில், பிரெஷ்னேவ் அவரது ஆட்சிக்கு அப்பட்டமாக ஒரு கோளாறு பண்பை அளித்த ஸ்ராலினிச கடுங்கோட்பாட்டு மரபை வலியுறுத்த முயன்றார். முக்கியமாக, சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் "மனக் கசப்பை நீக்கும் சாதக நிலை" மலர்ந்ததை காணமுடிந்தது இந்த காலகட்டம். கார்ட்டர் நிர்வாகம் அதிகமாய் மோதற் கொள்கைக்கு மாறிய போது, இந்த நிகழ்முறை முடிவுக்கு வந்தது. இந்த மோதற்கொள்கை பின்னர் ரீகன் நிர்வாகத்தால் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது.

213. 1982 நவம்பரில் பிரெஷ்னேவ் இறந்த சமயத்தில், தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் பொது சமூக தேக்கநிலையின் அறிகுறிகளை ஆட்சியால் நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியவில்லை. 1980 இல், போலாந்தில் மாபெரும் ஐக்கிய இயக்கத்தின் உருவாக்கம், சோவியத் அதிகாரத்துவத்தின் முக்கிய பிரிவுகளால், சோவியத் ஒன்றியத்திற்குள் ஒரு புரட்சி வெடிப்பதற்கான சாத்தியம் இருப்பதற்கான ஓர் எச்சரிக்கையாக பார்க்கப்பட்டது. அவருக்கு பதிலாய் அமர்த்தப்பட்ட கேஜிபி இயக்குனர் யூரி ஆண்ட்ரோபோவ், ஆட்சியின் நம்பகத்தன்மையை மீண்டும் உருவாக்க பல்வேறு ஊழல் ஒழிப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த விரும்பினார். மது ஒழிப்பினால் சோவியத் தொழில்துறையின் உற்பத்தி பெருகும் என்ற நம்பிக்கையில் அவர் மது ஒழிப்பு ஒடுக்குமுறையையும் செயல்படுத்தினார். ஆனால் இந்த முறைகள் அப்போதைக்கு மட்டும் தணிக்க கூடியதாக இருந்தது. சோவியத் பொருளாதாரத்தின் தேசியவாத மூடிய தன்மையே அடிப்படை பிரச்சனையாக இருந்தது. எந்த வகையிலும், அதிகாரத்திற்கு வந்த போது கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆண்ட்ரோபோவ், பதவிக்கு வந்த வெறும் 15 மாதங்களில், 1984 பெப்ரவரியில் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரின் இடத்திற்கு வந்த கொன்ஸ்டன்டின் செர்னென்கோ மற்றொரு கடுமையான சோவியத் அதிகாரத்துவவாதியாக விளங்கினார். அவர் 13 மாதங்களே பதவியில் இருந்தார். செர்னென்கோ மிக்கைல் கொர்பசேவினால் தோற்கடிக்கப்பட்டார். இவரின் நெருக்கடியில் தவித்த ஆட்சி சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

214. உள்நாட்டு சுதந்திரங்கள் (வெளிப்படைத்தன்மை- கிளாஸ் நோஸ்த்) மற்றும் பொருளாதார சீர்திருத்தம் (பெரஸ்துரொய்கா - மறுசீரமைப்பு) இவற்றின் மட்டுப்பாடுடன் கூடிய விரிவாக்கத்தின் இரட்டை கொள்கை ஒன்றை கோர்பச்சேவ் முன்முயற்சித்தார். கொர்பச்சேவால் தலைமைதாங்கப்பட்ட அதிகாரத்துவத்தின் பிரதான நோக்கமானது, சோவியத் மக்களிடையே நிலவிய பரந்த எதிர்ப்பை முதலாளித்துவத்தை மீட்டமைக்கும் கொள்கைகளின் பின்னே வழிப்படுத்துவதாகும். பல தசாப்தங்களாக ஸ்ராலினிச ஆட்சியில் உருவாக்கப்பட்ட தொழிலாளர்களின் நோக்குநிலை விலகலை கோர்பசேவ் நம்பியிருந்தார். அவர் குட்டி-முதலாளித்துவ தீவிர இடதுகளிடமிருந்தும் அரசியல் ஆதரவு பெற்றார். கோர்பசேவ் பாராட்டத்தக்க கூர்த்த மதிநுட்பத்தை வெளிப்படுத்திய ஒரே ஒரு அரசியற் கணக்கீடு இதுமட்டுமே ஆகும். வேறெங்குமே இதுபோன்ற குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி இல்லை என] முதலாளித்துவ பத்திரிகை "Gorbymania" என சிறப்புப்பெயர் இட்டது, இடதுசாரி குட்டி-முதலாளித்துவ சூழ்நிலைக்குள செய்தது போல இத்தகைய கட்டுப்படுத்தவியலா வெளிப்பாட்டைக் கண்டது. அதிகாரத்துவ சுய-சீர்திருத்தத்தின் பப்லோவாத முன்னோக்கின் வெளிப்பாட்டை கோர்பசேவ்விடம் பார்த்த ஏர்னெஸ்ட் மண்டேல் அவரை "ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்" ஆக, பிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட்டின் சோவியத் அச்சாக இருப்பதாக குறிப்பிட்டார்.[118]

எதிர்காலத்தை மிக மேலோட்டமாக பார்வையிட்டு, சோவியத் அபிவிருத்திக்கான புறத்தோற்றத்தில் சரியானதுபோல் தோன்றுகின்ற நான்கு காட்சிகளை மண்டேல் வரையறுத்தார். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்கான சாத்தியக்கூறுகளை இதில் ஒன்று கூட கொண்டிருக்கவில்லை. இறுதியாக சிதைவுறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட இது, ஓர் எழுத்தாளரின் அசாதாரண கண்ணோட்டத்தை வெளிக்காட்டுகிறது! பிரிட்டனில் பப்லோவாத அமைப்பின் தலைவராக இருந்த மண்டேலின் சீடரான தாரிக் அலி, பெரெஸ்துரொய்கா மற்றும் அதன் முன்முயற்சியாளர்கள் பற்றிய அவரது ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 1998ல் பிரசுரித்த புரட்சி மேலிருந்து: சோவியத் ஒன்றியம் எங்கே செல்கிறது? (Revolution From Above: Where Is the Soviet Union Going?) எனும் அவரின் புத்தகத்தை பொறிஸ் யெல்ட்சினுக்கு சமர்ப்பித்தார். யெல்ட்சினுக்கான அவரின் பங்களிப்பில், அவரின் "அரசியல் தைரியம் நாடு முழுவதும் அவரை ஒரு முக்கிய அடையாளச் சின்னமாக உருவாக்கி விட்டிருப்பதாக" அறிவித்தார்.[119]

சோவியத் ஒன்றியத்திற்கான தனது விஜயங்கள் குறித்து அலி விவரிக்கையில், "நான் என் தாய்நாட்டில் இருப்பது போல் உணர்ந்தேன்" என்று தன் வாசகர்களுக்கு தெரிவிக்கிறார். [120]

கோர்பச்சேவின் கொள்கைகள் ரஷ்ய சமுதாயத்தின் புரட்சிகர மாற்றத்தை மேலிருந்து தூண்டிவிட்டன என அலி உறுதிபட தெரிவித்தார். "சோவியத் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் இயக்கத்தால் சோவியத் ஒன்றியத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருந்தால், மற்றும் அரசியல் அதிகாரத்தின் பழைய உறுப்புக்களுக்கு -சோவியத்துக்கள்- புதிய இரத்தம் பாய்ச்சப்பட்டிருந்தால் விரும்பக்கூடியவர்களும் அங்கு இருந்தனர் (நானும் கூட அதை விரும்பினேன்!) என்று எரிச்சலுடன் குறிப்பிட்ட அவர், அவ்வாறு நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும், ஆனால் அது அவ்வாறு நடக்கவில்லை" என்றார்.[121]

அலி பின்னர் பப்லோவாத முன்னோக்கை சுருக்கமாக தொகுத்தளித்தார். அது அரசியல் காட்சிவாதம் மற்றும் தனிப்பட்ட முட்டாள்தனத்தின் சம அளவு கலவையாக இருந்தது. கோர்பசேவ் சோவியத் தட்டிற்குள் ஒரு முற்போக்கான, சீர்திருத்தவாத போக்கை கொண்டிருந்ததாகவும், அவரின் திட்டம் வெற்றி பெற்றிருந்தால், உலகளவில் சோசலிஸ்டுகள் மற்றும் ஜனநாயகவாதிகளுக்கு பெரும் வெற்றிகளை அளித்திருக்கும் என மேலிருந்து புரட்சி வாதிடுகிறது. உண்மையில் கோர்பசேவின் நடவடிக்கை, பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனின் பழைய முயற்சிகளை நினைவூட்டக்கூடியதாக இருக்கிறது.[122]

215. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் முன்னாள் ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் அளிக்கப்பட்ட கோர்பசேவ் ஆட்சியின் மதிப்பீடு மிகுந்த சிக்கலுடையதாக இருந்தது. சோவியத் ஒன்றியத்தில் கொர்பசேவ் அரசியல் புரட்சியை வழிநடத்தி வருவதாக ஹீலி அறிவித்தார். பண்டாவை பொறுத்தவரை கோர்பசேவின் பதவியேற்பு ட்ரொட்ஸ்கிசம் பற்றிய இறுதி மறுதலிப்பாக இருந்தது. "மீட்சி இருந்திருக்கவில்லையானால், அதைக் கண்டு பிடிக்க வேண்டிய தேவை ட்ரொட்ஸ்கிக்கு முற்றிலும் அவசியமானதாக இருந்திருக்கும்! என்று அறிவித்தார். ஸ்ராலினின் காலத்திலும், அதற்கு பின்னரும், சோவியத்தின் வரலாறு முழுவதும், இந்த குழந்தைப் பிள்ளைத்தனமான இடதுசாரி ஊகத்தை உறுதிப்படுத்துகிறது என்பதுடன் எதிர்திசையிலும் சுட்டிக் காட்டுகிறது." என்று அவர் அறிவித்தார்.[123]

216. இந்த கருத்துக்களுக்கு எதிராக, 1986 வெகு ஆரம்பத்திலேயே கொர்பச்சேவின் பொருளாதார கொள்கைகளின் அடிப்படை பிற்போக்குத்தன்மையை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விவரித்தது. அதன் 1988 முன்னோக்கு ஆவணத்தில், அது குறிப்பிட்டதாவது:

அவர் தமது பிற்போக்கு பெரஸ்துரொய்கா பொருளாதார சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த விரும்பும் நிலையில், ஸ்ராலினிசத்திற்கு அடிப்படையான அனைத்து பொருளாதார விளக்கங்களும், அதாவது தனியொரு நாட்டில் சோசலிசம் கட்டியமைக்கப்பட முடியும் என்பது தோல்விக்குரியவை என்பதை கோர்பச்சேவ் உட்குறிப்பாக உண்மையென ஒப்புக்கொள்கிறார். சோவியத் பொருளாதாரத்தின் மிக உண்மையான நெருக்கடியானது, உலகச் சந்தையின் வளங்கள் மற்றும் சர்வதேச உழைப்புப் பிரிவினையிலிருந்து கட்டாயப்படுத்தப்பட்ட தனிமைப்படலில் வேரூன்றியுள்ளது. இந்த நெருக்கடியை கையாள இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. கொர்பச்சேவ் வலியுறுத்தும் வழியானது, அரசு தொழில்துறை கலைப்பு, திட்டமிடல் கோட்பாட்டைக் கைவிடல் மற்றும் அன்னிய வர்த்தகத்தில் அரசின் தனியுரிமையை கைவிடல், அதாவது, சோவியத் ஒன்றியத்தை உலக ஏகாதிபத்திய கட்டமைப்புடன் மறுஒருங்கிணைப்பு செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த பிற்போக்கு தீர்வுக்கு மாற்றானது, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசிய முதலாளித்துவ கோட்டைகளுக்குள் திட்டமிட்ட பொருளாதாரத்தை விரிவாக்கும் நோக்கம் கொண்ட ஒரு புரட்சிகர தாக்குதலில் சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை இணைப்பதன் மூலம் உலகப்பொருளாதாரத்தின் மீது ஏகாதிபத்திய செல்வாக்கை தகர்ப்பதற்கான தேவையை கொண்டிருக்கிறது.[124]

217. கிளாஸ்நோஸ்த் சீர்திருத்தங்கள் மற்றும் தணிக்கை முறையில் கட்டுப்பாடுகளை தளர்த்தல் சோவியத் ஒன்றியத்தில் அரசியல் மற்றும் வரலாற்றுரீதியான பிரச்சினைகளை விவாதிப்பதற்கான வழிகளை திறந்துவிட்டது. அதிகாரத்துவம் கடந்த காலநிகழ்வுகளை பின்னோக்கி பார்த்து புக்காரின், சினோவியேவ் மற்றும் காமெனேவ் உட்பட பல பழைய போல்ஷ்விக்குகளை புனருத்தாரணம் செய்தது மற்றும் மாஸ்கோ குற்றச்சாட்டுக்கள் பொய்களை அடிப்படையாக கொண்டன என்பதை ஒத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது. எவ்வாறிருப்பினும், ட்ரொட்ஸ்கியின் குற்றச்சாட்டுக்கள் அதிகாரத்துவத்தின் சமூக நலன்களை ஒட்டுமொத்தமாக தாக்கியதால், அதிகாரத்துவம் ஒருபோதும் ட்ரொட்ஸ்கிக்கு மறுவாழ்வளிக்க விரும்பவில்லை. இந்த சிந்தனைகள் சோவியத் தொழிலாள வர்க்கத்தின் செவிகளில் விழுந்திருந்தால், அது முதலாளித்துவ மறுஉருவாக்கத்திற்கான திட்டங்களை கடுமையாக எச்சரித்திருக்கும். 1987ல், ட்ரொட்ஸ்கிச கருத்துக்கள் "எல்லாவகையிலும் முக்கியமாக லெனினிசத்தின் மீதான ஒரு தாக்குதல்" என்று கொர்பச்சேவ் வலியுறுத்தினார்.

218. ரஷ்ய மொழியில் ஒரு தத்துவார்த்த இதழை பிரசுரிப்பதன் மூலமாகவும், 1989 மற்றும் 1991க்கு இடையில் சோவியத் ஒன்றியத்திற்கு பல பயணங்களை ஏற்பாடு செய்ததன் மூலமாகவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சோவியத் மக்களுக்கு ட்ரொட்ஸ்கிச முன்னோக்கை கொண்டு செல்ல விரும்பியது. அக்டோபர் புரட்சியில் ட்ரொட்ஸ்கியின் இடம், ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் தோற்றமூலம் மற்றும் முக்கியத்துவம், நான்காம் அகிலத்தின் அரசியல் வேலைத்திட்டங்கள் மற்றும் சோவியத் ஒன்றியம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியின் இயல்பு ஆகியவற்றை விளக்குவதில் அதன் பணிகள் கவனம் செலுத்தின. சோவியத் ஒன்றியத்தின் சிதைவு மற்றும் முதலாளித்துவத்தின் மீட்சி சோவியத் தொழிலாள வர்க்கத்திற்கு அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடர்ச்சியாக எச்சரித்தது. 1991 அக்டோபரில் கியேவில் பேசிய போது, டேவிட் நோர்த் பின்வருமாறு விவரித்தார்:

... இந்த நாட்டில், ஏற்கனவே இருக்கும் உற்பத்தி சக்திகள் மற்றும் அவற்றை சார்ந்திருக்கும் சமூக கலாச்சார பயிலகங்களின் பரந்த அழிவில் மட்டுமே முதலாளித்துவ மீட்சி நடந்தேற முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதலாளித்துவ அடிப்படையில் உலக ஏகாதிபத்திய பொருளாதாரத்தில் சோவியத் ஒன்றியத்தை ஒருங்கிணைப்பதானது, ஒரு பின்னோக்கிய தேசிய பொருளாதாரத்தின் மெதுவான முன்னேற்றமாக மட்டுமல்லாமல், மூன்றாம் உலகைவிட அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இருப்பவர்களுக்கு மிக்க அண்மையில், அதாவது தொழிலாள வர்க்கத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம், தாக்குப் பிடிக்கும் வாழ்க்கை நிலைமைகளின் விரைவான அழிவை குறிக்கிறது. முதலாளித்துவ மீட்சிக்கு வக்காலத்து வாங்குபவர்களால் சூழ்ச்சி செய்து உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ஒருவர் ஆராய்வாரானால், உலக முதலாளித்துவ பொருளாதாரத்திற்கான உண்மையான ஸ்ராலினின் பணிகளை விட அவை குறைந்த அறியாமை கொண்டவையல்ல என்ற தீர்மானத்திற்கு வரலாம். ஸ்ராலினின் தேசியவாத மற்றும் நடைமுறைவாத கொள்கைகளால் உருவாக்கப்பட்டதை மறைக்கும் ஒரு சமூக துன்பியலுக்கான அடித்தளத்தை அவர்கள் தயாரித்து வருகிறார்கள்.

இது தத்துவார்த்த திட்டம் மட்டுமல்ல: பதிலாக, சோவியத் ஒன்றியத்தை அச்சுறுத்தும் எதிர்காலமானது கிழக்கத்திய ஐரோப்பாவின் தற்போதைய யதார்த்தமாக உள்ளது. முதலாளித்துவம் நடைமுறையில் இருக்கும் அல்லது மீட்டமைப்பதற்கான செயல்முறை முயற்சியில் இருக்கும் அனைத்து நாடுகளிலும், தேசிய பொருளாதாரத்தின் ஒரு பேரழிவுகர சிதைவே விளைவாக உள்ளது.


[116]

Trotsky, Revolution Betrayed, p 235.

[117]

“The workers’ state, Thermidor, and Bonapartism” in Writings of Leon Trotsky 1934-35 (New York: Pathfinder, 2002) p 246

[118]

Beyond Perestroika: The Future of Gorbachev’s USSR (London: Verso, 1989), p. xi.

[119]

London: Hutchinson, 1988, p. vi.

[120]

Ibid, p. xi.

[121]

Ibid, p. xii.

[122]

Ibid, p. xiii.

[123]

Cited in The Heritage We Defend, p. 499.

[124]

The World Capitalist Crisis and the Tasks of the Fourth International, pp. 30-31.