Leon Trotsky
காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி

1936 ஆம் ஆண்டிலேயே அரசியல் ரீதியாக நாடுகடத்தப்பட்டு நோர்வேயில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் எழுதியபோது, ஸ்ராலினிச ஆட்சியின் கொள்கைகளானவை சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தின் வெற்றியை உறுதி செய்திருப்பதற்கெல்லாம் வெகு விலகி, உண்மையில் முதலாளித்துவத்தின் மீட்சிக்குத்தான் அடித்தளத்தை தயாரித்துக் கொண்டிருக்கின்றது என்று லியோன் ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். 1985 இல் பெரெஸ்த்ரோய்கா (புனர்நிர்மாணம்) தொடங்கப்பட்டதில் இருந்தான நிகழ்வுகளின் பாதை, 1917 அக்டோபர் புரட்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்து வடிவங்கள் அழிக்கப்படுவது எந்த முறையில் நடக்கக்கூடும் என்பதற்கான நிகழ்ச்சிப்போக்கு குறித்து ட்ரொட்ஸ்கியின் அனுமான எடுத்துக்காட்டை மலைக்கவைக்கும் மட்டத்திற்கு உறுதி செய்திருக்கிறது என்பதை முரண்பாடான அச்சமுமின்றி இப்போது சொல்ல முடியும்.