முன்னோக்கு

ஐரோப்பாவில் 800,000 கோவிட்-19 இறப்புகள்: முதலாளித்துவமும், சமூக கொலையும் சோசலிசத்திற்கான தேவையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று, ஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உத்தியோகபூர்வ இறப்பின் எண்ணிக்கை 800,000 இனை தாண்டியது.

இந்த அளவிலான மரணம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய தாக்குதலும், அதை புரிந்துகொள்வதும் கடினமாகும். இது பிராங்பேர்ட் ((753,056)), ஆம்ஸ்டர்டாம் (821,752), நகரங்களை வரைபடத்திலிருந்து துடைத்தெறியப்பட்டதைப் போன்றது. முதலாம் உலகப் போரில் வேர்டன் மோதலில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளை அல்லது 1941 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்பின் போது மாஸ்கோவின் பிரம்மாண்டமான போரில் கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை விட உயிர் இழப்பில் அதிகமாக உள்ளது.

529 பேரில் ஒருவருக்கு என பெல்ஜியத்தில், செக் குடியரசில் 545 க்கு ஒருவர், பிரிட்டனில் 558 க்கு ஒருவர், இத்தாலியில் 625 க்கு ஒருவர், போர்ச்சுகலில் 630 பேர் மற்றும் பொஸ்னியாவில் 646 பேரில் ஒருவர் கோவிட்-19 இனால் இறந்துள்ளனர். இறப்புக்கள் அதிகரிக்கையில் பிறப்புகள் வீழ்ச்சியடைந்து வருவகையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதன்முறையாக மேற்கு ஐரோப்பாவில் ஆயுட்காலம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது இத்தாலியில் 1.5 ஆண்டுகள், ஸ்பெயின் மற்றும் பிரிட்டனில் ஒரு வருடம், சுவீடன் மற்றும் பிரான்சில் அரை வருடம் என குறைந்துள்ளது.

ஐரோப்பாவில் பல்லாயிரக்கணக்கானோர் தமது அன்புக்குரியவர்களை இழந்துவிட்டனர். கடந்த மாதத்திற்குள், ஸ்பானியர்களில் 63 சதவீதம், போலந்துகாரர்களில் 59 சதவீதம், இத்தாலியர்களில் 58 சதவீதம், பிரிட்டன் மற்றும் சுவீடனில் 57 சதவீதம், பிரெஞ்சுக்காரர்களில் 51 சதவீதம், ஜேர்மனியர்களில் 34 சதவீதமானோரின் குறைந்தது ஒரு உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் பரிசோதனையில் நேர்மறையானவர்களாக இருந்தனர். ஸ்பெயினிலும் போலந்திலும் முழுமையாக 19 சதவீதம், இத்தாலியில் 21 சதவீதம், பிரிட்டனில் 13 சதவீதம், பிரான்சில் 11 சதவீதம், ஸ்வீடனில் 10 சதவீதம், ஜேர்மனியில் 8 சதவீதம் மக்கள் தமது உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் இறந்ததைக் கண்டனர்.

ஸ்பெயினில் பொருளாதாரம் 11 சதவிகிதம், பிரிட்டனில் 10 சதவிகிதம், இத்தாலியில் 9 சதவிகிதம், பிரான்சில் 8 சதவிகிதம், ஜேர்மனியில் 5 சதவிகிதம் மற்றும் போலந்து மற்றும் ரஷ்யாவில் 3 சதவிகிதம் வீழ்ச்சியடைந்ததால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். உணவகங்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பிற சிறு வணிகங்கள் எப்போது அல்லது எப்போதாவது சாதாரணமாக மீண்டும் திறக்க முடியுமா என்பது உறுதியாகத் தெரியாது உள்ளன. பகுதிநேர வேலைகளை இழந்த மாணவர்கள் தொண்டு நிறுவனங்கள் அல்லது பிற அமைப்புகளிலிருந்து உணவு மற்றும் அடிப்படை பொருட்களைப் பெற வரிசையில் நிற்கிறார்கள்.

தொற்றுநோய் ஒரு துன்பியல் மட்டுமல்ல, சமூக ஒழுங்கமைப்பின் பரவலான தோல்வியுமாகும். மதிப்புமிக்க BMJ (பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னல்) சமீபத்தில் எழுதியது போல், மனித உயிர்கள் பற்றி முற்றிலும் அலட்சியமாக இருக்கும் ஒரு ஆளும் வர்க்கம் "சமூக கொலை" என்ற கொள்கைகளை நிறைவேற்றுகிறது.

இன்று, கோவிட்-19 இனால் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை 33.5 மில்லியன் அல்லது ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் ஆகும். ஒவ்வொரு நாளும், 100,000 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் நேர்மறையாக பரிசோதனை செய்யப்படுகிறார்கள். மேலும் வைரஸின் கொடிய திரிபுகள் மேலும் பரவுகின்றன. செக் குடியரசு அதன் மருத்துவமனைகள் நிரம்பி, மேலும் இரண்டு முதல் மூன்று வாரங்களில் சதுப்பு நிலமாக மாறிவிடும் என்று எதிர்பார்த்து சமீபத்தில் சர்வதேச உதவிக்கு வேண்டுகோள் விடுத்தது. இது பேர்லினில் இருந்து ஒன்பது நோயாளிகளை மட்டுமே எடுத்துக் கொள்ள முன்வந்ததாக ஒரே ஒரு பதிலை மட்டும் பெற்றது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், திரிபுகள் காரணமாக தொற்றுக்களின் புதிய எழுச்சி தவிர்க்க முடியாதது என்று விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில், ஐரோப்பா முழுவதும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் வீடுகளில் தங்கியிருப்பதை நிராகரித்து, மீதமுள்ள சமூக இடைவெளி நடவடிக்கைகளை அகற்ற நகர்கின்றன.

இங்கிலாந்து பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் பிப்ரவரி 21 அன்று, பிரிட்டன் "கடைசியாக பூட்டப்பட்டதை" பின்வாங்கமுடியாது "அகற்றுவதற்கான" கால அட்டவணையை "அறிவித்தார். இந்த திட்டத்தில், நிபந்தனைகள் “மருத்துவமனையில் தொற்றியவர்களை சேர்க்கும் அதிகரிப்பு அபாயம்” இல்லாவிட்டால், வைரஸின் அதிவேக வளர்ச்சி விகிதத்தைக் கட்டுப்படுத்த லண்டன் முயற்சிக்காது. ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட 126,000 ஐ தாண்டி "அதிகமான நோய்த்தொற்றுகள், அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, துரதிர்ஷ்டவசமாக, அதிகமான இறப்புகள் ஏற்படும்" என்பதை ஏற்றுக்கொள்ளுமாறு ஜோன்சன் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு மோசமாக உத்தரவிட்டார்.

பேர்லின் திங்களன்று ஜேர்மனி முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறக்கத் தொடங்கியது. ஸ்பெயினின் பிராந்திய அரசாங்கங்கள் சமூக விலக்கல் கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றன. பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடந்த மாதம் விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்பட்ட நாடு தழுவிய பூட்டுதல் உத்தரவை நிராகரித்து பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். மூன்றில் இரண்டு பங்கு பிரெஞ்சுக்காரர்கள் இதுபோன்ற பூட்டுதலை எதிர்பார்க்கும்போது, மக்ரோன் ஒரு தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு விரிவுரை வழங்கினார்: “திரிபுகள் குறித்த எனது கேள்விகளுக்கு ஒரே ஒரு தீர்வாக புதிய பூட்டுதல் என பதிலளிக்கும் விஞ்ஞானிகள் போதுமானவர்கள் உள்ளனர்.”

தடுப்பூசி விநியோகம் நம்பிக்கையற்ற முறையில் தாமதமாகி வருவதால், அத்தகைய கொள்கைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டால், தடுப்பூசி எதிர்வரும் மாதங்களில் புதிய இறப்புகளின் அலைகளைத் தடுக்காது. இரட்டை தடுப்பூசிகளில் ஒன்றை மட்டும் பெற்றுக் கொண்ட மக்கள்தொகையின் சதவீதம் பிரிட்டனில் 24 சதவிகிதம் மற்றும் சேர்பியாவில் 13.5 சதவிகிதம் போலந்தில் 4 சதவிகிதம், ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் 3 சதவிகிதம், செக் குடியரசில் 2.8 சதவிகிதம் குடியரசு மற்றும் ரஷ்யாவில் 1.4 சதவீதம் ஆக உள்ளது.

வைரஸ் பெருமளவில் பரவுவது தவிர்க்க முடியாதது அல்ல. கடுமையான தொடர்புத் தடமறிதல் மற்றும் வீடுகளில் இருப்பதற்காக கட்டளைகள் போன்ற மருத்துவ நிபுணர்களின் அழைப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், சீனா, தைவான் மற்றும் வியட்நாம் போன்ற ஒரு சில நாடுகள் தொற்றுநோயை வியத்தகு முறையில் மட்டுப்படுத்தின. எவ்வாறாயினும், ஐரோப்பாவில், நிதிய பிரபுத்துவத்தின் அரசியல் பிரதிநிதிகள் தேவையில்லாமல் நூறாயிரக்கணக்கானவர்களைக் கொன்றனர்.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டல் தேவைப்படுகிறது. முதலாளித்துவம் மனித வாழ்க்கையை தனியார் இலாபத்திற்கும், ஏகாதிபத்திய சக்திகளின் பிற்போக்குத்தனமான தேசிய பூகோள அரசியல் நலன்களுக்கும் கீழ்ப்படுத்துகிறது.

2020 வசந்த காலத்தில் ஐரோப்பாவின் பெரும்பகுதி முழுவதும் விதிக்கப்பட்ட ஆரம்ப பூட்டுதல்கள் இத்தாலி முழுவதும் தொழிற்சங்கங்களுக்கு கட்டுப்படாத தன்னியல்பான வேலைநிறுத்தங்களின் அலை காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவை ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியது. "ஒவ்வொரு தொழில்துறை துறையிலும் ... தொழிலாளர்களின் அணுகுமுறையில் மிகவும் மிருகத்தனமான மாற்றம் உள்ளது" என்று பிரான்சின் முக்கிய வணிக கூட்டமைப்பான மெடெஃப்பின் துணைத் தலைவரான பற்றிக் மார்ட்டின் அந்த நேரத்தில் எழுதினார். கோவிட்-19 க்கு "அதிகப்படியான பிரதிபலிப்பிற்கு" தொழிலாளர்களைக் குற்றம் சாட்டிய மார்ட்டின், தொழிலாளர்களின் அழுத்தம் காரணமாக நிர்வாகம் "இனி உற்பத்தியை தொடர முடியாது" என்று எச்சரித்தார்.

உயிரைக் காக்க தொழிலாள வர்க்கம் அணிதிரண்டபோது, ஐரோப்பிய முதலாளித்துவ அதிகாரிகளும் ஊடகங்களும் இலாபங்களையும் மரணத்தையும் பாதுகாக்க இயங்கின. பூட்டுதல்களை நிறுத்தவும், அத்தியாவசியமற்ற உற்பத்தியைத் தொடரவும் அவர்கள் அழைப்பு விடுத்தது. இதனால் இலாபங்கள் வங்கிகளுக்கு தொடர்ந்து பாய்ந்தன. ஐரோப்பாவின் "சமூக நோய்எதிர்ப்பு சக்தி பெருக்கும்" மூலோபாயத்தை முன்வைத்து, இங்கிலாந்தின் தலைமை விஞ்ஞான ஆலோசகர் பேட்ரிக் வலன்ஸ், கோவிட்-19 பரவுவதைத் தடுப்பது "விரும்பத்தக்கது அல்ல" என்று கூறினார். மேலும் "எதிர்காலத்தில் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள்தொகையில் நோய் எதிர்ப்பு சக்தி" இருப்பது தேவை என்று அழைப்பு விடுத்தார்.

ஜேர்மனியில், கடந்த கோடையில் வெளியிடப்பட்ட ஒரு உள்துறை அமைச்சரக அறிக்கை, கோவிட்-19 பரவலை அனுமதிப்பது 1 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்று மதிப்பிட்ட நிலையில், ஜனாதிபதி வொல்ப்காங் ஷொய்பிள, “உயிர் பாதுகாப்பின் முன்னால் ஏனையவை இரண்டாவது இடத்தில் இருக்க வேண்டும்” என்ற கருத்தை கண்டித்தார். ஜேர்மனியின் அரசியலமைப்பு, "இறப்பதிலிருந்து எங்களை விலக்கிவைக்கவில்லை" என்று அவர் அப்பட்டமாக அறிவித்தார்.

கடந்த ஆண்டின் ஆரம்ப பூட்டுதலை அவர்கள் முடித்தவுடன், ஐரோப்பிய அதிகாரிகள் பல ட்ரில்லியன் யூரோ பிணை எடுப்புகளை வடிவமைத்து, பரந்த பொதுச் செல்வத்தை நிதிப் பிரபுத்துவத்திற்கு வழங்கினர். ஐரோப்பிய மத்திய வங்கியிடமிருந்து 1.25 டிரில்லியன் யூரோக்கள் மற்றும் இங்கிலாந்து வங்கியிடமிருந்து 645 பில்லியன் பவுண்டுகள் பிணை எடுப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் 750 பில்லியன் யூரோக்கள் மற்றும் பிரிட்டனில் 330 பில்லியன் பவுண்டுகள் பெருநிறுவன பிணை எடுப்பு ஆகியவற்றால் பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ளன. ஐரோப்பாவின் பணக்கார தனிநபர், பிரெஞ்சு கோடீஸ்வரர் பேர்னார்ட் ஆர்னோல்ட்டின் சொத்து மதிப்பு 30 பில்லியன் யூரோக்களால் உயர்ந்தது.

நிதியப் பிரபுத்துவத்தின் பேராசையை உலகச் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஏகாதிபத்திய சக்திகளின் போராட்டத்திலிருந்து பிரித்தறிய முடியாதது. "சீனாவை மையமாகக் கொண்ட பூகோளமயமாக்கலின்" அபாயத்தைப் பற்றி எச்சரிக்கும் லு மொன்ட் பத்திரிகை, ட்ரம்ப்பின் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை" "வணிகம் முதல்" என்பதற்காக அணைத்துக்கொண்டு, சீனாவின் பலத்திற்கு களத்தை திறந்து விட்டுவிடக்கூடாது என்பதற்காக அதன் மக்கள்தொகையில் ஒரு பகுதியை தியாகம் செய்யவேண்டும் என்றது. அதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் அதன் மக்களை தியாகம் செய்தது.

ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பில் கையெழுத்திட்டன, ஏனெனில் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் போலி-இடது கட்சிகளில் வசதியான நடுத்தர வர்க்க சக்திகள் தங்கள் பங்கு இலாபங்கள் அதிகரிப்பதைக் கண்டன. "இடது ஜனரஞ்சக" பொடேமோஸ் கட்சி ஸ்பெயினின் அரசாங்கத்திற்குள் இருந்து "மந்தை சமூக நோய் எதிர்ப்பு சக்தி" கொள்கைகளை செயல்படுத்தியது.

இந்த அமைப்புகள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் உலகளாவிய வேலைக்கு மற்றும் பள்ளிக்குத் திரும்பும் கொள்கையை ஆதரித்தன. நவம்பர் மாதத்தில் கோவிட்-19 தொற்றுக்கள் வெடிக்கத் தொடங்கியதால் அரசாங்கங்கள் போலி "பூட்டுதல்களை" மீண்டும் அறிமுகப்படுத்தியபோதிலும் கடந்த கோடையில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதையும், பெரும்பாலான இளைஞர்கள் பள்ளிக்குச் செல்வதையும் நடைமுறைப்படுத்தி வைத்திருந்தனர். செப்டம்பரில் மக்ரோனின் அறிக்கையிலிருந்த "நாங்கள் வைரஸுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்பதை அவர்கள் தங்கள் முழக்கமாக எடுத்துக் கொண்டனர்.

இதன் விளைவுகள் இப்போது தெளிவாக உள்ளன. 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்ட பின்னர் பல தசாப்தங்களாக சிக்கன நடவடிக்கைகளால் வெறுமையாக்கப்பட்ட ஐரோப்பிய சுகாதார அமைப்புமுறைகள், கடந்த வசந்தகால பூட்டுதல்கள் ஆரம்பத்தில் கோவிட்-19 தொற்றுக்களை ஒரு நாளைக்கு சில ஆயிரங்களுக்கு கீழே கொண்டுவந்த பின்னரும் கூட வைரஸைக் கண்டுபிடிப்பதற்கும், தனிமைப்படுத்துவதற்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கும் இயலாது என்பதை நிரூபித்தது. .

அதன் செல்வத்தை பாதுகாப்பதில் உறுதியாகவும், பாரியளவிலான மரணத்திற்கு அலட்சியமாகவும், முக்கிய ஐரோப்பிய நாடுகளின் ஆளும் வர்க்கம் தங்கள் பாசிசக் கொள்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளை மூடக்கோரி மார்ச் மாதம் நடந்த வேலைநிறுத்தங்களால் ஆத்திரமடைந்த ஸ்பெயினில் உள்ள அதிகாரிகள், பாசிசத்திற்கும், “26 மில்லியன்” மக்களை சுட்டுக் கொல்லும் அதன் சதித்திட்டத்திற்கான தங்கள் விசுவாசத்தையும் அறிவித்தனர். மக்ரோனின் உள்துறை மந்திரியும், தீவிர வலதுசாரி Action française இன் முன்னாள் உறுப்பினருமான ஜெரால்ட் டார்மனன், பொலிஸைப் படமெடுப்பதைத் தடைசெய்து இஸ்லாத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்தி எதிர்ப்புக்களுக்கான பொலிஸாரின் அதிகரிக்கும் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துவதற்கும், முஸ்லீம்-விரோத வெறுப்புக்கு அழைப்புவிடுவதற்கும் மேடை அமைத்தார்.

ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சமீபத்திய மாதங்களில் இத்தாலிய பொதுத்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தங்கள், தனிப்பட்ட முறையில் கற்பிப்பதற்கு எதிராக பிரெஞ்சு ஆசிரியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தங்கள், ஸ்பெயினில் உள்ள ஆலைகளில் தொழில்துறை நடவடிக்கை மற்றும் மூடலுக்கு அச்சுறுத்தல், மற்றும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் தீவிரமயமாக்கல் அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த போராட்டத்தை நடத்த, அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.

தொற்றுநோய் ஒரு வரலாற்று திருப்புமுனையை குறிக்கிறது. ஐரோப்பிய முதலாளித்துவம் அதன் ஆளும் உயரடுக்கினர், அரசின் கருவிகளாக செயல்படும் அதன் பெருநிறுவன தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அதன் போலி இடது கட்சிகளடன் மதிப்பிழந்ததுள்ளது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். அவை தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவப்பட்ட கட்சிகளிலிருந்து சுயாதீனமாக இருக்க வேண்டும். உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக சர்வதேசரீதியான, விஞ்ஞான அடிப்படையிலான போராட்டத்தை நடத்த தொழிலாளர்களுக்கு அரச அதிகாரத்தை மாற்றுவதற்கு தயாரிக்க வேண்டும்.

Loading