Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

மக்கள் முன்னணித் துரோகம்

61. சோவியத் ஆட்சியின் கொள்கைகள் வெளிப்படையாகவே எதிர்ப்புரட்சிகர பண்பை எடுத்த நிலைமைகளின் கீழ் மையவாதப் போக்குகளின் தட்டிக்கழிப்பதற்கான சூழ்ச்சிகள் மற்றும் ஊசலாட்டங்கள் ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தை கீழறுத்தன. ஜேர்மனியில் ஹிட்லருக்கு எதிரான தொழிலாள வர்க்க கட்சிகளின் "ஐக்கிய முன்னணி"க்கான ட்ரொட்ஸ்கியின் அழைப்பை எதிர்த்துக் கொண்டிருந்துவிட்டு, நாஜிக்களின் வெற்றிக்கு பின்னர் ஸ்ராலினிஸ்டுக்கள் மற்றொரு புறத்திற்கு ஊசலாடினர். 1935ல் கம்யூனிச அகிலத்தின் ஏழாவது காங்கிரசில் அவர்கள் "மக்கள் முன்னணி" என்ற ஒரு புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்தனர். இது பாசிசத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் என்ற பெயரில் "ஜனநாயக" முதலாளித்துவக் கட்சிகளுடன் அரசியல் கூட்டணியின் உருவாகக்கத்திற்காக அழைப்பு விடுத்தது. இந்தக் கூட்டுக்களின் நடைமுறை விளைவு தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கும், தனிச்சொத்துடைமைக்கும் மற்றும் முதலாளித்துவ அரசிற்கும் அரசியல் அடிபணிய செய்வதாக இருந்தது. மக்கள் முன்னணியானது தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவுகரமானதாக இருந்ததேவேளை, சோவியத் அதிகாரத்துவத்தின் நலன்களுக்கு சேவை செய்தது உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிகளை தொழிலாள வர்க்கத்தால் நடத்தப்படும் புரட்சிகர போராட்டங்களை நசுக்குவதற்கான கருவிகளாக பயன்படுத்திக் கொள்வதற்கு வழங்குவதன் மூலம், முதலாளித்துவ ஆட்சிகளிடம் முகஸ்துதிகூறி தயவைப் பெறுவதற்கும் சோவியத் ஒன்றியத்தின் இராஜதந்திர நிலையை முன்னேற்றுவதற்கும் ஸ்ராலின் நம்பிக்கை கொண்டார். உண்மையில், இந்த மூலோபாயத்தின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் ஒரு குறுகிய இராஜதந்திர ரீதியிலான வெற்றிகள் என்னென்ன சாதிக்கப்பெற்றாலும், "மக்கள் முன்னணிவாதத்தால்" உருவாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் தோல்விகள் சோவியத் ஒன்றியத்தை ஆழமாக பலவீனப்படுத்தியது.

62. ஸ்ராலினிச கொள்கையானது, தொழிலாள வர்க்கத்தால் அதிகாரம் புரட்சிகரமுறையில் கைப்பற்றப்படுவதற்கு எதிராக நனவுபூர்வமாக திருப்பப்பட்டது. ஸ்ராலினிஸ்டுகள், சிறப்பாக மேற்கு ஐரோப்பாவில், தொழிலாள வர்க்கத்தின் வெற்றியானது, சோவியத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை தூண்டிவிடும் என்று அஞ்சினர். 1936 ஜூனில் ஒரு பொது வேலைநிறுத்தத்தால் வெடிப்புற்ற பிரான்சின் புரட்சிகர நிலைமைகளை நெரிப்பதற்கு ஸ்ராலினிஸ்டுகள் 1936-38 ல் உதவினர். பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியால் ஆதரிக்கப்பட்ட மக்கள் முன்னணி ஆட்சியானது, தொழிலாள வர்க்கத்தை உருக்குலைக்கச் செய்ததுடன் 1940 ஜூனில் ஹிட்லரிடம் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் சரணாகதி அடைவதற்கான வழியைத் தெளிவாக்கியது. ஸ்பானிய புரட்சியில் ஸ்ராலினிஸ்டுகள் அசானாவின் முதலாளித்துவ அரசாங்கத்தை ஆதரித்தனர். ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ சொத்துடைமை மற்றும் முதலாளித்துவ வர்க்க சட்டம் ஒழுங்கிற்கு பிரதான முண்டுகோலாய் ஆனது. அது சோசலிசப் புரட்சியை கண்டு ஆற்றொணா பீதியில் உள்ள வசதிபடைத்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் அதிகமாய் ஆட்சேர்ப்பு செய்தது. ஸ்ராலின், புரட்சிகர சோசலிசப் போக்குகளுக்கு எதிராக பயங்கரத்தை கட்டவிழ்த்து விட்ட GPU முகவர்களை ஸ்பெயினுக்குள் வெள்ளம்போல் குவித்தார். அவரது முகவர்கள் பார்சிலோனாவில் தொழிலாள வர்க்க எழுச்சியை ஒழுங்கமைத்தனர். அவர்கள் கட்சியின் தலைவர் நின்னை கடத்தி, சித்திரவதை செய்து கொன்றனர். பார்சிலோனாவில் மக்கள் முன்னணி அரசாங்கத்தற்குள் நுழைந்திருந்த நின் ஆல் பின்பற்றப்பட்ட மையவாத கொள்கைகளால் துயரார்ந்த வகையில் ஸ்ராலினிச வகையில் கலைக்கப்பட்டது எளிதானது. அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயகக் கட்சியையும் பிரங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட்டையும் ஆதரித்தது.

63. GPU உடன் முதலாளித்துவ தாராளவாதத்தின் கூட்டு என ட்ரொட்ஸ்கியால் விளக்கப்பட்ட மக்கள் முன்னணிவாதத்தின் நோக்கம் சோசலிசப்புரட்சியின் அச்சுறுத்தலுக்கு எதிராக முதலாளித்துவ சொத்துடைமையை பாதுகாப்பதாக இருந்தது. "ஜனநாயகத்திற்கு" வெற்றாரவார புகழுரைகள் தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீன சக்தியாக இல்லாமல் அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்குவதை எளிதாக்குவதற்கும், அதேவேளை "ஜனநாயக" அரசால் ஆற்றப்படும் வர்க்க நலன்களை மறைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன. எங்கெல்லாம் அரசியல் அதிகாரத்திற்காக தொழிலாள வர்க்கம் போராடுவதிலிருந்து தடுக்கப்படுகின்றதோ அங்கு ஜனநாயகம் மீதான உண்மையான அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டம் என்பது அழிவுகரமான வகையில் குறைவுடையதாகிறது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் எடுத்துக்காட்டியவாறு சோசலிசத்திற்கு போராடாமல் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான முயற்சியானது திவால் என்பதை நிரூபித்ததுடன் பேரழிவிலும் முடிவுற்றது. ஸ்பெயின் பிரான்ஸ் இரண்டிலும் ஸ்ராலினிஸ்டுகளால் திரும்பத்திரும்ப கூறப்பட்ட வாதங்களிலே புரட்சிகரக் கொள்கைகள் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தை "அச்சுறுத்தி" அவர்களை பாசிஸ்டுகளின் பக்கம் திரும்புமாறு செய்துவிடும் என்று இருந்தது. இவ்வாறு, தனிச்சொத்துடைமைமையை அச்சுறுத்தும் சோசலிசக் கோரிக்கைகளை விட்டொழிப்பதன் மூலமும் மக்கள் முன்னணி கட்டமைப்பிற்குள்ளே மிதவாத முதலாளித்து வர்க்கத் தலைவர்களுக்கு ஆதரவை வழங்குவதன் மூலமும் மட்டுமே நடுத்தர வர்க்கத்தின் ஆதரவை தொழிலாள வர்க்கம் தக்கவைத்துக்கொள்ள முடியும் என அவர்களால் கூறப்பட்டது. ட்ரொட்ஸ்கி இந்த தோல்விவாத மற்றும் கோழைத்தனமான அணுகுமுறையை உறுதியாக நிராகரித்தார், இது நடுத்தர வர்க்கங்களின் சமூக உளவியலைப் பற்றி முற்றுமுழுதாக தவறாக மதிப்பீடு செய்வதை வெளிப்படுத்துகிறது, அதீத நடவடிக்கைகளுக்கு அது "பயப்படுகிறது" என்பதன் காரணமாக தற்போதைய குட்டிமுதலாளித்துவ வர்க்கம் தொழிலாள வர்க்க கட்சிகளின் பக்கம் போகப்போவதில்லை என்று உறுதிப்படுத்துவது தவறு, மும்மடங்கு தவறு. நிலைமை அதற்கு மாறானது. கீழ்மட்டத்து நடுத்தர வர்க்கத்தினர், அதன் பெரும் மக்கள் திரளினர் தொழிலாள வர்க்க கட்சிகளை பாராளுமன்ற அமைப்புமுறைகளிலே மட்டுமே காண்கின்றனர். அக்கட்சிகளின் பலத்தில், போராடுதற்குரிய அவர்களின் திறனில், இம்முறை போராட்டத்தை முடிவுவரை கொண்டு செல்வதற்கான அவர்களின் தயாரான தன்மையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவ்வாறானால், அதன் பாராளுமன்ற சகாக்களால் இடது பக்கத்தில் தீவிரப்போக்கினை (இடது முதலாளித்துவ அரசியல் போக்கு) பதிலீடு செய்யும் தொந்திரவு மதிப்புடையதுதானா? அதுதான் பாதி சொத்துக்கள் பிடுங்கப்பட்ட, அழிந்துபோன மற்றும் அதிருப்தியுற்ற சொத்துடைமையாளர் சிந்திப்பதும் உணர்வதும் ஆகும். விவசாயிகள், கைவிஞைனர்கள், பணியாளர்கள் மற்றும் சிறுதொழில் செய்பவர்களின் உளவியலை புரிந்து கொள்ளாமல், சமூக நெருக்கடியிலிருந்து ஊற்றெடுக்கும் இவ்வுளவியலை புரிந்து கொள்ளாமல் ஒரு சரியான கொள்கையை நுட்பமாய் தயாரிப்பது என்பது இயலாததாகும். குட்டி முதலாளித்துவ வர்க்கமானது பொருளாதார ரீதியாய் சார்ந்திருக்கிறது அரசியல் ரீதியாய் துகள்துகளாயிருக்கிறது. அதனால்தான் அது ஒரு சுதந்திரமான கொள்கையை நிர்வகிக்க முடியாதிருக்கிறது. நம்பிக்கையுடன் ஊக்கமூட்டும் ஒரு ''தலைமை'' அதற்குத் தேவை. இந்த தனிநபர் அல்லது கூட்டுத் தலைமை, அதாவது, தனிநபரோ அல்லது கட்சியோ அடிப்படை வர்க்கங்களான முதலாளித்துவ வர்க்கம் அல்லது பாட்டாளி வர்க்கம் இவை இரண்டினுள் ஒன்று அதற்குத் தலைமை கொடுக்க முடியும். பாசிசம் சிதறுண்டுபோன மக்களை ஐக்கியப்படுத்தி ஆயுதபாணியாக்கும். அது மனிதத் தூசியிலிருந்து ஒரு போரிடும் படையை ஒழுங்கமைக்கும். இவ்வாறு அது குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கு அது ஒரு சுயாதீனமான சக்தியாக இருப்பதாக ஒரு பிரமையை கொடுக்கும். உண்மையில் அரசுக்கு அது ஆணையிடுவதாக கற்பனை செய்ய ஆரம்பிக்கிறது. இந்தப் பிரமைகளும் நம்பிக்கைகளும் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் தலையை திருப்பும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

ஆனால் குட்டிமுதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்கத்திடம் கூட ஒரு தலைமையைக் கண்டுகொள்ள முடியும்.[38]

64. கம்யூனிச அகிலம் சோவியத் அதிகாரத்துவத்தின் ஒரு கருவியாக உருமாறியது, வரிசைக்கிகரமமான களையெடுப்புக்கள் மற்றும் வெளியேற்றல்கள் ஆகியவற்றினால் உடன் இணைந்ததாக உள்ளது. அதில் புரட்சிகர சர்வதேசியத்தின் பாரம்பரியங்களை பிரதிநிதித்துவம் செய்யும் எந்த தலைவர்களும் அமைப்பின் விசுவானமான பிரதிநிதிகளால் பதிலீடு செய்யப்பட்டார்கள். இந்த உருமாற்றமானது 1923ல் தொடங்கி, அடிக்கடி ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக 1930கள் முழுவதும் தொடர்ந்தது. "மக்கள் முன்னணி" காலகட்டம் முழுவதும் கம்யூனிச அகிலம் உலகப் புரட்சி வேலைத்திட்டத்தை முற்றிலும் நிராகரித்தது. ஸ்ராலின் அதனை "சோக- நகைச்சுவை கொண்ட தவறானபுரிதல்" எனக் குறிப்பிட்டார். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஏகாதிபத்திய கூட்டாளிகளுக்கான சேவையின் அடையாளமாக இறுதியாக கம்யூனிச அகிலம் 1943ல் கலைக்கப்பட்டது.


[38]

Whither France (London: New Park Publications, 1974), p. 13.