Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

போரின் முடிவும் "இடைத்தடை நாடுகளும்"

96. போர் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கையில், ஐரோப்பிய முதலாளித்துவம் பொருளாதார ரீதியில் சீரழிக்கப்பட்டிருந்தது. முதலாளித்துவத்தின் பாரிய பகுதிகள் பாசிசத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் அரசியல் ரீதியாக மதிப்பிழந்திருந்தன. இந்நிலையில், சோவியத் ஆட்சியும் ஐரோப்பா முழுவதும் இருந்த அதன் ஸ்ராலினிச கட்சி தொடர்புகளும் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்தன. யுத்தம் முடிவுறும் தறுவாயிலும், முடிந்த உடனேயும் வெடித்தெழுந்த மக்கள் போராட்டங்களை திசை திருப்புவதற்கு, சோவியத் இராணுவத்தால் ஏற்பட்ட ஹிட்லர் துருப்புகளின் இராணுவ தோல்வியால் வலுவடைந்திருந்த ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தனர்; பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜேர்மனியில் ஆங்காங்கு இருந்த உள்ளூர் ஸ்ராலினிச கட்சிகள் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு ஆதரவளிக்குமாறும், எதிர்ப்பு போராளிகளை நிராயுதபாணி ஆக்குமாறும் மற்றும் தொழிலாளவர்க்கத்தின் எவ்வித சுயாதீன முயற்சியையும் ஒடுக்குமாறும் கிரெம்ளின் அறிவுறுத்தியது. பின்னர், கிரேக்கத்தில், முக்கிய உதவிகளுக்கான கிளர்ச்சி துருப்புகளை அழித்தொழித்த சோவியத் அதிகாரத்துவம், உள்நாட்டு யுத்தத்தில் முதலாளித்துவ துருப்புகளின் வெற்றியையும் உறுதிபடுத்தியது.

97. கிழக்கு ஐரோப்பாவில், இராணுவ பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், அமெரிக்காவின் கட்டுப்பாட்டின்கீழ் கைப்பாவை அரசாங்கங்கள் உருவாக்கப்படுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கிரெம்ளின் கருதியது. இதனால் சோவியத் ஒன்றியம் தனது அரசியல் கட்டுப்பாட்டின்கீழ் தொடர்ச்சியாக "இடைத்தடை நாடுகளை" (கிழக்கு ஜேர்மனி, போலந்து, ஹங்கரி, செக்கோஸ்லோவாக்கியா, பல்கேரியா மற்றும் ருமேனியா) நிறுவியது. ஆனால் இந்த அரசுகளில் நிறுவப்பட்ட அரச சொத்துடைமை (சிலவற்றில் பல ஆண்டுகள் தாமதப்பட்டன), படிப்படியான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இடம் முற்றிலும் அரசியல் உரிமை இழப்பால் சேர்ந்துகொள்ளப்பட்டது. ஸ்ராலினிச முறையிலான போலீஸ் அரச ஆட்சிகளின் உருவாக்கம், சோசலிசப் புரட்சியின் விரிவாக்கத்தை பிரதிபலிக்கவில்லை; மாறாக ஒரு தனிச்சிறப்பான மற்றும் தற்காலிக ஏற்பாட்டிற்கு மட்டுமே அது உதவியது; இறுதிப் பகுப்பாய்வில் அது போருக்குப் பிந்தைய ஐரோப்பாவை அரசியல் அளவில் ஸ்திரப்படுத்தும் பிற்போக்குத்தனமான நோக்கத்தைத்தான் கொண்டிருந்தது. யூகோஸ்லாவியாவில் தேசியமயமாக்கல் என்பது இடைத்தடை நாடுகளிலிருந்து சற்று மாறுபட்ட வகையில் ஏற்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து டிட்டோவின் கீழ் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியால் வழிநடத்தப்பட்ட எதிர்ப்பு இயக்கத்தினர் அதிகாரத்திற்கு வந்தனர். எவ்வாறிருப்பினும், இடைத்தடை நாடுகளில் இருந்ததை போலவே, டிட்டோவின் கீழ் உருவாக்கப்பட்ட ஆட்சியும், தொழிலாளவர்க்க வர்க்க சக்தியின் சுயாதீன அங்கங்களை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. எதிர்ப்பு இயக்கம் பிற ஸ்ராலினிச நாடுகளில் இல்லாத அளவிற்கு டிட்டோவிற்கு கூடுதல் அரசியல் நெறியையும், புகழையும் அளித்த போதினும், தொழிலாள வர்க்கம் அதன் அரசியல் அதிகாரத்தை பிரயோகப்படுத்துவதற்கான அதன் சொந்த சோவியத் முறையிலான அமைப்புக்களை தோற்றுவிக்க தடுக்கப்பட்டது. டிட்டோவின் ஆட்சி விரைவில் ஒரு போலீஸ் அரசாக சீரழிந்தது. இதில் டிட்டோ தாமே, பல தேசிய மற்றும் இன வட்டங்களின் அடிப்படையில் அமைந்திருந்த அதிகாரத்துவத்தின் முரண்பட்ட குழுக்களுக்கு இடையே மத்தியஸ்தராக பங்கு வகித்தார். இந்த முறையின் நலிந்த மற்றும் முக்கியமாக செயல்பட முடியாத தன்மை, 1980 இல் டிட்டோவின் மரணத்திற்கு பின்னர் நன்கு வெளிப்பட்டது.