Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

இஸ்ரேலின் உருவாக்கம்

108. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது, தேசிய அடிப்படையிலான அரசியல் மற்றும் சீர்திருத்த கோட்பாடு, பிரிட்டிஷ் பாதுகாப்பிலான பாலஸ்தீன பிரிவினை மூலம் சற்றே வேறுபட்ட வெளிப்பாட்டை கண்டது. ஐரோப்பிய யூதர்களில் மூன்றில் இரு பகுதிக்கு அண்மையிலான ஆறு மில்லியன் யூதர்களின் உயிரை பலி கொண்ட பேரிழப்புக்கு பின்னர், யூதர்கள் நாடாக உருவான இஸ்ரேல், சற்றே வெளியே தெரிய ஆரம்பித்ததிருந்த பாசிச கொடுமைகளால் துரத்தப்பட்ட உலகின் மில்லியன் கணக்கான மக்களால் அனுதாபத்துடன் பார்க்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், புறநிலை அர்த்தத்தில் கூறுவதானால், இன-மத விலக்கல் மற்றும் பாலஸ்தீனியர்களிடம் இருந்து அவர்களின் தாயகத்தைப் பறித்தல் ஆகிய கோட்பாட்டின் அடிப்படையிலான இஸ்ரேலின் உருவாக்கம் சமூகரீதியாகவும் மற்றும் அரசியல்ரீதியாகவும் பிற்போக்கானது. இஸ்ரேல் அரசு பின்னர் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைக் காக்கும் ஒரு முக்கிய இராணுவ அரண் கொண்ட அரசாக பணிபுரியும். பல சோசலிச மனப்பான்மை கொண்ட யூதர்களை சியோனிசத்தின் பக்கம் திருப்ப உதவிய ஸ்ராலினிசத்தின் செமிட்டிச எதிர்ப்பு மற்றும் அதன் காட்டிகொடுப்புகள் மூலம் யூதர்கள் மற்றும் அரேபிய மக்களின் இந்த துன்பியல் ஸ்ராலினிசத்தால் சாத்தியமாக்கப்பட்டது. 1920களில் பாலஸ்தீனிய கம்யூனிஸ்ட் கட்சி யூத மற்றும் அரேபிய தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக போராடியிருந்தது. எவ்வாறிருப்பினும், இரண்டாம் உலக யுத்தம் முடிவதற்கு முன்னர், இன வழியில் இரு பிரிவுகளாக உடைந்த PCP இல், ஸ்ராலினிச கட்சிகளின் தேசியவாத சீரழிவு அதன் பிரதிபலிப்பைக் கண்டது. யுத்தத்திற்கு பின்னர் ஏகாதிபத்தியத்துடன் செய்து கொண்ட அதன் உடன்படிக்கைகளின் பகுதியாக இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் சோவியத் அதிகாரத்துவம் அப்பிராந்தியத்தில் தொழிலாள வர்க்கத்திற்கான அதன் காட்டிகொடுப்பை முடித்தது. இதற்கு முற்றிலும் மாறாக, நான்காம் அகிலம் தொழிலாள வர்க்கத்திற்கான ஐக்கியத்தின் அடிப்படையில் ஒரு சர்வதேச நிலைப்பாட்டை முன்வைத்தது. 1948ல் அது எழுதியது:

யூத பிரச்சினை பற்றிய "சியோனிச தீர்வு" பிற்போக்கானது மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாதது என நான்காம் அகிலம் அதை நிராகரிக்கிறது. சியோனிசத்தை முற்றிலும் கைவிடுவதென்பது, அரேபிய உழைப்பாளிகளின் சமூக, தேசிய, விடுதலை போராட்டங்களுடன் யூதத் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு இன்றியமையாமை முன்நிபந்தனை என்று நான்காம் அகிலம் அறிவிக்கிறது. பொதுவாக காலனித்துவ நாடுகளில் ஒடுக்குகின்றோரை குடியமர்த்த அழைப்பு விடுவது எவ்வாறு பிற்போக்குத்தனமானதோ, அதேபோன்று பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள் குடியேற வேண்டும் என்ற கோரிக்கையும் முற்றிலும் பிற்போக்கானதாகும் என்று அது அறிவிக்கிறது. ஒரு தேசிய சிறுபான்மையினர் என்கிற வகையில் யூதர்களுக்கான முழு உரிமைகளுடன் கூடிய சுதந்திரமாக தேர்வு செய்யப்பட்ட அரசியல் சட்டசபை மூலம் ஏகாதிபத்தியம் வெளியேற்றப்பட்ட பின்னர் தான் குடியுரிமை பிரச்சினை மற்றும் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான உறவுகள் சரியான வகையில் தீர்மானிக்கப்பட முடியும்.[64]


[64]

Second World Congress of the Fourth International, “Struggles of the Colonial Peoples and the World Revolution,” Fourth International, July 1948, p. 157