Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

பிளவுக்கு பின்னர்: பூகோளமயமாக்கலின் முக்கியத்துவமும், தாக்கங்களும்

203. பிளவுக்கு பிந்தைய உடனடி விளைவாக, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கலைப்புக்கான மூலத்தையும் மற்றும் அபிவிருத்திகளையும் அனைத்துலகக் குழு விரிவான முறையில் ஆராய்ந்தது. 1973-1985ல் தொழிலாளர் புரட்சிக் கட்சியால் ட்ரொட்ஸ்கிசம் எவ்வாறு காட்டி கொடுக்கப்பட்டது என்பது அனைத்துலகக் குழு ஸ்தாபிதத்தின் போதும், பின்னர், 1963 இல் பப்லோவாதிகளுடன் சோசலிச தொழிலாளர் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட கோட்பாடற்ற மறு ஐக்கியத்திற்கு எதிரான அவர்களது போராட்டத்தில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் முன்பே பாதுகாத்திருந்த கோட்பாடுகளில் இருந்து அது பின்வாங்கலுடன் அவ்வமைப்பின் நெருக்கடி பிணைந்திருந்தது என்பதை எடுத்துக்காட்டியது. டேவிட் நோர்த்தால் எழுதப்பட்ட நாம் காக்கும் மரபியம்: நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கு ஒரு பங்களிப்பு என்பதை வெளியிட்டு ட்ரொட்ஸ்கிச இயக்க வரலாற்றின் மீதான மைக்கல் பண்டாவின் தாக்குதலுக்கு அனைத்துலகக் குழு பின்னர் பதிலளித்தது.

204. அனைத்துலகக் குழுவில் ஏற்பட்ட பிளவின் வரலாற்று வேர்கள் மற்றும் அரசியல் மூலங்களை ஆராய்ந்த பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உலக பொருளாதாரத்தில் மாற்றங்களின் மீது ஒரு முறையான ஆய்வை முன்னெடுத்தது, அது வர்க்கப் போராட்டங்களின் அபிவிருத்திகளுக்கும் மற்றும் நான்காம் அகிலத்தை கட்டுவதற்குமான புறநிலை அடித்தளங்களை வழங்கியது. 1987 ஜூலை இல் நடந்த அனைத்துலகக் குழுவின் நான்காம் பேரவையில், பின்வரும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன: 1) உலக பொருளாதார மற்றும் அரசியல் அபிவிருத்திகளின் எந்த புதிய போக்குகளுடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் வளர்ச்சி ஒரு நனவான வெளிப்பாடாகும்? 2) எந்த புறநிலைமையின் அடிப்படையில் ஒரு புதிய உலகப் புரட்சிகர நெருக்கடியின் அபிவிருத்தி எதிர்பார்க்கப்பட முடியும்?

205. இந்த கேள்விகளுக்கான அதன் பதிலில், நாடுகடந்த கூட்டுநிறுவனங்களின் வெடிக்கும் வளர்ச்சி நடவடிக்கையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் விசேட முக்கியத்துவத்தை நிலைநிறுத்தியது. அது குறிப்பிட்டதாவது:

முன்னெப்போதுமில்லாத வகையில் சர்வதேச சந்தையை ஒருங்கிணைத்தல் மற்றும் உற்பத்தியை சர்வதேசமயமாக்கல் என்பதே விளைவாக இருந்தது. அமெரிக்கா உட்பட, அனைத்து தேசிய பொருளாதாரங்களின் மீதும் உலகப் பொருளாதாரத்தின் வரம்பற்ற மற்றும் செயலூக்கமான மேலாதிக்கம் என்பதே நவீன வாழ்வின் அடிப்படை உண்மை ஆகும். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த சுற்றின் துல்லியத்தை உட்கொண்ட தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் தொலைத்தொடர்பில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தின. உண்மையில், அவை, பூகோள பொருளாதார ஒருங்கிணைப்பு செயல்முறையை விரைவுபடுத்தி உள்ளது. ஆனால் முதலாளித்துவத்திற்கு புதிய வரலாற்று பாதைகள் அமைத்து தராமல் இந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திகள், உலகப் பொருளாதாரத்திற்கும், முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையேயும், சமூக உற்பத்தி மற்றும் தனியார் சொத்துரிமைக்கு இடையேயும் முன்னெப்போதும் இல்லாத மட்டத்திற்கு அடிப்படை முரண்பாடுகளை உக்கிரப்படுத்தியுள்ளது.[110]

206. அனைத்துலகக் குழுவும் குறிப்பிட்டதாவது:

மாபெரும் நாடுகடந்த நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி பூகோளமயமாக்கல் இயல் நிகழ்ச்சியானது விடுவித்துக் கொள்ள முடியாத வகையில், தீவிர புரட்சிகர தாக்கங்களை கொண்டிருக்கும் மற்றொரு காரணியுடன் இணைந்துள்ளது: ஒப்பீட்டு ரீதியாகவும் முற்றுமுழுதாகவும் இரண்டு விதங்களிலும் அமெரிக்காவால் அதன் பூகோள மேலாதிக்கம் இழக்கப்பட்டிருத்தல் ஆகும். உலகின் முதன்மை கடன் அளிக்கும் நாடு என்றிருந்த நிலையிலிருந்து அமெரிக்கா கடன் வாங்குபவராக மாறியிருக்கும் மிகப்பெரிய வரலாற்று மாற்றமானது, தொழிலாளர் வாழ்க்கைத் தரங்களில் திடீர் வீழ்ச்சி எனும் உள்ளார்ந்த விளைவை ஏற்படுத்துகிறது மற்றும் அமெரிக்காவில் மாபெரும் புரட்சிகர மோதல் காலகட்டத்திற்கு கட்டாயம் இட்டுச் செல்லும்.[111]

207. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கவனத்தில் கொள்ளுமாறு அழைப்பு விடுத்த மற்றொரு அபிவிருத்தி இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய ஒழுங்கின் உடைவை பிரதிபலிக்கும் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான குரோதங்களின் வெடிப்பாகும். அந்த நேரத்தில், ஜப்பானின் விரைவான பொருளாதார வளர்ச்சி உடனடித் தேவையாக இருந்தது, எந்த அர்த்தமும் இல்லாமல் இருந்தாலும், இந்த புதிய பதட்டங்களுக்கு ஆதாரமாக இருந்தன. அமெரிக்கா மற்றும் ஜப்பானின் மூலதனத்திற்கு சாவல் விட ஏற்ற ஓர் ஐக்கிய ஐரோப்பிய சந்தையை உருவாக்குவதற்கான திட்டங்களின் அமுலாக்கம் பற்றி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு குறிப்பிட்டது. மேலும் அதிகளவிலான இலாப வீதங்களை பெறவேண்டி சர்வதேச மூலதன ஏற்றுமதியின் விளைவாக ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் பரந்து விரிந்திருக்கும் பாட்டாளிகளின் புரட்சிகர முக்கியத்துவத்தையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எடுத்துக் கூறியது.

208. நாடுகடந்த உற்பத்தியின் அபிவிருத்தி மற்றும் நிதி மற்றும் உற்பத்தியின் பூகோள ஒருங்கிணைப்பானது தேசிய அரசு ஒழுங்கு முறையில் பதிக்கப்பெற்ற சமூக மற்றும் அரசியல் அமைப்புக்கள் நிலைத்து நிற்பதை கீழறுத்தது. இந்த புதிய யதார்த்தம் பழைய தேசியவாத அடிப்படையிலான தொழிலாளர் அமைப்புகளுக்கு ஒருங்கிணைப்பு தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான புறநிலைமைகளை கொண்டிருந்தாலும், இந்த புரட்சிகர மூலவாய்ப்புவளத்திற்கு நனவான சர்வதேச மூலோபாய அடிப்படையை கொண்ட அமைப்புகளும், தலைமையும் தேவைப்படுகிறது. ஆனால் இதுபோன்றதொரு தலைமை இல்லாமல், பூகோள அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட மூலதனத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் தன்னைத்தானே பாதுகாத்து கொள்ள முடியாது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் 1988 இன் முன்னோக்கு ஆவணமான உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும் என்பதில் இதை விளக்கி இருந்தது.

நாடுகடந்த கூட்டு நிறுவனங்களின் பிரமாண்டமான வளர்ச்சியும் அதனால் ஏற்படும் முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளரீதியான ஒருங்கிணைதலும் முன்னொருபோதும் இல்லாத அளவில் உலக தொழிலாளர்களை எதிர்கொள்ளும் நிலைமைகளுள் ஒரே தன்மையை உண்டுபண்ணியுள்ளது. முதலாளிகளின் தேசிய குழுக்களுக்கிடையில் உலகச் சந்தையின் ஆதிக்கத்திற்காக நடக்கும் மூர்க்கமான போட்டி, ஆளும் வர்க்கங்கள் அவர்களது ''சொந்த'' நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்துவதன் மூலம், மிகக் கொடூரமான முறையில் உலகளாவிய செயல்முறைகள் மூலம் வெளிக்காட்டப்படுகிறது. மூலதனம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தொடுக்கும் தாக்குதலை மூர்க்கப்படுத்துவதில் நிலைநாட்டப்படுகிறது. தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல் நாட்டுக்கு பின் நாடாக பரந்த வேலையின்மை, சம்பள வெட்டு, வேகத்தை அதிகப்படுத்தல், தொழிற்சங்கத்தை உடைத்தல், சமூக நலன்களை வெட்டுதல், மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல்களை உக்கிரப்படுத்துவதன் ஊடாக அடையப்படுகிறது.[112]

209. முதலாளித்துவ உற்பத்தி வடிவங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் அதனுடன் வர்க்கப் போராட்ட வடிவங்களிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

நீண்டகாலமாக மார்க்சிசத்தின் அடிப்படைக் கூற்று, வர்க்கப் போராட்டமானது, வடிவத்தில் மட்டுமே தேசிய ரீதியானது என்றும் சாராம்சத்தில் அது சர்வதேச ரீதியான போராட்டம் என்றும் இருந்தது. என்றாலும் முதலாளித்துவ வளர்ச்சியின் புதியசிறப்பியல்புகளை கருத்தில் கொண்டால் வர்க்கப் போராட்டத்தின் வடிவம் கூட ஒரு சர்வதேசத் பண்பை கட்டாயம் எடுக்கும். தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படை ரீதியான போராட்டங்கள்கூட அதன் நடவடிக்கைகளை ஒரு சர்வதேச ரீதியில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை முன்வைக்கிறது. பொருளாதார வாழ்க்கையின் அடிப்படை ரீதியான உண்மை என்னவெனில், நாடு கடந்த கூட்டு நிறுவனங்கள் ஒரு பூர்த்தி செய்யப்பட்ட பண்டத்தை உற்பத்தி செய்வதற்கு பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் உழைக்கும் சக்தியைச் சுரண்டுகின்றன. அத்தோடு அவை தமது உற்பத்தியை அதியுயர்ந்த இலாபத்தை தேடி பல்வேறு நாடுகளில், பல்வேறு கண்டங்களில் உள்ள தமது தொழிற்சாலைகளுக்கிடையில் உற்பத்தியை விநியோகிப்பதோடு இடம் மாற்றுகின்றன........ இவ்வாறு முன்னொருபோதும் இல்லாத அளவு மூலதனத்தின் சர்வதேச இயக்கம் வெவ்வேறு நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்க இயக்கத்தின் அனைத்து தேசியவாத வேலைத்திட்டங்களையும் காலாவதியாக்கி, முழுமையாக பிற்போக்காக்கின்றது.[113]

இந்த அபிவிருத்திகளே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வளர்ச்சியுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்த புறநிலை அடிப்படையை அமைத்தளித்தது. வேர்க்கர்ஸ் லீக்கின் பதின்மூன்றாவது தேசிய காங்கிரசிற்கான, 1988 ஆகஸ்ட் அறிக்கையில் இந்தப் புள்ளி அபிவிருத்தி செய்யப்பட்டு, வலியுறுத்தப்பட்டது:

அடுத்த கட்ட பாட்டாளி வர்க்க போராட்டமானது சர்வதேச வளைவரைபாதையில் புறநிலை பொருளாதார போக்குகள் மற்றும் மார்க்சிஸ்டுகளின் அகநிலை செல்வாக்கு ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த அழுத்தத்தின் கீழ் கடுமையாக அபிவிருத்தியாகும் என நாங்கள் எதிர்நோக்குகிறோம். பாட்டாளி வர்க்கம் நடைமுறையில் ஒரு சர்வதேச வர்க்கமாக தன்னைத்தானே வரையறுத்துக் கொள்ள மேலும் மேலும் பேணிவளர்க்கும்; மற்றும் இந்த அமைப்பியல் போக்கை வெளிப்படுத்தும் கொள்கைகளை கொண்ட மார்க்சிச சர்வதேசியவாதிகள் இந்த செயல்முறையை மேலும் வளர்த்தெடுப்பார்கள் என்பதுடன் அதற்கு நனவுபூர்வமான வடிவத்தையும் அளிப்பார்கள்...[114]

210. பூகோள உற்பத்தியின் புதிய வடிவங்கள் உலக யுத்தத்தின் அபாயத்தை குறைக்காது, மாறாக அதை தீவிரப்படுத்தும் என நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு எச்சரித்தது. முதலாளித்துவ உற்பத்தியின் பூகோள பண்பு பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே பிரமாண்டமான அளவில் பொருளாதார மற்றும் அரசியல் குரோதங்களை தீவிரமாக்கி உள்ளது. மேலும் உலகப் பொருளாதாரத்தின் புறநிலை அபிவிருத்திக்கும், முதலாளித்துவ சொத்துடைமையின் முழு அமைப்பும் வரலாற்றுரீதியாக வேரூன்றியுள்ள தேசிய-அரசு வடிவத்திற்கும் இடையே மீண்டுமொருமுறை சமரசப்படுத்தவியலா முரண்பாடுகளை முன்னணிக்கு கொண்டு வந்துள்ளது. எந்த முதலாளித்துவ "தாய் நாட்டிற்கும்" கடப்பாடு கொண்டிருக்காத ஒரு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் துல்லியமான சர்வதேச பண்பு, அதை முழுமையான சமூக சக்தியாக மாற்றுகிறது. அது தேசிய-அரசு முறையின் விலங்கிலிருந்து நாகரீகத்தை விடுவிக்க முடியும்.

இந்த அடிப்படை காரணங்களால், முதலாளித்துவ முறைக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தை உலகளவில் அணிதிரட்டும் நோக்கத்துடனான ஒரு சர்வதேச மூலோபாய அடிப்படை இல்லாமல் எந்த நாட்டிலும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான எந்த போராட்டமும் உழைக்கும் வர்க்கத்திற்கு நீடித்த முன்னேற்றத்தை அளிக்க முடியாது, அது தானே அதன் இறுதி விடுதலைக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தொழிலாள வர்க்கத்தின் இந்த அவசியமான ஐக்கியப்படுத்தல் ஒரு உண்மையான சர்வதேச பாட்டாளி வர்க்கம் சார்ந்த, அதாவது புரட்சிகர கட்சியை, கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.

பல தசாப்தங்களாக விட்டுக் கொடுக்காத கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டங்களின் உற்பத்தியாக அத்தகைய ஒரே கட்சி இருக்கிறது, அது 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட நான்காம் அகிலமாகும், இன்று அது அனைத்துலக குழுவால் வழி நடத்தப்படுகிறது.[115]


[110]

Perspectives Resolution of the International Committee of the Fourth International (Detroit: Labor Publications, 1988), pp. 48-49.

[111]

Ibid, p. 49.

[112]

Ibid, p. 6.

[113]

The World Capitalist Crisis and the Tasks of the Fourth International (Detroit: Labor Publications, 1988) pp 6-7.

[114]

D. North, Report to the Thirteenth National Congress of the Workers League, in Fourth International, July- December 1988, p 38-9.

[115]

Ibid. pp 7-8.