பொலிஸ் வன்முறை மற்றும் மக்ரோனின் பொலிஸ் தண்டனைக்குட்படாமைச் சட்டத்திற்கு எதிராக பிரான்ஸ் முழுவதிலும் நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பொலிஸ் வன்முறையை எதிர்த்தும், பொலிஸை படப்பிடிப்பு செய்வதை குற்றவாளியாக்குவதற்கான மக்ரோன் அரசாங்கத்தின் சட்டத்தை எதிர்ப்பதற்காகவும் சனிக்கிழமை பிற்பகல் பிரான்ஸ் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இணைந்தனர். கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியான பொலிஸ் வன்முறை நடவடிக்கைகளுக்கு மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன. பாரிசில் நடந்த மிகப் பெரிய போராட்டமானது குடியரசு சதுக்கத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்கி, பாஸ்டி சதுக்கத்திற்கு அணிவகுத்துச் சென்றது. அரசாங்கத்தின் சொந்த குறைமதிப்பீட்டின்படி 46,000 பேர்கள் மட்டுமே பாரிஸில் இருந்தனர் என்று கூறியது, ஆனால் உண்மையான எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருந்தது என்று படங்கள் மற்றும் வீடியோக்கள் காட்டுகின்றன. போர்தொவிலும், லீல் இலும் 10,000 க்கும் மேற்பட்டோர்களும், மார்சைய், லியோன் மற்றும் துலூஸில் ஆயிரக்கணக்கானவர்களும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டங்கள் மீது ஒரு வன்முறையான ஒடுக்குமுறையுடன் விடையிறுக்கும் வகையில், குறிப்பாக பாரிசில் நூற்றுக்கணக்கான கலகப் பிரிவுப் போலீசார் நிறுத்தப்பட்டனர். இதில் AFP உடன் பணிபுரியும் 24 வயதான சிரிய சுயேச்சைப் புகைப்படக் கலைஞர் அமீர் அல்-ஹால்பி, பாஸ்டி சதுக்கத்தில் அடித்துத் தாக்கப்பட்டார். எல்லைகளற்ற செய்தியாளர்களின் பொதுச் செயலாளர் கிறிஸ்டோப் டெலோயர் என்பவர் மருத்துவமனையில் வைத்து தலையிலும் முகத்திலும் காயம் கட்டப்பட்டதுடன் அல்-ஹால்பி இன் ட்டுவிட் ஒன்றை சனிக்கிழமை மாலை வெளியிட்டார், அவர் முகத்தில் ஒரு போலீஸ் தடியால் தாக்கப்பட்டதாக கூறினார்.

போலீஸ் தாக்கும்போது, ஒரு குறுகிய தெருவில் அல்-ஹல்பியுடன் இருந்த மற்றொரு பத்திரிகையாளர் கேப்ரியல் செசார்ட், “நாங்கள் புகைப்படக் கலைஞர்களாக அடையாளம் காணப்பட்டு சுவருக்கு எதிராக மாட்டிக்கொண்டோம். ‘பிரஸ், பிரஸ்!’ என்று நாங்கள் கத்தினோம், ஆர்ப்பாட்டக்காரர்களின் பக்கத்திலிருந்து எறிபொருள்கள் வீசப்பட்டன. பின்னர் போலீசார் கைகளில் தடிகளுடன் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். ஒரு ஹெல்மெட் அல்லது ஒரு கைப்பட்டியை அணியாத ஒரே புகைப்படக்காரர் அமீர் மட்டுமே. நான் அவரை என் பார்வையில் இருந்து இழந்தேன், பின்னர் அவரை மக்கள் சூழ்ந்திருப்பதைக் கண்டேன், அவரது முகம் இரத்தத்திலும் கட்டுகளினாலும் மூடப்பட்டிருந்தது."

மற்றொரு வீடியோவில், ஒரு கலகப் பிரிவுப் போலீஸ் அதிகாரி மற்றொரு பத்திரிகையாளரின் முகத்திற்கு நேரே ஒரு பீன் பேக் துப்பாக்கி முனையை காட்டுவதை காணலாம்.

திங்களன்று தேசிய சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட "விரிவான பாதுகாப்பு" சட்டம் (“global security” law), ஜனவரியில் செனட்டிற்குச் செல்லும், ஒரு போலீஸ்காரரின் முகத்தை வெளியிடும் ஒரு வீடியோவை வெளியிட்டால், 45,000 யூரோக்கள் அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைதண்டனையும் வழங்கப்படும். இன்னும் அதிகமாக, கடமையில் இல்லாத போது தங்களுடைய துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல போலீஸிற்கு அதிகாரங்களை அது விரிவுபடுத்துகிறது, அவர்கள் ஒரு ஆயுதம் தரித்து எந்தப் பொது இடங்களிலும் நுழைய மறுக்கப்படக் கூடாது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள போலீசார் போராட்டக்காரர்களை படம் எடுக்க ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு மூடிமறைப்பு அனுமதியையும் இந்தச் சட்டம் வழங்குகிறது.

கடந்த வாரத்தில் நடந்த இரண்டு போலீஸ் வன்முறை சம்பவங்கள் குறித்தும் சனிக்கிழமை நடந்த மக்கள் அணிதிரள்வுக் கண்டனப் போராட்டம் கோபத்தை வெளிப்படுத்தியது. திங்களன்று கலகப் பிரிவுப் பொலிசார் குடியரசு சதுக்கத்தில் ஒரு வெறியாட்டத்தை நடத்தினர். வீடுகள் இல்லாமை, அரசாங்க ஆதரவு மற்றும் அவர்களின் புகலிட கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்காமையை எதிர்த்து 450 முதல் 500 அகதிகளால் அமைக்கப்பட்ட ஒரு அமைதியான முகாம் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர்.

வியாழக்கிழமையன்று, Loopsider இணையம் அவருடைய பாரிஸ் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் கறுப்பு இசை தயாரிப்பாளர் மிஷேல் செக்லரை கொடூரமாக போலீஸ் தாக்கிய வீடியோவை வெளியிட்டது. வீடியோ இப்போது 20 மில்லியனுக்கும் அதிகமான முறைகள் பார்க்கப்பட்டுள்ளது. அதில், 20 நிமிடங்களுக்கும் மேலாக பொலிசார் அவரைத் தாக்குவதையும், பலமுறை உதைத்து, குத்துவதையும், தலையிலும் முகத்திலும் ஒரு போலீஸ தடியினால் தாக்கியதையும், அவரை “அழுக்கு நீக்ரோ” என்று அழைப்பதையும் சிசிடிவி காட்சிகளைப் பார்த்து செக்லர் நிமிடத்திற்கு நிமிடம் விவரிக்கிறார்.

சி.சி.டி.வி காட்சிகளுடன் வீடியோ வழங்கப்பட்டபோது அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு முன்னர், காவல்துறையினர் செக்லரை 48 மணி நேரம் சிறையில் தள்ளினர் மற்றும் அவர்களை தாக்கியதாக பொய்யாக குற்றம் சாட்டினர்.

"விரிவான பாதுகாப்பு" சட்டம் சரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அதாவது மக்கள்தொகைக்கு எதிரான வன்முறையைப் பயன்படுத்த காவல்துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட தண்டனைக்குட்படாமையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில், "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இரயில்வே வேலைநிறுத்தங்கள் மீதான மிருகத்தனமான ஒடுக்குமுறைகளுக்கு ஒரு போலீஸ்காரர் கூட குற்றஞ்சாட்டப்படவில்லை, அந்த நேரத்தில் டஜன் கணக்கான மக்கள் கையெறி குண்டுகளினால் மற்றும் பீன் பாக் தோட்டாக்களால் அவர்கள் சுடப்பட்டு தங்களுடைய கண்களையும் மற்றும் கைகளையும் இழந்தனர்.

மக்ரோன், மக்களின் எதிர்ப்பு வெடிப்பை முகங்கொடுத்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று முகநூலில் ஒரு அறிக்கையை வெளியிட்டார், செக்லர் மீதான தாக்குதல் "எங்களுக்கு அவமானத்தைக் கொண்டு வருகிறது" என்று குறிப்பிட்டார். அமைதியான போராட்டங்களுக்கு எதிரான வழக்கமான மக்ரோனின் போலீஸ் வன்முறையை சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் கண்டனம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் மக்ரோன் "எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமைக்கு" தனது ஆதரவை அபத்தமாக அறிவித்தார், மேலும் "ஒவ்வொரு குடிமகனும் அனைத்து வன்முறை மற்றும் அழுத்தத்திலிருந்து பாதுகாப்பாக தனது நம்பிக்கைகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்த முடியும்" என்றும் அறிவித்தார்.

செக்லரை அடித்ததில் ஈடுபட்ட மூன்று போலீசார் தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். திங்களன்று அகதி முகாமுக்கு எதிரான தாக்குதல் குறித்து பொலிஸை விசாரணை நடத்தும் உள்ளக பொலிஸ் புலனாய்வாளர்களால் (IGPN) பத்திரிகையாளர் ரெமி புய்சின் தாக்குதல் உட்பட ஒரு உள்ளக மறு ஆய்வை அரசாங்கம் அறிவித்துள்ளது ஆனால் அவர்களுடைய அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீக்கிவிடுவார்கள்.

வியாழக்கிழமையன்று, உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன் இரவு 8 மணிக்கு France2 தொலைக்காட்சி மாலை செய்தி நேர்காணலில் IGPN விசாரணையில் சாட்சியமளிக்க புய்சின் மறுத்துவிட்டார் என்று பொய்யாகக் கூறினார், யாரும் அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை என்று கூறி ஒரு ட்டுவிட்டில் புய்சின் அதை மறுத்துள்ளார்.

சோசலிஸ்ட் கட்சி (PS), பசுமைக் கட்சி மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சி ஆகியவைகள் ஆர்ப்பாட்ட எதிர்ப்பு இயக்கத்தில் தலையிட்டு, பொலிஸ் சீர்திருத்தத்திற்கான வெற்று அழைப்புக்களுக்குப் பின்னே திருப்பி விட்டுள்ளன. இக்கட்சிகள் அனைத்தும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்புக்கு எதிராக ஒரு பொலிஸ் அரசைக் கட்டமைக்க ஆதரவு கொடுத்தன. மற்றும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் கீழ் சோசலிஸ்ட் கட்சி இரண்டு ஆண்டு கால அவசரகால நிலையை திணிப்பதற்கு ஆதரவு கொடுத்தன. தொழிலாள வர்க்கக் கோபம் வெடிப்பதற்கான சாத்தியக் கூறையும், முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தின் அபிவிருத்தியடையும் வாய்ப்பையும் குறித்து அவர்கள் பீதிகொண்டுள்ளனர்.

ஹாலண்ட் ட்டுவிட்டரில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "விரிவான பாதுகாப்பு" சட்டத்தை திரும்பப் பெற மக்ரோனுக்கு அழைப்பு விடுத்து, "புரிந்து கொள்ளமுடியாத மற்றும் வன்முறையை உருவாக்குவதற்கான ஆபத்தின் போது" சட்டத்தை திரும்பப் பெறுவதில் "அதிக மரியாதை" உள்ளது என்று சேர்த்துக் கொண்டார்.

"[பாரிஸ் பொலிஸ்] தலைமை அதிகாரியான [Didier] Lallement ஐ நீக்குதல் மற்றும் [ஆளும்] பெரும்பான்மைகளில் கூட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட சட்டத்தை திரும்பப் பெறுதல்" மூலம் "விரிவாக்கமின்மை திசையில் செல்ல" LFI கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Adrien Quatennens டார்மனனுக்கு அழைப்பு விடுத்தார்."

சனிக்கிழமையன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மெலோன்சோன், "காவல்துறையை கையில் எடுத்துக்கொள்வதற்கும், இன்னும் தெளிவாகக் கூறினால், காவல்துறையினரின் மறுசீரமைப்பிற்குமான நேரம் இது" என்று கூறினார். ஒரு "ஜனநாயக" அரசாங்கத்தில் காவல்துறை "சமாதானத்தின் பாதுகாவலர்களாக" இருக்கும் என்று அறிவிப்பதைத் தவிர, அத்தகைய "மறுசீரமைப்பு" என்ன என்பது குறித்து அவர் எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை.

மெலோன்சோனின் நோக்கம் எதிர்ப்புக்கு எதிராக, கீழிருந்து மக்களின் பெரும் செல்வத்தை குவித்திருக்கும் ஒரு சிறிய முதலாளித்துவ உயரடுக்கின் நலன்களைப் பாதுகாக்கும் கடமையுள்ள முதலாளித்துவ அரசின் நேரடி ஒடுக்குமுறை ஆயுதங்களாக, பொலிஸின் இன்றியமையாத வரலாற்று பாத்திரத்தை தொழிலாளர்களிடம் இருந்து மறைப்பதாகும். ஒரு ஏதோச்சதிகார போலீஸ் அரசை கட்டமைப்பதில் மக்ரோனின் விரைவான திருப்பம் உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் சர்வாதிகாரத்தை நோக்கிய திருப்பத்தின் ஒரு பகுதியாகும்: பிரேசில் இருந்து மற்றும் அமெரிக்கா, ஜேர்மனி வரை, ஜேர்மனியில் பாசிச ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி, ஜேர்மனியில் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சிக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோயினால் தீவிரமாக்கப்பட்ட சமூக சமத்துவமின்மையின் பிரமாண்டமான வளர்ச்சியினால் இந்த நிகழ்ச்சிப்போக்கு எரியூட்டப்படுகிறது. ஆளும் வர்க்கத்தின் இந்த மூலோபாயத்திற்கு இருக்க வேண்டிய விடையிறுப்பு, முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கும், தொழிலாளர் அரசுகளை ஸ்தாபிப்பதற்கும், நிதிய மேற்தட்டின் செல்வத்தை பறிமுதல் செய்து, சமூகத் தேவையை பூர்த்தி செய்ய பொருளாதாரத்தை மறுஒழுங்கமைக்கவும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச புரட்சிகர இயக்கத்தைக் கட்டியமைக்க வேண்டியதாகும்.

Loading