Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
wsws : Tamil
 
வரலாற்றின் படிப்பினைகள்
Home
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10

 

 

 

வரலாற்றின் படிப்பினைகள்

8. ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டம், இருபதாம் நூற்றாண்டின் புறநிலை அனுபவங்கள் படிப்பினைகள் பற்றிய ஆய்வினை அடித்தளமாகக் கொள்ள வேண்டும். முதலாம், இரண்டாம் உலக யுத்தங்கள் இரண்டும், இறுதி ஆய்வுகளின்படி முக்கிய ஏகாதிபத்திய வல்லரசுகளிடையேயான பொருளாதார, அரசியல் தகராறுகளை தீர்க்கவே தொடுக்கப்பட்டன. 1914ல் வெடித்த யுத்தமானது, 19-ம் நூற்றாண்டின் கடைசி முப்பதாண்டுகளில் முதலாளித்துவ அமைப்பின் தன்மையில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்களில் வேரூன்றியிருந்தது, 1870பதுகளுக்கு முன்னர் முதலாளித்துவத்தின் பண்பாக விளங்கிய சார்பு ரீதியான சுதந்திரப் போட்டியானது, பிரமாண்டமான கார்ட்டல்கள், டிரஸ்டுகளின் கைகளில் குவிந்த பொருவாரியான உற்பத்தியால் பதிலீடு செய்யப்பட்டது. நிதி மூலதனத்தின் சகாப்தம் வந்துவிட்டது. தேய்ந்து வந்த காலனித்துவம், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளால் உற்பத்தி செய்யப்பட்ட பெருவாரியான பண்டங்களை நுகர்வதற்கு பாதுகாக்கப்பட்ட புதிய சந்தைகளுக்கான தேவை எழுந்ததால், திடீரென வெடித்துச் சிதறும் மறுமலர்ச்சிக்குள்ளாகியது. பிரெஞ்சு ஏகாதிபத்திய இயக்கத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவரான பெரி 1880களில் "ஐரோப்பிய நுகர்வு உறிஞ்சப்பட்டு வருகின்றது" என்று எச்சரித்தார். "பூகோளத்தின் ஏனைய பாகங்களில் பெருமளவிலான புதிய நுகர்வோர்களை அதிகரிப்பது அவசியம், இல்லையேல் நாம் நவீன சமுதாயத்தை திவால் நிலைக்குள் தள்ளி விடுவதோடு ஒருவரால் கணித்துச் சொல்ல முடியாத விளைபயன்களைக் கொண்ட ஒரு பெரும் புரட்சிகர எழுச்சியின் சமூக முடிவுக்கான இருபதாம் நூற்றாண்டின் உதயத்துக்கு தயார் செய்வோம்" என்றார்.

9. ஐரோப்பாவில் மாபெரும் சக்திகள் -முக்கியமாக பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகியன - ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு, ஆசிய மக்களைக் கைப்பற்றிச் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டு காலனித்துவ பேரரசுகளை ஈட்டிக்கொண்டன. இந்நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன்னர், பெரிதும் இளைய முதலாளித்துவ சக்திகளான அமெரிக்காவும் ஜப்பானும் தமது சொந்த ஏகாதிபத்திய விரிவாக்கல் வேலைத் திட்டங்களில் இறங்கின. உத்தியோகபூர்வமான வெளிப்பூச்சு நாகரீகங்களுக்கு இடையேயும் ஏகாதிபத்திய ராஜதந்திரமானது, தமது உலகப் பொருளாதார மூலோபாய அந்தஸ்தை பலப்படுத்தும் பொருட்டு தேசிய முதலாளித்துவக் குழுக்களிடையே ஈவிரக்கமற்றதும் ஆளை ஆள் கொல்வதுமான போராட்டங்களை மையமாகக் கொண்டிருந்தது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான போட்டா போட்டிகளால் ஆயுத தளவாடங்கள்மேல் பிரம்மாண்டமாகச் செலவிடப்பட்டன, தமது நலன்களின் அடிப்படையில் இடம் பெற்ற ஒவ்வொரு மோதலின் பின்னணியிலும் அகில ஐரோப்பிய யுத்த மட்டுமின்றி உலகளாவிய யுத்தத்தின் சாத்தியமும்கூட மறைந்திருந்தது. தமது மேலாதிக்கத்தினை நிலைநாட்ட ஏகாதிபத்திய வாதிகளிடையே இடம்பெற்ற இடைவிடாத போராட்டத்தில், தூர ஒதுக்குப் பிராந்தியங்கள் கூட மூலோபாய சிறப்பு முக்கியத்துவம் பெற்றன. அவை அடிக்கடி அவற்றின் பொருளாதார முக்கியத்துவங்களுக்கு முக்கியத்துவம் தந்தன. ஏகாதிபத்திய சக்திகள் மிகவும் சிறிய மேம்பாட்டிற்காகக் கூட தத்தமக்கிடையே சூழ்ச்சி செய்து வந்ததால், கூட்டுக்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்தன. 19-ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான பகுதியில் 'நண்பர்களாக' விளங்கிய பிரிட்டனும், பிரான்சும், வடஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் போட்டி நலன்களின் தாக்கத்தால் எதிரிகளாக மாற்றப்பட்டன. எகிப்தில் பிரிட்டனின் மேலாதிக்கத்தை அங்கீகரிக்கும் பிரான்சின் தீர்மானம் மட்டுமே இரண்டு சக்திகளையும் யுத்தத்தின் விளிம்பில் இருந்து இழுத்தெடுத்து வந்ததோடு, திரும்பவும் அவர்களை "நண்பர்களாக" மாற்றியது. இதே சமயத்தில் பிரான்சுக்கு எதிராக ஐக்கியப்பட்ட பிரிட்டனும் ஜேர்மனியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடும் எதிரிகளாக மாறினர். சமாதானத்தைப் பேண ஏகாதிபத்தியம் தங்கி இருந்த "சமநிலை சக்தியை" மோதல்களின் தாக்கங்கள் உடைத்து எறிந்தன. சூடேறிய பால்கனில் ஒரு சிறிய சம்பவம் -1914 ஜுனில் செரஜீவோ நகரில் ஆஸ்திரியப் பிரபு ஒருவர் படுகொலை செய்யப்பட்டது- உலக யுத்தத்தினை வெடிக்கச் செய்தது.

10. புரட்சிகர சோசலிச இயக்கத்தின் அபிவிருத்தியானது, ஏகாதிபத்தியத்துக்கும் அதன் யுத்த வெறிக் கொள்கைகளுக்கும் எதிரான போராட்டத்துடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது. 1889-ல் நிறுவப்பட்ட இரண்டாம் அகிலத்தின் தலைசிறந்த பிரதிநிதி, ஏகாதிபத்தியம் ஒரு ரத்தம் தோய்ந்த பேரழிவுக்கு தயாரிப்பு செய்து வருவதாகவும், அது தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிகரப் போராட்டத்தினால் மட்டுமே தவிர்க்ப்பட முடியும் எனவும் எச்சரிக்கை செய்தார். 1911ல் ரோசாலுக்சம்பேர்க் பிரகடனம் செய்ததாவது: "உலக அரசியலும் இராணுவ வாதமும், சர்வதேச முரண்பாடுகளை அபிவிருத்தி செய்யவும் தீர்க்கவும் செய்கின்ற முதலாளித்துவத்தின் ஒரு குறிப்பிட்ட விதிமுறையே அன்றி வேறு ஒன்றும் அல்ல.... வர்க்கப் பகைமைகளை மென்மைப்படுத்தலாம், மழுங்கடிக்கலாம், முதலாளித்துவப் பொருளாதார அராஜகங்களை அடக்கி வைக்கலாம் என்று யார் நம்புகிறார்களோ, அவர்களே இந்த சர்வதேச மோதல்களைத் தணிய வைக்கலாம், ஆறச் செய்யலாம் அல்லது கலைக்கலாம் என நினைக்க முடியும். முதலாளித்துவ அரசுகளின் சர்வதேசப் பகைமைகள் வர்க்கப் பகைமைகளின் அன்பளிப்புக்களே. உலக அரசியல் அராஜகம், முதலாளித்துவ உற்பத்தி முறை அராஜகத்தின் மறுபக்கமே அன்றி வேறு அல்ல. "(ஒரு புரட்சிகர சர்வதேசியத்துக்கான லெனினின் போராட்டம், பாத் பைண்டர் அச்சகம், நியூயோர்க் 1981)

இரண்டாம் அகிலத்தின் மாநாடுகளில், அதிலும் குறிப்பாக 1907ல் ஸ்ருட்கார்ட், 1912ல் பாசில் மாடுகளில், யார் முதலில் சுடுகிறார்கள் என்பதைக் கணக்கில் கொள்ளாமல் ஏகாதிபத்தியப் போருக்கும் அதனைத் தொடுக்கும் அரசாங்கங்களுக்கும் எதிராக உறுதி எடுக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏகமனதாக பாசிலில் அங்கீகரிக்கப்பட்ட அறிக்கை அழைப்பதாவது; "ஏகாதிபத்தியத்தின் முதலாளித்துவவாதிகளுக்கு எதிராக சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஐக்கியத்தின் சக்தியை அணிதிரட்ட எல்லா நாடுகளின் தொழிலாளர்களையும் அழைக்கிறோம்." அது போரைத் தொடுத்தல் புரட்சிகர போராட்டங்களின் எழுச்சிக்கு வழிவகுக்கும் என முதலாளித்துவவாதிகளை எச்சரித்தது.ஆனால் இந்த வார்த்தைகளின் உள்ளடக்கம், இரண்டாம் அகிலத்தின் கட்சிகளுக்குள் ஏற்பட்ட சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியால் குன்றி விட்டது. இந்தக் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை மேலும் மேலும் வெளிப்படையாக முதலாளித்துவ 'தாய்நாட்டின்' நலன்களுடன் இனங்காட்டிக் கொண்டன. எனவே 1914 ஆகஸ்டில் யுத்தம் வெடித்ததும் இரண்டாம் அகிலத்தின் முக்கியக் கட்சிகள், தமது பிரகடனம் செய்யப்பட்ட கொள்கைகளை மீறி தமது முதலாளித்துவ அரசாங்கங்களின் யுத்தக் கடன்களுக்கு ஆதரவாகத் தத்தம் பாராளுமன்றங்களில் வாக்களித்தனர். இது இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியைக் குறித்தது. இந்த ஏகாதிபத்திய தேசிய வெறிஅலைக்கு சந்தர்ப்பவாதிகளின் வெட்கங்கெட்ட அடிபணிவினை விரல் விட்டு எண்ணக்கூடிய சோசலிஸ்டுகளே எதிர்த்தனர்; இந்த புரட்சிகர சர்வதேசியவாதிகளில் மிகத் தொலைநோக்குக் கண்ணோட்டம் மிக்கவராக போல்ஷேவிக் கட்சியின் தலைவரான லெனின் விளங்கினார். அவர் மூன்றாம் அகிலத்தினை நிறுவுவதற்கான அழைப்பினை விடுத்தார்.

[முதலாம் உலக யுத்தத்தின் தாக்கங்கள்]