Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
wsws : Tamil
 
போருக்குப் பிந்தைய ஒழுங்குமுறை
Home
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10

 

 

 

போருக்குப் பிந்தைய ஒழுங்குமுறை

16. முதலாம் உலக யுத்தத்தினைத் தொடர்ந்து அடைய முடியாது போய்விட்டதை -அதாவது முதலாளித்துவ ஒழுங்கு முறையைப் புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும் அடிப்படையான மாறுபட்ட சூழ்நிலையிலும், தாக்குப்பிடிக்கும் சர்வதேச சமநிலையை- அடைவதில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் முதலாளி வர்க்கம் வெற்றி கண்டது. முதலாம் உலக யுத்தத்தின் வெடிப்பு முதலாளித்துவம் ஒரு உலக அமைப்பு என்ற முறையில் அதன் விவகாரங்களில் நீண்ட நிலையற்ற காலப்பகுதியின் தொடக்கத்தைக் குறித்தது. உலகப் பொருளாதாரத்தின் இடைநிலை செயல்பாட்டு பகுதிகளுக்கிடையிலான, முதலாளித்துவ அரசுகளுக்கிடையிலும், முதலாளித்துவ நாடுகளின் உள்ளே சமூக வர்க்கங்களுக்கிடையிலும் உறவுகளை ஒழுங்குபடுத்தும் நுண்மையான சிக்கலான பொறி முறையில், முன் நடந்திராத விதத்திலும் கட்டுப்படுத்த முடியாத வகையிலும் உடைவு ஒன்று ஏற்பட்டது, இரண்டாம் உலக யுத்தத்தினைத் தொடர்ந்து அது இறுதியாகக் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்படும் வரை, உலக முதலாளித்துவ அமைப்பு முப்பதாண்டுகளாக உருகி வந்தது.

17. சமநிலையை மீண்டும் கொண்டு வருவதற்கான அவசியமான அரசியல் முன் நிபந்தனைகள், கிரெம்ளின் அதிகாரத்துவம் மற்றும் அதன் துணைக்கோள் கட்சிகளின் துரோகத்தினால் வழங்கப்பட்டன. அவர்கள் ஐரோப்பாவிலும் சர்வதேச ரீதியாகவும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களை மும்முரமாக எதிர்த்து நாசமாக்கினர். பிரான்சிலும் இத்தாலியிலும் ஸ்ராலினிஸ்டுகள் தமது சக்தியை செல்வாக்கிழந்த முதலாளி வர்க்கத்தை புனருத்தாரணம் செய்வதிலும் முதலாளித்துவ அரசினை மறு நிர்மாணம் செய்வதிலும் செலவிட்டனர், கிழக்கு ஐரோப்பாவில் அவர்களின் பாத்திரம் முக்கியத்துவம் குறைந்ததாக இருக்கவில்லை. அங்கே மேற்கு ஐரோப்பாவைப் போலவே சோவியத் யூனியனின் அரசியல் தலையீடு, எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்துக்கு எதிராகவும் ஒரு நிஜ சோசலிசப் புரட்சியின் சாத்தியத்திற்கு எதிராகவும் திருப்பப்பட்டது. தொழிலாளர் இயக்கத்தினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை சோவியத் அதிகாரத்துவத்திற்கும் உலக ஏகாதிபத்தியத்திற்கும் இடையேயான பேரங்களுக்கு கீழ்ப்படுத்துவதிலேயே கிரெம்ளின் முக்கிய அக்கறை காட்டியது. இறுதியில் கிரெம்ளின், தான் முதலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக தூரம் செல்லுமாறு தள்ளப்பட்டது -அதாவது ஸ்ராலினிசக் கட்சிகள் ஆட்சியைத் தங்கள் கைகளுக்குள் எடுக்குமாறு கட்டளையிடப்பட்டன. உள்ளூர் முதலாளி வர்க்கத்தின் உடைமைகளை பறிமுதல் செய்தது பற்றி ஏகாதிபத்திய வாதிகளின் முறைப்பாடுகள் கிளம்பிய போதிலும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச மேலாதிக்கம், ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சி கண்டதன் பின்னர் இப்பிராந்தியத்தில் நிலவியிராத ஒரு குறிப்பிட்ட அரசியல் ஒழுங்கினைத் திணிக்க காரணமாகியது. இந்தப் பிராந்தியத்தில் ஆழமாக வேரூன்றிய அதன் சமூக முரண்பாடுகள், 1990-- 1945க்கு இடையே ஐரோப்பாவின் பொருளாதார ஸ்திரமின்மைக்கு பெருமளவில் பங்களிப்பு செய்தன. அத்தோடு ஐரோப்பா பிரிவினை செய்யப்பட்டது சிறப்பாக ஜேர்மனி பிரிவினை செய்யப்பட்டது ஏகாதிபத்தியவாதிகளின் உடனடி நலன்களுக்கு சேவகம் செய்தது. முப்பது ஆண்டுகளுக்கும் குறைவான கால இடைவெளிக்குள் இரண்டு உலக யுத்தங்களுக்கு இட்டுச்சென்ற முரண்பாடுகளைத் தணிக்க எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதில் ஏகாதிபத்தியவாதிகள் ஆர்வம் காட்டினர். ஜேர்மனி துண்டாடப்பட்டமை, இந்த சக்தி வாய்ந்த அரசினை யுத்தத்தின் பிந்தைய ஐரோப்பியக் கூட்டமைப்புக்குள் எப்படி இணைப்பது என்று குழப்பமான பிரச்சனைக்கு ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஒரு பதிலை வழங்கியது. மேலும் யுத்தத்தின் பிந்தைய அரசியல் தீர்வுகள் ஐரோப்பிய அரசுகளை கிழக்கு மேற்காகப் பிரித்ததோடு தொழிலாள வர்க்கத்தினை முள்ளுக்கம்பிகள், சீமேந்து சுவர்கள், கண்ணி வெடிகளைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமாக பிளவுப்படுத்தியது, இதுவே சோசலிசத்திற்கான போராட்டத்தினை மிகவும் கடினமாக்கிய அரசியல் காரணி என்பதை நிரூபித்தது.

18. உலக யுத்தத்தின் பின்னர் உடனடியாய் உருவான புரட்சிகர அச்சுறுத்தலை ஒடுக்கியதானது, ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சிக்கான மறு நிர்மாணத்திற்கு புதியதோர் அடித்தளத்தைத் தயாரிப்பதற்கான வாய்ப்பினை ஏகாதிபத்தியத்திற்கு வழங்கியது. அது இல்லாமல் ஏகாதிபத்தியம் ஒரு உலக அமைப்பு என்ற முறையில் உயிர் பிழைப்பது சாத்தியமாகியிராது. இங்கு அமெரிக்கா தீர்க்கமான பாத்திரத்தை வகித்தது. 1945-ன் பின்னர் அதன் மிகப்பெரும் தொழிற்துறை சக்தியையும் பரந்த அளவிலான பொருளாதார கையிருப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டு மேலாதிக்கப் பாத்திரத்தினை வகிக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு இருந்த வல்லமையானது, முதலாளித்துவ அரசுகளுக்கு இடையிலான சமநிலையைப் பேணும் தீர்க்கமான அரசியல் பொருளாதார நெம்புகோலை வழங்கியது. இது முதலாம் உலக யுத்தத்தின் முடிவில் உலக முதலாளி வர்க்கம் இட்டு நிரப்ப முடியாது நழுவிப்போனதாக இருந்தது. இரண்டு உலக யுத்தங்களுக்கு இட்டுச் சென்ற ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான கசப்பான போட்டியானது, இறுதியில் உலக ஏகாதிபத்தியத்தின் விவகாரங்களை நிர்வகிக்கும் சர்ச்சைக்கிடமற்ற நடுவராக அமெரிக்காவை தோன்றச் செய்தது. இது மார்ஷல் திட்டம், நேட்டோ மற்றும் அதனுடன் தொடர்புடைய ராணுவ உடன்படிக்கைகள், ஐக்கிய நாடுகள் சபை, பன்னாட்டு நிதியம், உலக வங்கி, சுங்கவரி வர்த்தகம் பற்றிய பொது உடன்படிக்கை போன்ற அரசியல் பொருளாதார நிறுவனங்களை ஏற்படுத்தியது. இவை போருக்குப் பிந்தைய உலக முதலாளித்துவம் உயிர் பிழைக்கவும், விரிவடைவதற்குமான அடித்தளத்தை வழங்கின.

[போருக்குப் பிந்தைய ஒழுங்குமுறையின் நெருக்கடி]