Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
wsws : Tamil
 
பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்கமும் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டமும்
Home
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10

 

 

 

பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்கமும் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டமும்

31. மிதவாத சீர்திருத்தவாதிகளையும் போலி சோசலிச சந்தர்ப்பவாதிகளையும் பொறுத்தமட்டில், யுத்தத்தின் பின்னர் ஐரோப்பிய சக்திகள் தமது பழைய காலனி ஆதிக்கத்திலிருந்து பின்வாங்கியமையும், குடியேற்ற நாடுகளுக்கு அரசியல் சுதந்திரம் வழங்கியமையும், முதலாளித்துவத்தின் தன்மையில் சாதகமானதும் அடிப்படையானதுமான மாற்றத்தினைப் பிரதிநிதித்துவம் செய்தது, இது பொருளாதார ரீதியில் முன்னேறிய நாடுகளுக்கும் "முன்றாம் உலக" நாடுகளுக்கும் இடையில் அதிக மனிதாபிமான, ஜனநாயக உறவுகள் ஏற்படுவதை விரும்பி-காலாவதியாகிப்போன, செல்வாக்கிழந்துவிட்ட அரசியல் ஆதிக்கத்தை கைவிடுவதைக் குறிப்பதாகும் என்றனர். இந்த பழைய அர்த்தமற்ற திணிப்புக்கள் பற்றிய கருத்து- ஏகாதிபத்தியம் என்பது திட்டவட்டமான பொருளாதாரத் தோற்றப்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டம் என்பதற்கு பதிலாக, அது வெறுமனே ஒரு கொள்கைதான் என்பது- நீண்ட காலத்திற்கு முன்னரே லெனினால் விஞ்ஞான ரீதியில் மறுக்க முடியாத வகையில் அம்பலப்படுத்தப்பட்டது.

காலனிகளுக்கு பெயரளவிலான சுதந்திரத்தை வழங்கியமையானது, ஏகாதிபத்தியத்தின் தன்மையில் எந்த மாற்றத்தினையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஆனால் நிதிமூலதனம் இந்த ஒடுக்கப்பட்ட நாடுகளில் தனது ஆளுமையைப் பிரயோகித்த அரசியல் வடிவங்களில் மட்டுமே மாற்றத்தினை ஏற்படுத்தியது. ஆபிரிக்கா, மத்திய கிழக்கு ஆசியாவினை ஊடறுத்துக் சென்ற காலனித்துவத்திற்கெதிரான வெகுஜன இயக்கத்தின் எதிரே ஏகாதிபத்தியவாதிகள், காலனித்துவ முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளுடன் ஒரு அரசியல் சமரசத்தினை செய்து கொள்ள தீர்மானித்தனர். தொழிலாள வர்க்கத்திற்கான அதிகார மாற்றத்தில் போய் முடியும் கட்டுப்படுத்த முடியாத புரட்சிகர எழுச்சியைவிட, ஏகாதிபத்தியத்தின் அத்தியாவசிய "ஒழுங்கான அதிகார மாற்றம்" விரும்பத்தக்கதாக விளங்கியது. இவ்வாறாக காற்றடிக்கும் திசைக்கு ஏற்றவாறு அவசியமான விதத்தில் ஒத்துப்போனது, போருக்குப் பிந்தைய உடன்படிக்கைகளின் முக்கியமான தந்திரோபாய அங்கமாகும். இதில்தான் புதிய ஏகாதிபத்திய சமநிலை தங்கி நின்றது.

32. பெயரளவிலான சுதந்திரம் பரந்த அளவிலான தொழிலாளர், விவசாயிகளுக்கு அவர்களின் சமூக நிலைமைகளில் முன்னேற்றத்தினைக் கொண்டு வரவில்லை. தேசிய முதலாளித்துவம், தமது நாடுகளை ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவோ அல்லது ஜனநாயகப் புரட்சிகளுடன் வரலாற்று ரீதியில் இணைந்த எந்த ஒரு அடிப்படைக் கடமைகளையும் நிறைவேற்றவோ தகுதியற்றது என்பதை நிரூபித்தது. எவ்வாறெனினும் தேசிய முதலாளித்துவ வர்க்கம், குளிர் யுத்தத்தால் (Cold War) வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, வெகு ஜனங்களிடையே தமது செல்வாக்கை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, தனது "ஏகாதிபத்திய எதிர்ப்பு" நற்சான்றுகளைப் பற்றிப் பிதற்றிக் கொண்டது. சோவியத் அதிகாரத்துவத்தின் ஆதரவினை வளர்த்துக்கொண்டதன் மூலம் தேசிய முதலாளி வர்க்கம், சிறப்பாக மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்திடமிருந்து சாதாரணமாக பெற்றுக்கொள்ளக்கூடியதைக் காட்டிலும் அதிக உதவியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. வியட்னாமில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை தொடர்ந்து அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் ஆளும் வட்டாரங்களில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு மூச்செடுக்கும் மேலதிக வாய்ப்பினை வழங்கியது. எவ்வாறெனினும் இந்நிலைமையானது, விசித்திரமானதும் இயற்கையாகவே ஆட்டம் கண்டு கொண்டிருந்ததுமான அனைத்துலக இணைப்பினை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் நின்று பிடிக்க முடியவில்லை. ஸ்ராலினிச, சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களின் முடிவில்லாத காட்டிக் கொடுப்புக்களின் தாக்கமானது, சர்வதேச தொழிலாளர் இயக்கத்தினை பெருமளவில் பலவீனமடையச் செய்தது இவை ஏகாதிபத்தியம் ஒடுக்கப்பட்ட நாடுகள் மேலான அரசியல் அழுத்தத்தினை உக்கிரமாக்குவதற்கான வாய்ப்பினை வழங்கியது. வியட்னாம் தோல்வியின் படிப்பினைகள் ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து இராணுவ கல்வி நிறுவனங்களிலும் கவனமாக ஆராயப்பட்டன. மல்வினாஸ் தொடர்பாக ஆர்ஜெண்டினாவுக்கு எதிரான பிரிட்டனின் யுத்தம் (1982). லெபனான் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் பெய்ரூட்டிலிருந்து பி.எல்.ஒ, வெளியேற்றப்பட்டமையும் (1982), அமெரிக்கா 1983லிருந்து ஈடுபட்ட வரிசைக் கிரமமான இராணுவ நடவடிக்கைகள் -லெபனானில் தலையீடு, கிரெனடா ஆக்கிரமிப்பு, லிபியா மீதான குண்டு வீச்சு, பனாமா மீதான ஆக்கிரமிப்பு இறுதியாக ஈராக்குக்கு எதிரான ஆக்கிரமிப்பு, - எல்லாமே மொத்தத்தில் ஏகாதிபத்தியம் ஒடுக்கப்படும் நாடுகளில் தனது நலன்களைக் காக்க பாரம்பரிய வழி முறைகளுக்கு திரும்புவதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. சோவியத் அதிகாரத்துவம் தனது நீண்டகால "வாடிக்கையாளர்களை" ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும், ஆசியாவிலும், இலத்தீன் அமெரிக்காவிலும் எரிச்சலுடன் கைகழுவி விட்டமையானது ஏகாதிபத்தியவாதிகள் கடைப்பிடித்த கட்டுப்பாடுகள், சமரசங்களுக்கான எல்லாக் காரணங்களையும் அகற்றிவிட்டது என்பதில் கேள்விக்கே இடமில்லை.

33. சர்வதேச சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய முதலாளி வர்க்க தலைவர்கள், தம்மைத் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க அனுமதிக்கும் வகையில் ஏகாதிபத்தியத்துடன் ஒரு உடன்பாட்டை செய்து கொள்ளும் ஆற்றொணா நிலையில் இருக்கிறார்கள். ஈராக்கிற்கு எதிரான தாக்குதலில் அராபிய ஆட்சியாளர்களின் பங்கேற்பு, தேசிய முதலாளி வர்க்கம் அரைக்காலனிய அடிபணிவு அந்தஸ்திற்கு ஏற்கனவே இணங்கிக்கொண்டு விட்டதைக் காட்டுகின்றது. "சுதந்திர" எகிப்தின் ஜனாதிபதி ஹாஸ்னி முபாரக்கைவிட, அமெரிக்காவில் பிறந்த காலனித்துவ நிர்வாகி ஒருவர் அதிக விசுவாசத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்ய முடியாது. தேசிய முதலாளி வர்க்கத்தின் அரசியல் கெஞ்சலுக்கு, இராணுவத் தாக்குதல் பற்றிய அச்சம் ஒரு பகுதிக் காரணமே ஆகும். இது ஏகாதிபத்திய முதலீடுகளின் மீது சார்ந்திருக்கும் ஒடுக்கப்படும் நாடுகளின் பொருளாதார சார்பின் நேரடி வெளிப்பாடாகும். இந்தியாவின் நேரு, இந்தோனேசியாவின் சுகர்னோ, கானாவின் நிக்ரூமா, எகிப்தின் நாசர் போன்ற முதலாளித்துவ தேசியவாதிகளால், சுதந்திரத்தின் ஆரம்ப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தேசிய தன்னிறைவு எனும் பாசாங்கு வேலைத்திட்டங்கள், நீண்ட காலத்திற்கு முன்பே திவாலாகிப்போய்விட்டன. தமது நாடுகளை சர்வதேச நிதி மூலதனத்தின் பிடியிலிருந்து விடுதலை செய்ய முயற்சிப்பதற்கு மாறாக தேசிய முதலாளி வர்க்கத்தினர், "சிறப்பு தொழில் வலயங்களை" நிறுவுவதற்காக கெஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றில் ஏகாதிபத்தியவாதிகள் பிராந்தியத்தின் இயற்கை மற்றும் மனிதவளங்களை தடையின்றி சுரண்ட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

34. ஒடுக்கப்பட்ட நாடுகள் ஒவ்வொன்றின் கதையும் ஒரே மாதிரிதான் இலத்தின் அமெரிக்காவில் பழைய முதலாளித்துவ தேசிய இயக்கங்களான -மெக்சிக்கோவின் PRI, பெருவின் APRA, ஆர்ஜெண்டினாவின் பெரோனிசம்- வோல்ஸ்ட்ரீட் வங்கிகளுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்வதற்காக மக்களை பட்டினி போட வைக்கும் பன்னாட்டு நிதியத்தின் நேரடி ஏஜெண்டுகளாக ஆகிவிட்டன. பெரோனிசத்தைப் பொறுத்தவரை, அதன் ஸ்தாபகர் முன்பொருமுறை முதலாளித்துவத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடையிலான "மூன்றாவது வழி" கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றார், அதனுடைய தற்போதைய பிரதிநிதியான ஜனாதிபதி கார்லோஸ்மெனம், திவாலாகிப் போன ஆர்ஜென்டினாவின் மூலதனத்திற்காக குவைத்தில் சில ஒப்பந்தங்கள் பெறவும் அல்லது பன்னாட்டு நிதியத்தை சாதகமாக்கிக் கொள்வதற்கும் நம்பிக்கையைப் பெறும் பொருட்டும், பாரசீக வளைகுடாவிற்கு போர்க் கப்பல்களை அனுப்பி வைத்தார்.

35. இடதுசாரி முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் மத்தியில் சில ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்பன இவற்றுள் -பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் (பி.எல்.ஒ), நிகராகுவாவின் சாண்டினிஸ்டா மற்றும் சிறிலங்காவின் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய ஒவ்வொன்றும் கடந்த காலங்களில் ஒரே மாதிரியான சரணாகதிப் பாதையைத்தான் கண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட பிற்போக்கு தேசிய பிரிவினைகளை தழுவிக்கொண்டும், வாஷிங்டன் உருவாக்கும் ஏதாவதொரு "சமாதான" திட்டத்திற்கு ஆதரவு தரும்பொழுது, அவர்கள் அனைவருமே ஏகாதிபத்தியத்தினின்று சுதந்திரம் பெறுதல் மற்றும் தேசிய சுயநிர்ணய உரிமை பெறுதல் ஆகிய மிக அடிப்படையான கடமைகளை கைவிட்டுவிடுகின்றனர், முதலாளித்துவ தேசிய வாதத்தின் மற்றொரு வகை என அம்பலமாகியுள்ள பிடல் காஸ்ட்ரோவின் அரசும் இவர்களுடன் சேர்ந்து கொள்கிறது. வளைகுடாப் போருக்கான தயாரிப்பின்போது, ஆக்கிரமிப்புக்கான அமெரிக்க ஏகாதிபத்தியப் போரை சட்ட ரீதியாக்கும் முக்கியமான தீர்மானத்தின்போது, கியூபாவின் பிரதிநிதி திரும்பத்திரும்ப விலகியே இருந்தார். தமது சோவியத் ரட்சகரின் ஆதரவை இழந்துள்ள நிலையில், காஸ்ட்ரோ அரசு தனது தேசிய சோசலிச நடிப்புக்களை நிலை நிறுத்த முடியாது என்பதைக் கண்டுகொண்டு, கியூபாவை ஏகாதிபத்திய உலக சந்தையுடன் திரும்ப ஒன்றிணைக்க விரைந்து செல்கின்றது.

36. தொழிலாள வர்க்கம், தேசிய முதலாளி வர்க்கத்தின் எந்த ஒரு பிரிவினரின் அரசியல் ஆளுமையின் கீழிருக்கும் வரையில், ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியாது. இந்த விதி எகிப்திய தொழிலாளர்களுக்கு பிரயோகிக்கப்படுவதற்கு எந்த விதத்திலும் குறையாத வகையில் ஈராக் தொழிலாளர்களுக்குப் பிரயோகமாகின்றது. சதாம் குசேனுக்கும் ஹாஸ்னி முபாரக்கிற்கும் உள்ள வேறுபாடுகள், கொள்கை சார்ந்த பண்பைவிட தந்திரோபாயம் சம்பந்தப்பட்டதாகும். ஏகாதிபத்தியத் தாக்குதலில் இருந்து ஈராக்கைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கம் கடமைப்பட்டுள்ள அதே வேளையில், அது சதாம் குசேன் ஆட்சிக்கு அணுவளவும் அரசியல் ஆதரவை அளிக்க முடியாது: குசேன் குவைத்தினை ஆக்கிரமித்தது, ஏகாதிபத்தியத்திற்கு ஒரு தாக்குதல் கொடுப்பதற்காக அல்ல; ஏகாதிபத்தியத்துடனான ஈராக்கிய முதலாளித்துவத்தின் பேரம்பேசும் நிலையைப் பலப்படுத்துவதற்கே ஆகும். அதே விதத்திலேயே குசேன் யுத்தத்தில் ஈடுபட்டார். அந்தப் போர் அவரது ஆட்சியின் அரசியல் முன்னுரிமைகளை அம்பலப்படுத்தியது. அவரின் மிகவும் அனுபவம் வாய்ந்த படையினர், ஏகாதிபத்திய படைகளுக்கு எதிராக அல்லாமல் தொழிலாள வர்க்கத்திற்கும் தேசிய சிறுபான்மையினருக்கும் எதிராக ஈராக்கிற்குள் பயன்படுத்தப்படுவதற்காக பின்னணியிலும், சேமிப்பு நிலையிலும் வைக்கப்பட்டனர்.

37. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தினால் சர்வதேச புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். நாட்டுக்கு நாடு சார்பாக எல்லைகளை மாற்றுவதன் மூலம் வெகு ஜனங்களின் சுதந்திரத்தினைத் தூக்கி வீசி, தேசிய அரசு முறையில் ஏகாதிபத்தியவாதிகளால் வரையப்பட்ட எல்லைகளை அழிக்க வேண்டும். அவை ஒடுக்கப்படும் நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்கு முற்றிலும் தடைக்கல்லாக உள்ளன. பொருளாதார ரீதியிலான மூடத்தனமான இந்த ஒட்டு வேலைகளுக்குப் பதிலாக, நான்காம் அகிலம் அரைக்காலனித்துவ நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தை இலத்தீன் அமெரிக்க, ஆசிய, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு ஐக்கிய சோசலிசக் குடியரசுகளை அமைக்கப் போராடுமாறு அழைக்கின்றது.

[சோவியத் அதிகாரத்துவத்தினை தூக்கிவீசலும் அக்டோபர் வெற்றியின் நலன்களை காத்தலும்