Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
wsws : Tamil
 
கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சி
Home
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10

 

 

 

கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சி

26. இறுதி ஆய்வுகளின்படி ஏகாதிபத்திய சமநிலையின் சரிவுக்குக் காரணமாக உள்ள அதே அடிப்படை முரண்பாடுகளே -உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு முறைக்கும் இடையேயான முரண்பாடுகளே- அனைத்து ஸ்ராலினிச ஆட்சிகளின் வெடித்துச் சரிதல்களுக்கும் காரணமாகும். கான்கிரீட் மதிற்சுவர்களோ அல்லது அரசினால் திணிக்கப்பட்ட ஊடுருவ முடியாத வர்த்தகத் தடைகளோ, உலகச் சந்தையின் அழுத்தங்களுக்கு எதிராக கிழக்கு ஐரோப்பிய பொருளாதாரங்களுக்கு தடுப்பு ஊசி ஏற்ற முடியவில்லை. ஸ்ராலினிச ஆட்சிகளின் சரிவுக்கான பொறுப்பினை மார்க்சிசத்தின்மேல் போடும் முயற்சிகள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய தேசிய அரசுகளில் சோசலிசத்தைக் கட்டி எழுப்புவதாக ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் குறிப்பிட்ட முந்தைய கூற்றுக்களைப் போன்றே மோசடியானவை. புரட்சிகர வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதினின்று விலகி, உலகச் சந்தையில் இருந்தும், உலக உழைப்புப் பிரிவினையிலிருந்தும் கிழக்கு ஐரோப்பிய அரசுகளை செயற்கையாகத் தனிமைப்படுத்துவதானது, பின்தங்கிய தேசியப் பொருளாதாரங்களுக்கும் உலக ஏகாதிபத்தியத்துக்கும் இடையே விநோதமான விதிமுறைகளை நிலைநாட்டும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கையாலாகாத தனமான முயற்சியை பிரதிநிதித்துவம் செய்கிறது. ஸ்ராலினிச போக்கிரிகளின் குழப்பமூட்டும் வீண்பேச்சை நீக்கிவிட்டு, அவர்களின் தேசிய பொருளாதார வேலைத் திட்டத்தினை ஆராய்ந்தால், நிஜ சோசலிச நிர்மாணத்திற்கு உலகப் பொருளாதார அபிவிருத்தியை தொடக்கப் புள்ளியாகக் கொள்ளும் மார்க்சிசத்திற்கு முற்றிலும் எதிரான கொள்கையே அவர்களது கொள்கை என்பதைக் காட்டும். கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளின் சரிவும், சோவியத் ருஷ்யாவில் ஸ்ராலினிச ஆட்சியின் வெடிப்பும், 1924-ல் இருந்து டிராட்ஸ்கிச இயக்கம், மார்க்சிச விரோத பிற்போக்கு வேலைத்திட்டமான "தனி ஒரு நாட்டில் சோசலிசத்துக்கு" எதிராகத்தொடுத்து வந்த சளைக்காத போராட்டத்தை மிகவும் சக்தி வாய்ந்த முறையில் ஊர்ஜிதப்படுத்துகிறது.

27. கிழக்கு ஐரோப்பிய, சோவியத்யூனியன் சம்பவங்கள் உலக முதலாளித்துவத்தின் சமநிலையின்மையை உக்கிரமாக்கியுள்ளன. கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் சரிந்ததைத் தொடர்ந்து, சர்வதேச முதலாளித்துவம் அளவிலா மகிழ்ச்சியடைந்தது. முதலாளித்துவம், தான் ஒரு பிரமாண்டமான வெற்றி கண்டுள்ளதாக நம்பியது. பொது நல மனோநிலையால் தூண்டப்பட்ட ஒரு கல்விமான் "வரலாற்றின் முடிவு வந்துவிட்டது" எனப் பிரகடனம் செய்தார். முதலாளித்துவ ஜனநாயகத்தின் வெற்றியை கற்பனை செய்வதைத் தவிர மனித இனத்துக்கு எதுவும் மிஞ்சவில்லை என்றார். இன்று மிகவும் எச்சரிக்கையான குரல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன, ஸ்ராலினிச ஆட்சிகள் விட்டுச் சென்றுள்ள அரசியல் பொருளாதார சீரழிவுகளை ஆய்வு செய்கையில் முதலாளித்துவ வர்க்கத்தில் உள்ள சிந்தனை மிகுந்த பிரிவினர், போருக்குப் பிந்தைய கிழக்கு ஐரோப்பா ஸ்ராலினிச ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது, உலக முதலாளித்துவத்தின் புனர்நிர்மாணத்திற்கு அது செய்துள்ள தீர்க்கமான பங்களிப்பினை நினைவுகூரத் தொடங்கியுள்ளனர், ஓட்டோமான். ஹப்ஸ்பேர்க் பேரரசுகளின் வீழ்ச்சியின் பின்னர் நீண்டகாலமாக அடக்கப்பட்டதும், தீர்வு காணப்படாததுமான தேசிய இன மோதல்கள் கிழக்கு ஐரோப்பாவையும் பால்கனையும் பற்றிப் படர்ந்துள்ளன. இவை சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் பழைய, இன்னமும் நச்சுத்தன்மை கொண்ட விஷத்தினை கக்கிக்கொண்டிருக்கின்றன.

28. பால்கன் பிராந்தியத்தில் இருந்து கிடைக்கும் சமகாலச் செய்திகள் -1930-ல் அல்லது 1910-ல் எழுதப்பட்டவை போன்று இருக்கின்றன. கொசோவாவின் தலைவிதியைப் பற்றிய போராட்டங்கள், சேர்பிய, குரோஷிய, சுலோவினிய, பொஸ்னியன் முஸ்லீம்களுக்கு இடையேயான மோதல்கள் பற்றியும், மசிடோனியரின் தேசிய அடையாளம் பற்றிய வரைவிலக்கணம் தொடர்பான தகராறுகள் பற்றிய அறிக்கைகளாலும் சர்வதேசப் பத்திரிகைகள் நிரம்பி வழிகின்றன. எல்லைத் தகராறுகள், தேசிய அரசுகளின் தேசிய இனக்கலப்பு பற்றிய மோதல்கள் ஒவ்வொன்றும் சர்வதேச ரீதியில் கூறுகூறாக வெடித்துச் சிதறும் (ஸிணீனீவீயீவீநீணீtவீஷீஸீ) அரசியல் தொடர் விளைவுகளை இயக்கும் சாத்தியக்கூறை உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றன, செக்குகளுக்கும் ஸ்லோவேனியர்களுக்கும் இடையிலான தகராறுகளை ஜேர்மனி, ஹங்கேரி, போலந்து மற்றும் உக்ரேனிய தேசியப் பிரச்சினைகளில் இருந்தும்கூட பிரித்துவிட முடியாது. ஹங்கேரியிலும் ருமேனியாவிலும் உள்ள தேசிய சிறுபான்மையினரின் அதிருப்தியானது, அவ்விரு நாடுகளுக்கும் இடையே யுத்தம் வெடிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது. யூகோஸ்லாவியாவிற்குள் வெடித்துச் சிதறும் தகராறுகள் இன்றைய அல்பேனியா, ருமேனியா, கிரீஸ் எல்லைகளின் ஸ்திரத்தன்மையை கேள்விக்குரியதாக்கியுள்ளன. கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் யூனியனுடைய தகராறுகள் பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் சதிகளில் தவிர்க்க முடியாத வகையில் சிக்க வைத்துவிடும், உள்ளூர்ப் போட்டிகள், பல்வேறு தேசியக் குழுக்களின் ஆரம்ப எதிர்பார்ப்புக்களைப் பொருட்படுத்தாமல், அப்பிராந்தியத்தில் ஏகாதிபத்தியவாதிகள் தமது சொந்த ஊடுருவலை விஸ்தரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

29. கிழக்கு ஐரோப்பிய நெருக்கடியானது, தேசிய அரசு முறையினை மற்றும் தேசிய சுயநிர்ணயத்துடன் தொடர்புடைய பிரச்சனைகளின் சர்வதேச நெருக்கடியை தெளிவான முறையில் எடுத்துக்காட்டியுள்ளது. முதலாளித்துவத்தின்கீழ் இவற்றுக்கு உண்மையான ஜனநாயகத் தீர்வினை காண முடியாது. முற்றிலும் ஓரின மக்கட்தொகையினரை உள்ளடக்கி வைக்க தேசிய எல்லைகளைத் திரும்பி வரையும் எண்ணமானது, ஒரு மோசடியான பிற்போக்கு கோமாளித்தனமாகும். ஆனால் முதலாளித்துவம் செல்வம், மூலவளங்களின் அநீதியான பங்கீடு பற்றிய மக்களின் கவனத்தைத் திருப்ப, அவர்களை தேசிய இனத்தகராறுகள் போன்ற முட்டுச் சந்துக்குள் தள்ளிவிடுகின்றது. தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தினைத் தடுக்கவும் வர்க்கப் போராட்டத்தின் வேகமான அபிவிருத்தியைத் தடுக்கவும், ஆளும் வர்க்கங்கள் ஏதோ ஒரு வகையான இனவாதத்தின் வீரர்களாக சேவை செய்ய ஆர்வம் காட்டும் குட்டி முதலாளித்துவ வாய்வீச்சுக்காரர்களை அமர்த்துகின்றது. அத்தகைய பிரச்சாரத்தின் வெற்றியானது, தேசியவாதத்தின் புத்திஜீவி மற்றும் ஒழுக்கநெறிப் பலத்தின் காரணமாக அமையவில்லை; மாறாக முதலாளித்துவ முறையின் நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான வழியைக்காட்டாத, தொழிலாள வர்க்கத்தின் பாரம்பரிய இயக்கங்களின் அடிபணிவினால் உண்டான அரசியல் இடைவெளியினாலேயே அமைகின்றது.

30. நான்காம் அகிலமானது, தேசிய சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை எங்கெல்லாம் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தைத் தூக்கி வீசவோ அல்லது எந்த ஒரு தேசிய இனக்குழுவின் ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுவதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவோ முற்றிலும் நியாயமானதும் முற்போக்கு விருப்பத்தினை வெளிக்காட்டுகிறதோ அங்கெல்லாம் அதற்கு உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் ஆதரவளிக்கின்றது. ஆனால் நான்காம் அகிலம், உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தில் அனைத்து தேசிய இனங்களையும் சார்ந்த தொழிலாள வர்க்கத்தினை ஐக்கியப்படுத்துவதன் மூலம் தனது ஜனநாயக வேலைத் திட்டத்தின் இந்த முக்கிய அம்சத்தினை நிறைவேற்ற முன் மொழிகிறது. இது தொழிலாள வர்க்கம். முதலாளித்துவ தேசியவாதத்தின் பிற்போக்கு வாய் வீச்சுக்காரர்களை ஒதுக்கித் தள்ளுவதையும், சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை சர்வதேச வர்க்க ஐக்கியத்தின் உலகளாவிய செய்தியுடன் முன்னெடுப்பதையும் குறிக்கிறது. இந்த வழியில் மட்டுமே தேசிய சுயநிர்ணயமானது, மனித இனத்தின் பொருளாதார, கலாச்சார அபிவிருத்தியில் எல்லா மக்களையும் சமாதான முறையில் ஐக்கியப்படுத்தும் ஒரு கருவியாக முடியும், 57 ஆண்டுகளுக்கு முன்னர் லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டது போல்: "தேசியப் பிரச்சினை எங்கும் சமூகப் பிரச்சினையுடன் இணைந்துகொள்கிறது. உலகத் தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே பூகோளத்தின் அனைத்து தேசிய இனங்களுக்குமான உண்மையானதும் உறுதியானதுமான சுதந்திரத்தை உத்தரவாதம் செய்ய முடியும்".

 [பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்கமும் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டமும்]