Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
wsws : Tamil
 
முதலாம் உலக யுத்தத்தின் தாக்கங்கள்
Home
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10

 

 

 

முதலாம் உலக யுத்தத்தின் தாக்கங்கள்

11. யுத்தத்தினைத் தொடுத்த எந்த ஒரு ஏகாதிபத்திய அரசாங்கங்களும் யுத்தத்தின் விளைபயன்களை முன் அறிந்து கொண்டிருக்கவில்லை. ஐரோப்பா இலட்சோப இலட்சம் பேரின் சவக்காடாக மாற்றப்பட்டது. இவர்கள் யுத்தத்தினால் அல்லது நோய்களால் அழிந்தனர். இறுதியில் பிரிட்டனும், பிரான்சும் ஜேர்மன் எதிரியின் வெற்றியாளர்களாக வெளிப்பட்டனர். ஆனால் அவர்களின் போலி வெற்றியின் பயங்கரச் செலவானது, அவர்கள் யுத்தத்தில் காக்கச் சென்ற எல்லா சாம்ராஜ்யங்களின் இறுதித் தோல்வியையும் உத்தரவாதம் செய்தது. யுத்தத்தில் பலப்படுத்தப்பட்ட ஏகாதிபத்திய சக்திகளாக அமெரிக்காவும் குறைந்த அளவுக்கு ஜப்பானும் தோன்றின. 1914க்கு முந்தைய ஐரோப்பாவில் பழைய அரசியல் மற்றும் சமுக சமநிலை சீர் செய்யமுடியாதவாறு சிதறுண்டு போயிற்று. போல்ஷிவிக்குகள் ரஷ்யாவில் ஆட்சியைக் கைப்பற்றியதானது, முதலாம் உலக யுத்தத்தின் தீக்கனவுக்குப் பொறுப்பான பொருளாதார அமைப்புடன் தொடர்புபடுத்துவதற்குக் கூட பயன்படுத்த முடியாத வார்த்தையான "முதலாளித்துவ நாகரிகத்தின்" உயிர் வாழ்க்கையையே கேள்விக்குரியதாக்கியது. தனது சொந்தக் குற்றங்களாலேயே ஒரு சமுதாயம் குற்றவாளி என்று கண்டனத்திற்கு ஆளாகியிருப்பின் அது உண்மையில் முதலாளித்துவத்தால் உண்டு பண்ணப்பட்டதே ஆகும். ஆனால் ரஷ்ய முதலாளி வர்க்கத்தைத் தூக்கி வீசிய கட்சியுடன் ஒப்பிடக்கூடிய ஒரு புரட்சிக் கட்சி மேற்கு ஐரோப்பாவில் எங்குமே இருக்கவில்லை. இதனால் ஆளும் வர்க்கங்கள் சமூக ஜனநாயக வாதிகளின் தீர்க்கமான உதவியுடன் சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தலை விரட்டியடிக்க முடிந்தது, ஆனால் அவை ஐரோப்பிய முதலாளித்துவம் மீட்சியும் விஸ்தரிப்பும் பெறும் வகையிலான ஒரு புதிய சமநிலை அடிப்படையை உண்டு பண்ணும் நிலையில் இருக்கவில்லை. கெயின்சின் (Keynes) வார்த்தையில் சொன்னால் யுத்தத்தில் இருந்து தலையெடுத்த ஐரோப்பா, ஒரு பைத்தியக்கார வீட்டினை ஒத்திருந்தது.

12. 1980களின் இறுதியில் யுத்தத்தின் பின்னைய நொருங்கக்கூடிய ஒழுங்கு முறையானது, நியூயோர்க் பங்குச் சந்தையின் சரிவுடன் அம்பலமாகியது. இது உலகளாவிய மந்தத்தின் தொடக்கத்தினைக் குறித்தது. சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தில் ஒரு திறமை வாய்ந்த புரட்சிகரத் தலைமை இருந்திருக்குமானால் சோசலிசப் புரட்சியின் வெற்றி ஐரோப்பா முழுவதிலும், இறுதியாக உலகிலும் உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் 1919ல் லெனினின் தலைமையில் நிறுவப்பட்ட கம்யூனிஸ்ட் அகிலம்,1930களின் தொடக்கத்தில் ஒரு பயங்கர சீரழிவுக்குள்ளாகியது. 'தனி நாட்டில் சோசலிசம்' என்ற பிற்போக்குக் கோட்பாட்டின் அடிப்படையில் ஸ்ராலின் தலைமையிலான சோவியத் அதிகாரத்துவம், கம்யூனிஸ்ட் அகிலத்தை உலக ஏகாதிபத்தியத்துடனான கிரெம்ளினின் இராஜதந்திர சூழ்ச்சிகளின் கருவி ஆக்கியது, ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மேல் கிரெம்ளின் கொண்டிருந்த பிடியானது வரிசைக்கிரமமான பேரழிவுகளுக்கு இட்டுச் சென்றது. எல்லாவற்றுக்கும் மேலாக 1933 ஜனவரியில் நாஜிக்கள் ஆட்சிக்கு வந்தனர். இந்த வரலாற்றுக் காட்டிக் கொடுப்பே ட்ரொட்ஸ்கியை நான்காம் அகிலத்தினை நிறுவுவதற்கான அழைப்பினை விடுக்கச் செய்தது. ஆனால் தனிமைப்படுத்தல்கள், ஸ்ராலினின் ரகசியப் போலீசாரல் மட்டுமன்றி, பாசிஸ்டுகளதும் இடைவிடாத கொலைகளின் நிலைமைகளின் கீழ் நான்காம் அகிலத்தினால் அப்பிற்போக்கின் அலைவீச்சை பின்வாங்கச் செய்ய முடியவில்லை. ஹிட்லரின் வெற்றியைத் தொடர்ந்து வந்த வருடங்களில் ஆஸ்திரேலிய, பிரெஞ்சு பாட்டாளி வர்க்கங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டமையும் இறுதியாக ஸ்பானிய பாட்டாளி வர்க்கம் காட்டிக் கொடுக்கப்பட்டமையும் இரண்டாம் ஏகாதிபத்திய உலக யுத்தத்தின் வெடிப்பிற்கான பாதையைத் திறந்தன.

[இரண்டாம் உலக மகாயுத்தம்]